உறுதியான நம்பிக்கை
வாசிக்க: எபிரேயர் 10:32-39
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (வ. 38)
இழப்பு, கடினமான சூழல், அலைச்சல் மற்றும் சுகவீனம் என்று ஒரு நீண்ட பருவத்தை தொடர்ந்து உள்ளமும் இதயமும் நொறுங்கியிருந்தது. இயேசு கிறிஸ்து தான் "மகா தேவனும் நமது இரட்சகரு(ம்)" (தீத்து 2:13) என்ற உறுதிப்பாடு என்னில் சிதயவில்லை என்றாலும், நமது அனுதின வாழ்வின் காரியங்களில் அவரை முழுவதும் நம்புவதை குறித்து எனக்கு அநேக கேள்விகள் எழும்பின.
இந்த நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், சபை மூப்பர்கள் எனக்காக ஜெபித்தபோது குறிப்பிடத்தக்க பலத்தையும் ஊக்கத்தையும் பெற்றேன். "தைரியத்தை விட்டுவிடாதிரு(க்க)"…
பயமூட்டும் கிருபை
வாசிக்க: 2 சாமுவேல் 6:1-23
தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி... (வ. 9).
ஆச்சரியமூட்டும் கிருபை என்ற பாடலில் வரும் இந்த வரிகளை என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? "இக்கிருபை என் பயம் நீக்கிற்று, பயப்படவும் கற்று கொடுத்தது. நான் விசுவாசித்த முதல் தருணமுதல் எவ்விலையேறப்பெற்ற கிருபையிது". உள்ளம் பயப்பட கிருபை கற்றுக்கொடுத்ததாம். பயப்படும் அளவிற்கு கிருபை பயங்கரமானதா?
தேவனின் உடன்படிக்கை பெட்டியை தாவீது மீண்டும் எருசலேமிற்கு கொண்டுவருகையில், இக்கேள்விகளுக்கான விடைகளை கண்டுகொண்டார். அது ஒரு பண்டிகை, இரைச்சலான கொண்டாட்டம், மனிதனின்…
யோபுவின் முரண்பாடு
வாசிக்க: யோபு 38:1-18
அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? (வ. 1-2)
ஞானி ஒருவர் ஒருமுறை, "மனப்போராட்டம் என்பது மேலோட்டமானது அல்ல, அடிவேரில் தான் அது அதிகமிருக்கும்" என்றார். யோபுவும் கூட இதனை ஆமோதிப்பதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. மனமடிவுண்டாக்கும் அழிவின் செய்திகளை பகுதிப்பகுதியாக கேட்டு அனுபவிக்கும் சூழலுக்கு அவர் தீடிரென்றும் கட்டாயமாகவும் தள்ளப்பட்டார். அவருடைய மிருகஜீவன்கள், வயல்வெளிகள், வேலையாட்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைத்தும் ஒரே நாளில் அழிந்தது.
இந்த கொந்தளிப்புக்கு மத்தியில், அவரது மனைவி தேவனை நிந்தித்து…
ஆனாலும் தேவன்
வாசிக்க: 1 சாமுவேல் 23:7-14
சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. (வ. 14)
விரக்தியில் இருந்த ஒருவர், ஒரு வேதாகம ஆசிரியரிடம், “என் வாழ்க்கை உண்மையில் மோசமான நிலையில் உள்ளது” என்று ஒப்புக்கொண்டார். "எவ்வளவு மோசம்?" என்று கேட்டார் ஆசிரியர். கைகளில் தலையைப் புதைத்துக்கொண்டு, அந்த நபர் "எவ்வளவு மோசமானது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு தேவனை தவிர வேறு எதுவும் இல்லை” என்று புலம்பினார்.
வாழ்க்கை தனக்கு ஒரு மோசமான நிலைமையை கொடுத்ததாக அந்த நபர் நினைத்தார். வேதாகமத்தில்,…
ஆண்டவரே! நீரேயானால்
வாசிக்க: மத்தேயு 14:22-36
ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும். (வ. 28)
ஒரு கிறிஸ்தவம் சாராத அமைப்பு ஆன்மீக சந்தேகங்களுடன் போராடும் மக்களுக்காக சிறப்பு அவசரகால தொலைபேசி இணைப்பை நிறுவியுள்ளது. இந்த உதவி மையத்தின் சரியான குறிக்கோள் சற்று தெளிவற்றதாகத் தோன்றினாலும், அதன் நிறுவனர் ஒரு காரியத்தை அவதானித்து, “கேள்விகளைக் கேட்கத் தொடங்கும்போது பலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது நிராகரிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள் .... சபைகள் சந்தேகிக்கும் நபர்களை [உதவிகள் மற்றும் ஐக்கியத்திற்காக] வரவேற்கத் தொடங்கினால், இந்த திட்டம் தேவைப்படாது" என்று சுவாரஸ்யமாக கூறினார்.
கடுமையான சந்தேகத்தின்போது…
ஏன்?
வாசிக்க: யோபு 13:14-28
ஏன் என்னை விட்டு விலகுகிறீர்? (வ. 24)
நான் ஒரு தேநீர்விடுதியில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில், இரு பெண்கள் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒருவள் வாலிப பருவத்தின் அழகோடு, கிரீம்களால் அலங்கரிக்கப்பட்ட பானத்தை பருகிக்கொண்டிருந்தாள். அவளுடைய ஷாப்பிங் பைகள் அவள் காலடியில் செல்லப்பிராணிகளைப்போல் அமர்ந்திருந்தன. மற்றொருவள், அதே வாலிப பருவம், ஆனால் கைத்தடி ஊன்றி தன் இருக்கைக்கு நகர்ந்து சென்றாள். தடிமனான பிளாஸ்டிக் வளையங்கள் அவள் கணுக்கால்களைப் பாதுகாத்தன. ஒரு பணியாளர் அவளது இருக்கையில் அவள் நகர்வதற்கு உதவ வேண்டியிருந்தது. நான் இரண்டு…
தேவனின் பதில்கள்
“நா ம் ஜெபிக்கையில் தேவன் எப்போதும் பதில் அளிக்கிறார்" என்பதுபோன்ற சில பிரபலமான வரிகள் உண்டு. சிலநேரங்களில் அவர் "இல்லை" என்றும், சிலசமயம் "பொறு" என்றும், சிலசமயம் "இல்லை" என்றும் பதிலளிக்கிறார். அவருடைய பதில்கள் எப்படிப்பட்டதாயினும், அவையே நமக்கு ஏற்றதாய் உள்ளன. இருப்பினும் சிலசமயங்களில் தேவனின் "ஆம்" அல்லது "இல்லை" என்கிற பதிலையும் தாண்டி நமக்கு அதிகம் தேவைப்படலாம்; நமக்கு விளக்கம் தேவை, அவரது இடைப்படுதல் தேவை.
உண்மையில் நிலைமாறும் இவ்வுலகில், நித்தியத்தை குறித்த நமது கண்ணோட்டத்தை இழக்கிறோம். வாழ்க்கையில் போராட்டங்களும் கொந்தளிப்புகளும் மேலோங்குகையில், நித்தம் பொங்கும்…

