வெளியேறிவிடாதீர்கள்
ஓர் பெரிய திருச்சபை ஊழியத்தை விட்டு 1986ம் ஆண்டு ஜான் பைப்பர் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டார். தன்னுடைய பத்திரிக்கையில் “நான் அதிகமாய் சோர்வடைந்துவிட்டேன்; மிகவும் குழப்பமடைந்திருக்கிறேன். ஒவ்வொரு திசையிலும் எதிர்ப்பாளர்கள் இருப்பதை உணர்கிறேன்” என்று அத்தருணத்தில் ஒத்துக் கொண்டார். ஆனால் பைப்பர் வெளியேறிவிட வில்லை. அவர் ஊழியம் செய்த சபையைவிட வளர்ச்சியடையும் ஓர் ஊழியத்தை அவருக்குத் தேவன் கொடுத்து அவரைப் பயன்படுத்தினார்.
வெற்றி என்றச் சொல் இலகுவில் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாகக் காணப்பட்டாலும் ஜான் பைப்பர் வெற்றி பெற்றார் என்றே நாம் கூறவேண்டும். ஆனால்…
மரக்குடிசையில் கூறும் கதைகள்
அந்தப் பழைய மரக்குடிசை கைகளினால் இழைக்கப்பட்ட மரக்கட்டைகளால் கட்டப்பட்டு இருந்தது. மாதந்திரப் பத்திரிக்கைகளில் முன்பக்க அட்டையில் போடக் கூடியது போன்ற மிகவும் அழகான குடிசையாக இருந்தது. அதன் வெளிப்புறம் அதனுடைய உண்மையான மதிப்பினை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை. அக்குடிசையின் உள்பக்கமாக அதனுடைய சுவரில், தொங்கவிடப் பட்டிருந்த அநேக விலை மதிப்புள்ள பொருட்கள் அக்குடும்பத்திற்கே சொந்தமானவைகளாகும். அவைகள் அனைத்தும் வீட்டில் உள்ளவர்களின் நினைவலைகளைத் தூண்டக் கூடியவைகளாக இருந்தன. மேஜையின் மேல் கைகளினால் பின்னப்பட்ட முட்டை வைக்கும் கூடை, பழங்கால பிஸ்கட் தட்டு, மேலும் ஓர் எண்ணெய் விளக்கு…
தண்ணீர் வெட்கிய போது
புகைப்படமும், வீடியோபடமும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார்? இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் அவர் வந்திருந்தால் அவருடைய படத்தைப் பார்ப்பதின் மூலம் அவருடைய போதனைகள் அநேக மக்களை சென்றடைந்திருக்கும், அல்லவா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட மிக முக்கியமானது.
“அப்படி இல்லை” என்று ரவி சகரியாஸ் கூறுகிறார்.
“ஆயிரம் படங்களை விட ஒரு வார்த்தை மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறுகிறார். அதற்குச் சான்றாக ரிச்சர்ட் கிராஷா என்ற கவிஞரின் மிகப் பிரபலமான வரிகளாகிய “தண்ணீர் அதன் எஜமானைப் பார்த்து…
பதுங்கி இருக்கும் சிங்கங்கள்
நான் சிறுவனாக இருந்தபொழுது, எனது தகப்பனார் புதர்களுக்குள்ளாக ஒளிந்து கொண்டு சிங்கத்தைப் போல் உறுமி எங்களைப் பயமுறுத்துவார். 1960களில் நாங்கள் கானாவின் கிராமப்புறங்களில் வசித்து வந்தோம். அப்பகுதியில் ஒரு சிங்கம் அருகில் பதுங்கி இருப்பது என்பது நடக்க முடியாத காரியமாகும். நானும், என் சகோதரனும் சிரித்துக் கொண்டு அந்த உறுமல் சத்தம் வரும் இடத்தை நோக்கிப் சென்று, ஒளிந்திருக்கும் எனது தகப்பனாரைக் கண்டு மகிழ்ச்சியடைவோம்.
ஒரு நாள் ஒரு இளம் வயதுடைய சிநேகிதி எங்களைப் பார்க்க வந்தாள். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, வழக்கமான…
முதன்மையானதை அலட்சியப்படுத்துதல்
பாதகமான காலநிலையால் ஐந்து முறை காலதாமதமான விண்கலம் “சாலஞ்சர்”. இடிமுழக்கம் போன்ற பேரிரைச்சலையும், தீப்பிளம்புகளையும் கக்கிக் கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது. அடுத்த 73 வினாடிகளில் ஏதோ குறைபாட்டினால் விண்கலம் வெடித்துக் சிதறி அதில் பயணித்த ஏழு விண்வெளி வீரர்களும் மாண்டு போயினர்.
