எங்கள் அறையின் மூலையில் இருந்த அந்த சிறிய பஞ்சு பொதிந்த நாற்காலியில் அமர்ந்து அவர் சுவாசிப்பதை பார்த்துக்கொண்டிருப்பேன். வாழவும், சாகவும் ஒரே நேரத்தில் அவர் போராடிக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட காலத்திற்குப்பின் திருமண தம்பதியினரின் மூச்சும், இதய துடிப்பின் நாதங்களும் கூட ஒன்றிவிடுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மற்றவர்களுக்கு இது புரியாது ஆனால் இது உண்மையென்று உங்களுக்கும் எனக்கும் தான் தெரியும். சுவாசத்தை உள்ளிழுத்து, வெளியேற்றும் இடைவெளி, நீண்டு இனி இடைவெளியே இல்லை என்றானது. இனியும் வெளியேற எந்த சுவாசமும் இல்லையென்றபோது, நீண்ட காத்திருப்புக்கு முடிவும் வந்தது. உங்கள் இதய துடிப்பு நின்றது, உங்கள் மூச்சை பிடித்துவைக்க உங்களால் முடியவில்லை. என்னாலும் கூட தான். நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் அருகில் இல்லாவிட்டாலும்; உங்களுக்கும், அவர்களுக்கு பல மைல்கள் இடைவெளி இருக்கலாம், ஆனாலும் நீங்கள் உணர்வீர்கள்.

ஏப்ரல் மாதத்தின் மழைத்தூரும் ஒரு பிற்பகலில், சுவாசிக்கும் இடைவெளிகள் நீண்டுகொண்டிருக்க, மிகவும் சிரமத்தோடு மூச்சிவிட்ட இருபத்திரண்டு வருடமாய் என் துணையாயிருந்த கணவர் இறுதியாக சுவாசித்தார். நாங்களும் அவருக்கு பிரியாவிடை அளித்தோம். இப்பொழுது நானும் என் மூச்சைப்பிடித்து, வருடங்கள் உருண்டோடிய நினைவுகளோடு இதை எழுதுகிறேன். நீங்கள் எத்தகைய சூழ்நிலையில் இந்த கையேட்டை, இந்த பக்கத்தை, படிக்கிறீர்களோ என்று நான் அறியேன். ஏறக்குறைய உங்களை காண்கிறேன். நீங்களும் உங்கள் மூச்சைப்பிடித்து கொண்டிருக்கிறீர்கள். நாம் இருவரும் இப்போது ஒரே காரணத்திற்காக இந்த பக்கத்தில் இருக்கிறோம். உங்கள் வாழ்க்கைத் துணை இறுதியாக சுவாசித்துவிட்டார், இப்பொழுது நீங்கள் வேதனையோடு சுவாசிக்கிறீர்கள். ஆனாலும் திடன்கொள்ளுங்கள். ஏனெனில், வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வியாபியாகிய தேவ ஆவியானவர்; பிறப்பு, இறப்பு, சூழ்நிலை போன்ற வாழ்க்கை கணக்குகளையும் ஆளுகிறார். தேவனுடைய சுவாசம், அவருடைய ஆவியின் வற்றாத ஜீவநதி, உங்களுக்குள் தொடர்ந்து ஓடும். முடிவில்லா வேதனையின் விளிம்பில் உள்ள நீங்கள், இனியும் உங்கள் மூச்சைப்பிடித்து கொள்ள போராடாமல், மீண்டும் சுவாசிப்பீர்கள். நீங்கள் இனி நிம்மதியாக சுவாசித்து ஜீவிப்பீர்கள்; ஏனெனில் உங்கள் தேவன் உயிரோடிருப்பவர்களுக்கும், மரித்தவர்களுக்கும் தேவனாயிருக்கிறார்.

பத்திகளுக்கு கீழ் இழுக்கவும் அல்லது கீழ்க்காணும் சம்பந்தப்பட்ட இணைப்புகளை கிளிக் செய்யவவும்

banner image

“ஆறாம்மணி நேரமுதல்……..பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. — மாற்கு 15:33,37-38

சிலர் இதை கிழிக்கப்படுவதாக வர்ணிக்கின்றனர்; சரீரத்தை கிழிப்பது போல. சிலர் தங்களால் மூச்சுக்கூட விடமுடியவில்லை என்றும், சிலர் இரத்தம் நிற்காமல் கசிவது போலிருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு தெரியும். ஏனெனில் உங்கள் துணையும் கடந்துபோய்விட்டார். ஒரு கெட்டநாளின் சில நேரங்களில் மிக குறுகியதாய் ஆனால் நல்ல நாளில் சுகமாயிருந்த உங்கள் படுக்கை இப்போது அகண்டு விரிந்த சமுத்திரம் போலவும், ஆழ்ந்த பிளவை போலவும் தோன்றும்.

உங்கள் துணை இங்கே இல்லை, உங்கள் இருதயம் வறண்டு தரிசாயுள்ளது. முன்பு சிலர் இதை உங்களிடம் விவரிக்க முற்பட்டபோது உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் இப்பொழுது… இப்பொழுது தான் உங்களுக்கு புரிகிறது. உங்களை சுற்றிலும் இருள் சூழ்ந்துள்ளது.

