மாறாத அன்பு
சமீபகாலத்தில் நான் மேற்கொண்ட விமானப் பயணத்தில் விமானம் தரை இறங்குவது சற்று கடினமாக இருந்ததினால், விமானம் ஓடுதளத்தில் ஓடினபொழுது, விமானத்திற்குள்ளிருந்த நாங்கள் அங்கும் இங்குமாக அலைக்கப்பட்டோம். சில பயணிகள் மிகவும் பயத்துடன் இருந்தார்கள். ஆனால் எனக்குப்பின் அமர்ந்திருந்த சிறுமிகள் “ஆம், நாம் மறுபடியும் முன்புபோல வலது இடதுபுறமாக அசைவோம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினபொழுது அந்த பயம் நிறைந்த சூழ்நிலை மாறிவிட்டது.
பொதுவாக குழந்தைகள் வாழ்க்கையில் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான செயல்களை ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடனும், எளிய திறந்த மனதுடனும் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். “சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” (மாற். 10:15) என்று இயேசு கூறினபொழுது, குழந்தைகளின் இத்தன்மையை மனதில் வைத்துதான் ஒருவேளை அவர் அப்படி கூறியிருக்கலாம்.
வாழ்க்கையில் சவால்களும், இருதயத்தை நொறுக்கக்கூடிய நிகழ்ச்சிகளும் ஏற்படலாம். “அழும் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் எரேமியா இதைக்குறித்து, நாம் அறிந்ததை விட அதிகமாக அறிந்திருந்தான். ஆனால் எரேமியாவின் கஷ்டங்கள் மத்தியில் “அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது”(புலம். 3:22–23) என்ற ஓர் ஆச்சரியமான உண்மையை அவனிடம் கூறி தேவன் அவனை ஊக்குவித்தார்.
நம்முடைய வாழ்க்கையில், தேவனுடைய புதிய கிருபைகள் எந்த நேரத்திலும் அருளப்படலாம். அவருடைய கிருபை எப்பொழுதுமே உள்ளது. ஆனால், தேவன் ஒருவரால் மட்டுமே செய்யப்படக்கூடிய காரியங்களுக்காக, சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்புடன், விழிப்புடன் காத்திருக்கும்பொழுது மட்டுமே அவரது கிருபைகளை நம்மால் பார்க்க இயலும். நமது உடனடியான சூழ்நிலைகளை வைத்து தேவனுடைய நன்மைத் தன்மையை விளக்க இயலாது என்றும், வாழ்க்கையின் மிகக்கடினமான பகுதிகளை விட அவருடைய உண்மை பெரிதென்றும் எரேமியா அறிந்திருந்தான். இன்று, தேவனுடைய புதிய கிருபைகளைத் தேடி கண்டுபிடியுங்கள்.
“நீ விண்ணப்பம் பண்ணினதினாலே”
நீங்கள் உங்கள் கவலைகளைக் குறித்து என்ன செய்வீர்கள்? அவற்றை உங்களுடைய உள்ளத்திற்குள் ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது பரத்துக்கு நேராக திருப்புவீர்களா?
சனகெரிப் எனும் கொடிய அசீரியா தேசத்து ராஜா, எருசலேம் பட்டணத்தை அழித்துப் போடும்படி ஆயத்தம் பண்ணுகையில் எசேக்கியா ராஜாவுக்கு, செய்தி அனுப்பி, பிற தேசங்களைக் கைப்பற்றினது போலவே யூதாவையும் கைப்பற்றுவேன் என்று அறிவித்தான். எசேக்கியா ராஜா, அச்செய்தி அடங்கிய ஓலையை எடுத்துக்கொண்டு, எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், “கர்த்தருக்கு முன்பாக அதை விரித்து” (ஏசா. 37:14), கர்த்தரை நோக்கி தங்களை இரட்சிக்கும்படி விண்ணப்பம் பண்ணினான்.…
மேலும் சிறப்பானது இனிமேல் தான் வர உள்ளது
உங்களது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்கள் கடந்த காலத்தில் இருந்ததா? அல்லது எதிர்காலத்தில் வரப்போகின்றதா? அந்தக் கேள்விக்குரிய பதிலும், வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டமும் காலத்திற்கு ஏற்றபடி மாறுபடும். நாம் இளவயதுடையவர்களாக இருக்கும்பொழுது, நாம், நமது வளர்ச்சியைக் குறித்து எதிர்நோக்குகிறோம். நாம் முதியவர்கள் ஆனபொழுது கடந்த காலத்தை வாஞ்சித்து மறுபடியும் இளமையானவர்களாக மாற விரும்புகிறோம். நாம் எந்த வயதுடையவர்களாக இருந்தாலும், தேவனோடு நடப்பவர்களாக இருந்தால், மேலும் சிறப்பான வாழ்க்கை இனிமேல் தான் வர இருக்கிறது.