இந்தப் பேராபத்து ‘0-ரிங்’ என்ற மிக மென்மையான பாகத்தை இறுக்க தாழிட்டு அடைக்கப்படாததால் ஏற்பட்டது என்று உள்ளிருந்தவர்கள் கூறினார்கள். பேராபத்தை உண்டாக்கிய நாச வேலையான அந்த தவறை “க்கோ ஃபீவர்” - அதாவது மாபெரும் சாதனையை படைக்க வேண்டும் என்ற உத்வேகத்தில்…
அரைகுறை அறிவு
இங்கிலாந்து அரசியல் நிபுணர் லான்ஸ்லாட் ஆலிப்ஃபன்ட் (1881-1961) “தேர்வுகளில் சரியாக விடையளிக்கும் அநேக மாணவர்கள் தாம் கற்ற பாடங்களைச் செய்முறையில் காட்டாததினால் தோல்வியடைகிறார்கள்” என்று “மொழி” என்ற தம் நூலில் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட அரைகுறையான அறிவு ஒன்றுக்கும் உதவாது” என்று ஆலிஃபான்ட் கூறுகிறார்.
பர்னபாஸ் பைப்பர் என்ற நூலாசிரியரும் தன் வாழ்க்கையில் அதற்கு இணையான கருத்தையே கூறுகிறார். “எனக்கு எல்லா பதில்களும் தெரியும், ஆகையால் நான் தேவனுடன் மிக நெருக்கமாக இருக்கிறேன் என்று எண்ணினேன். ஆனால், இயேசுவுடன் அதே உறவை வைத்திருக்கிறேன் என்ற எண்ணத்தினால்…
பரம்பரை சொத்தை விட்டுச் செல்லுங்கள்
ஒரு சாலைக் கட்டுமான மேஸ்திரி விபத்தில் மரித்துப்போன பொழுது, அந்த மனிதன் தன் குடும்பம், சக ஊழியர், சமுதாயத்தின் மீது வைத்திருந்த அன்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஓர் பேரிழப்பை உணர வைத்தது. அவனுடைய ஊர் தேவாலயமானது அடக்க ஆராதனையில் துக்கத்துடன கலந்து கொள்ள வரும் மக்களுக்கு இடம் போதாதபடியினால், ஓர் பெரிய கட்டடத்தில் அடக்க ஆராதனைக்கு ஒழுங்கு செய்தனர். நண்பர்களாலும், குடும்பத்தினராலும் அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது! அவனுக்கு உரிய தனித்தன்மையினால் ‘டிம்’ அநேகருடைய வாழ்க்கையைத் தொட்டிருந்தான். அவனுடைய அன்பு, நகைச்சுவைபடப் பேசும்…
ஓப்புரவாக்குதலின் ஊழியம்
1957ஆம் ஆண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் டாக்டர் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் பிரசங்கிக்கும் பொழுது, இனவாதத்தில் மூழ்கியிருந்த சமூகத்திற்கு பதிலடி கொடுக்கும்படி தனக்குள் எழும்பிய சோதனைக்கெதிராய் போராடினதை பிரசங்கித்தார்.
அப்பொழுது அலபாமா மாகாணத்தில் மாண்ட்கோமெரி (Montogomery) என்னும் இடத்தில், டெக்ஸ்டர் சாலை பாப்டிஸ்ட் சபையில் கூடியிருந்தோரைப் பார்த்து “உங்களுடைய சத்துருக்களை எப்படி நேசிக்கிறீர்கள்?” என்று கேட்டு “அதைப் உங்களிலிருந்து தொடங்குங்கள்… எப்படியெனில் உங்கள் எதிரியை தோற்கடிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, அப்படி செய்யாதிருங்கள்” என்ற பதிலை கூறினார்.
மேலும் அவர் இயேசுவின்…
தனிமையான காலம்
கிறிஸ்மஸ் முடிந்து வந்திருந்த அநேக தபால்களின் மத்தியில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டேன். அது பழைய உபயோகப்படுத்தப்பட்ட அட்டையில் வரையப்பட்ட ஒரு கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை. சாதாரண வாட்டர் கலரினால் வரையப்பட்ட குளிரான மலைப்பிரதேசமும், பசுமையான மரங்களும், கீழ்ப்பாகத்தின் நடுவில், சிவந்த பெர்ரி பழங்களுடன், ஹாலி இலைகளினால் ஆன கட்டத்துக்குள் “உனக்கு சமாதானம்!” என்று எழுதப்பட்ட செய்தியும் இருந்தது.
இதை வரைந்தவர் ஒரு சிறைக் கைதி. அவர் என்னுடைய நண்பர். அவருடைய கைவண்ணத்தை ரசித்தவாறே, அவருக்கு கடிதம் எழுதி இரண்டு ஆண்டுகள் ஆயிற்று என்பதை நினைவு…