இயேசுவின் இறுதிமூச்சில், அடங்காது எதிர்க்கிற மரண அனுபவத்திற்கு தம்மை ஒரு நோக்கத்தோடு ஒப்புக்கொடுத்தார். இப்போது நீங்கள் உயிர்வாழ எடுக்கும் சிறந்த முயற்சிகளுக்கு எதிராக மரணம் கொக்கரிக்கலாம், ஆனால் மரணம் ஜெயிக்கவில்லை. உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையேயிருந்த திருமண ஒப்பந்தம் இரண்டாக கிழிக்கப்பட்ட போதிலும், அந்த இருண்ட நாளை வெளியேற்றிய அதே அன்பு தான் இன்றைக்கு உங்களுக்கும், எனக்கும் இரட்சிப்பின் புதிய உடன்படிக்கையை முத்திரித்தது. அவர்களுடைய மரணம் ஒரே நேரத்தில் உங்கள் புலன்களை உணர்வற்றதாகவும், கொழுந்து விட்டெறியவும் செய்கிறது.

புதிய உடன்படிக்கையை குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார், “அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.”
(ரோமர் 8:3)

ஆனால் எல்லாவற்றையும் விலைக்கிரயம் செலுத்தின உடன்படிக்கையின் அன்பு, நிரந்தரமாய் இழந்ததாக தோன்றிய அனைத்தையும் மீட்டு தந்தது. இப்பொழுது உயிரற்ற தொடுவானம் போலத் தோன்றும் துக்கத்தின் தரிசு நிலமும் புனிதக்கனிகளை முளைப்பிக்கும். ஆகையால் தான் திருமணம் தற்காலிகமாய் இருந்தாலும் அது குறிக்கும் மெய்ப்பொருள் நித்தியம்.

உங்கள் நினைவுகளின் கண்ணாடியை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் உங்கள் திருமணம் உண்டாக்கிய மதிப்பும், மகிமையும் தான் பிம்பமாய் தோன்றும். இப்பொழுது உங்கள் வேதனை “மரணம் நம்மை பிரிக்கும் மட்டும்” என்பதின் ஒரு தற்காலிக பகுதியே, ஆனால் மரணத்தின் மேல் ஜெயம் என்பதுதான் நித்திய உண்மையாய் இருக்கிறது. தேவனுடைய மாறாத உடன்படிக்கையை மரணம் வென்று விட்டதோ என்று எண்ணுகிற உங்கள் வேதனையின் இருளிலே, இந்த உண்மை ஒளியேற்றுகிறது. ஏனெனில் “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்.” (யோவான் 12:24), என்பதில் தேவன் பதிலுக்கு மரணத்தின் கற்பனையான, போலி வெற்றியையும் வென்றெடுத்தார்.

இப்பொழுது உங்கள் திருமணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியை மீண்டும் பாருங்கள். அங்கே மரணமே இறுதியானது என்று நீங்கள் கருதின உயிரற்ற தொடுவானத்தை உடைத்தெறிந்து, புதிய வாழ்க்கை, மிகுதியாய் உங்களுக்காக விளைகிறது.

திருமணம் என்பது ஒருவரின் ஆக்கிரமிக்கும் அன்பிற்கு மனமுவந்து அடிபணிவது. இது ஆக்கிரமிப்பு தான், காரணம் இது உடன்படிக்கையின் வாக்குதத்தங்களால் கட்டப்பட்டுள்ளது. ஒரு “பரிமாற்றம்” நடைபெற வேண்டும் என்பதே அதின் அர்த்தம். இது ஒரு மர்மமாக இருப்பினும் ஒரு பலி செலுத்தப்பட வேண்டும், பலி செலுத்த இரத்தம் வேண்டும். ஆகவே தான் திருமண பலிபீடம் என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை.

திருமண உடன்படிக்கை, உறவை உறுதி செய்கிறது. உடலும், உள்ளமும் ஒன்றாகி, உடன்படிக்கையின் பங்காளர்களை இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஒன்றிணைக்கிறது. அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள் (ஆதியாகமம் 2:24) என்பதே இவ்வுடன்படிக்கையின் சாரம்சத்தை சித்தரிக்கிறது. இது இப்படி இருப்பது ஏனென்றால், தேவன்தான் இந்த .உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார். அதின் பொருள், பேரழிவுண்டாக்கும் கிளர்ச்சிகளும், வேதனைகளுமன்றி இவ்வுடன்படிக்கை உடையாது. இரு வேறு நபர்களின் அன்பை ஆச்சரியமாக ஒன்றிணைக்கும் பசையாக தேவன் இங்கே இருப்பதை பாருங்கள். பூமிக்குரிய திருமணம் கிறிஸ்துவுக்கும், அவர் மணவாட்டிக்குமான உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறது.. மரணத்தின் கொடூரம் அந்த பிரதிபலிப்பை புறக்கணித்துவிட்டது.

