ஒரு சில வழிகளில், ராஜாவின் கதை எங்கே துவங்கியதோ அங்கேயே நிறைவடைந்தது. தொலைக்கப்பட்ட பரதீசில் துவங்கிய கதை, அதை மீண்டும் சுதந்தரிப்பதில் நிறைவடைகிறது. ராஜா முன்னறிவித்ததுபோல, பொல்லாங்கனும் அவனுடைய தூதுவர்களும் பூமியிலிருந்து நிரந்தரமாய் அழிக்கப்படுவார்கள். தெற்கு தேசத்து பிரபுவை மேற்கொண்டதுபோல, கடைசி கால தொடர் சம்பவங்கள் மூலமாக, ராஜா தன்னுடைய எதிரியின் சேனையை முறியடிப்பார். எதிரியை முறியடித்த பின்னர், ராஜா தன்னுடைய மக்களோடு நிரந்தரமாய் வாழுவார்.

இந்த வாழ்க்கையில் தன்னை நம்புபவர்களுக்கு ராஜா என்ன ஆசீர்வாதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்பதை நம்மால் ஊகிக்க முடியாது. அவருடைய கடந்த காலத்தைப் போலவே எதிர்காலமும் பல வழிகளில் மர்மமாகவே இருக்கிறது. அவருடைய வருகையானது ஆச்சரியமான ஒன்றாய் இருக்கும் என்பதை மட்டுமே அவர் வாக்குப்பண்ணியுள்ளார். இப்போது வரையிலும் ராஜாவின் திட்டமானது எப்போதும் ஞானமுள்ளதாகவும் நன்மையானதாகவுமே இருக்கிறது. நம்முடைய ஜீவியத்தோடும், பயங்களோடும், மற்ற எல்லாவற்றோடும் அவரை நாம் நம்புவதற்கு உகந்த நியாயமான காரணம் நமக்கு இருக்கிறது.

இது நம்முடைய கதை. இது நம்மை நமக்கு யார் என்றும், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்றும், நாம் எங்கே செல்லுகிறோம் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. இது நம் ராஜாவின் சுதந்திரமான பிரபஞ்சத்தில் நம்முடைய தேர்ந்தெடுப்புகளைப் பார்க்க உதவி செய்கிறது.