மோசேயின் நீண்ட வாழ்நாள் காலத்தில் தேவன் செய்த அநேக அற்புதங்களை அவன்…
பரிசும் அதைக் கொடுத்தவரும்
அது வெறும் சாவிகோர்க்கும் சங்கிலிதான். அது ஐந்து சிறு மரத்துண்டுகளை ஒரு
ஷூ கட்டும் கயிற்றினால் இணைத்த ஓர் கொத்து. என் மகள் 7 வயதாக இருக்கும்பொழுது பல ஆண்டுகளுக்கு முன் அதை எனக்குக் கொடுத்தாள். இன்று அந்தக்கயிறு பழசாகி நைந்து போய், மரத்துண்டுகள் உடைந்துபோய் பழமையாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவை “அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்” என்ற செய்தியைக் கொடுத்து என்னை வசீகரித்துள்ளதால் அந்த செய்தி பழமையாவதே இல்லை.
ஓர் பரிசு எப்பேர்ப்பட்ட பரிசு என்பதில் அல்ல, அது யாரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது…
நல்வரவு
எங்கள் மகன் ஊதாரித்தனமாய் இருந்த காலக்கட்டத்தில், சபையில் ஆராதனை முடிந்து வெளியே வந்த சமயம், என்னுடைய நண்பர் ஒருவர் என்னைத் தனியே அழைத்து, “நான் உனக்காகவும் உன் மகனுக்காகவும் தினந்தோறும் ஜெபிக்கிறேன். ஆனால் எனக்கு குற்ற உணர்வு உள்ளது” என்றார்.
நான் ஏன்? என்றதற்கு.
“ஏனென்றால் ஊதாரித்தனமான பிள்ளைகளை சமாளிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. என் பிள்ளைகள் ஒரளவு ஒழுங்கு முறைகளுக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டார்கள். ஆனால் அது நான் ஏதோ செய்ததாலோ செய்யாததாலோ அல்ல. ஏனென்றால் பிள்ளைகள் தாங்களாகவே தீர்மானிக்கிறார்கள்” என்றார்.…
மறுமொழிக்காகக் காத்திருத்தல்
எங்களது மகள் 15 வயதாக இருந்தபொழுது வீட்டை விட்டு ஓடிவிட்டாள். 3 வாரங்களுக்கு மேலாக அவள் வரவே இல்லை. எல்லா இடங்களிலும் அவளைத் தேடிப்பார்த்தோம். பின்பு, காவல்துறையினரின் உதவியை சிநேகிதர்கள் ஆகியவர்களின் உதவியை நாடினோம். நம்பிக்கை இழந்து நின்ற அந்த நாட்களில், நானும் எனது மனைவியும் ஜெபத்தில் தேவனுக்கு காத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கற்றுக் கொண்டோம். எங்களது பெலனும் முயற்சிகளும் பயனற்று ஓர் நிலைக்கு வந்து விட்டோம். நாங்கள் தேவனையே நம்பி இருக்க வேண்டியிருந்தது.
ஒரு தந்தையர் நாளன்று அவளைக் கண்டு பிடித்தோம். இரவு…