அறிமுகம்

தியாகம் என்பது கிறிஸ்தவத்தின் மையக் கருப்பொருளாகும், இது இயேசு கிறிஸ்து சிலுவையில் செய்த இறுதி தியாகத்தில் வேரூன்றியுள்ளது. வரலாறு முழுவதும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களில் இது குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நம்முடைய சொந்த வாழ்க்கையில் தியாகங்களைச் செய்ய அழைக்கப்படுகிறோம். ஊழியங்களின் வாயில் மற்றவர்களுக்காக நம்முடைய சொந்த விருப்பங்களை விட்டுக்கொடுக்கவும், அல்லது நம் விசுவாசத்திற்காக உபத்திரவப்படவும் கூட அழைக்கப்படுகிறோம்.

தனிநபர் முக்கியத்துவத்தையும், சுய திருப்தியையும் எப்போதும் மதிக்கும் இவ்வுலகில் தியாகம் என்ற கருத்தைப் புரிந்துகொள்வது கடினம். இருப்பினும் கிறிஸ்தவர்களாகிய நாம், தியாகம் ஒரு சுமை அல்ல, மாறாக ஒரு பாக்கியம் என்றும் தேவன் மீதும் பிறர் மீதுமான நம் அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை என்பதையும் புரிந்துகொள்கிறோம்.

ஆபிரகாம் தனது சொந்த மகனைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தது முதல் சமூகக் களங்கம் மற்றும் அசாத்தியமான விளைவுகள் இருந்தபோதிலும் தேவனின் குமாரனைச் சுமந்த மரியாளின் விருப்பம் வரை, தங்கள் விசுவாசத்திற்காக பெரும் தியாகங்களைச் செய்த தனிநபர்களின் பல உதாரணங்களை வேதாகமம் முழுவதும் காண்கிறோம். விசுவாசம் மற்றும் தியாகம் ஆகியவற்றில் நமது சொந்த பயணங்களை நாம் மேற்கொள்ளும்போது இந்த உதாரணங்கள் நமக்கு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் செயல்படுகின்றன.

இந்த வாசிப்புத் திட்டத்தில், கிறிஸ்தவத்தில் தியாகம் என்பதன் அர்த்தத்தையும், இந்தக் கருத்தை நம் சொந்த வாழ்வில் அப்பியாசிப்பதற்கான வழிகளையும் ஆராய்வோம். வேதத்திலுள்ள தியாகத்திற்கான எடுத்துக்காட்டுகளை ஆராய்வதோடு, மேலும் அவை நமது சொந்த தியாகங்களை நமக்கு அறிவிப்பதையும் அவைகளுக்கு நம்மை எவ்வாறு ஊக்குவிக்க முடியும் என்றும் ஆராய்வோம். தியாகம் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கையில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய நமது புரிதலை ஆழப்படுத்த முயலும் இந்த பயணத்தில் எங்களுடன் சேருங்கள்.

banner image