உங்கள் இழப்பு இவ்வளவாய் உங்களை வேதனைபடுத்துவதற்கு இந்த உடன்படிக்கையின் ஆழமும் ஒரு காரணம்; மாறாததும், அழியாததுமாக தோன்றியது, இன்று இரண்டாக கிழிந்துவிட்டது. 

உங்கள் துயரம் சொல்லொண்ணா வேதனையுடையது, ஆகவே அதற்கு புனிதமான மறுமொழி தேவை. ‘துயரம்’ என்பது உங்கள் நிலையை விவரிக்கவோ, அடக்கவோ சரியான வார்த்தை அல்ல. அதுபோலவே, நமக்காக பலியான இயேசு, சொல்லொண்ணா துயரப்பட்டார், அவருடைய வேதனையையும் வார்த்தைகளால் விவரிக்கவோ, அடக்கவோ இயலாததால், அவருக்கும் புனிதமான மறுமொழி தேவைப்பட்டது.
ஆனால் மரணம் அல்ல தேவன்தான் இங்கு சட்டங்களை இயற்றுகிறார்.

நடுங்கத்தக்கதும், அழிவின் அடையாளமாயும் எண்ணப்பட்ட தேவாலயத்தின் கிழிந்த திரைச்சீலை இப்போது துயரப்படுகிற விசுவாசிக்கு ஆறுதல் அளிக்கிறது. காரணம், கிழிந்த அந்த தேவாலயத்தின் திரைச்சீலை போலவே, துயரம் உண்டாக்கும் வெறுமையின் பிளவுகள் அவருடைய பரிபூரணத்தால் நிரப்பபடும். உங்கள் கிழிந்த இருதயம் குணமாக அவருடைய இருதயம் கிழிக்கப்பட்டது. திரைச்சீலையை கிழித்து, கல்லறையை திறந்து, இயேசுவை உயிரோடு எழுப்பின அதே வல்லமை, இப்போது கல்லறையாய் போன உங்கள் இதயத்தையும் திறந்து, அதில் மரித்ததாய் தோன்றுபவைகளை உயிரடையச்செய்யும்.

நம் இராஜா மரணத்தை நேருக்கு நேர் சந்தித்தார், போட்டியின்றி ஜெயித்தார். ஆட்டுக்குட்டியானவருடைய கொலையுண்ட சரீரம் மரணத்தின் முகத்திற்கு நேரே உயிர்ப்பிக்கப்பட்டு, அதின் வாயை என்றென்றைக்கும் அடைத்தது.

அன்பு கிழிக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இயேசு அறிவார். அந்த இராவிருந்தில் தன் சீடர்களுடன், தன் இரத்தத்தினாலே ஒரு பரிமாற்றத்தை செய்தார். ஆகவே நானும் நீங்களும் எப்படிபட்ட பாடுகளை அனுபவிக்கிறோமோ, அதை அவரும் அனுபவித்து வென்றிருக்கிறார். அந்த நாளில் திருமண பலிபீடத்தில் ஏற்பட்ட உடன்படிக்கை போலவே, இயேசுவும் பிதாவை நோக்கி நாம் அவரோடு ஒன்றாய் இணைந்திருக்கும்படி வேண்டிக் கொண்டார் (யோவான் 17:21). ஆனால், இயேசு மரண இருளிருந்து உயித்தெழுந்தார், ஆகவே நீங்களும் எழ முடியும்.

இப்போதும் கூட, ஒரு பாடல் தொலைவில் கேட்கிறது. அது உங்கள் பாடல் தான். அதின் இன்னிசையை உங்களால் கேட்க முடியாவிட்டாலும் அதின் வார்த்தைகள் நீங்கள் அறிவீர்கள் “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது. மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1 கொரிந்தியர் 15:54-55). அது அனைத்தையும் மாற்றுகிறது.

banner image

துயரம் அநேக கேள்விகள் கேட்கிறது. அது தன்னிடம் இல்லாத ஒன்றுக்காய் ஏங்குகிறது: அது உங்கள் அன்புக்குரியவர். அவர்கள் இந்நேரம் இங்கிருந்தும், அவர்களை காணாவிட்டால், அவர்களை அடையும்வரை உங்கள் தேடல் அமைதியற்றிருக்கும். இது உங்கள் துக்கத்திற்கும் பொருந்தும். உங்களுக்கு அவர்களுடைய அரவணைப்பு தேவை, உங்களுக்கு பதில்கள் தேவை. ஏன் என்று உங்களுக்கு தெரிந்தாக வேண்டும். தெரியாது என்ற பதில் போதுமானதாக இருக்காது, காரணம் நீங்கள் அறிந்தபடி துயரம் சாதாரண மொழி அல்ல, அது சாதாரண பதில்களில் திருப்தி கொள்வதில்லை. தெரியாது என்பது அதை திருப்தியாக்காது… ஒருவேளை திருப்தி செய்யலாம்.

நரம்பியல் நிபுணர், என் கணவரின் நோயை குணமாக்க கூடாமல் போனபோது, நங்கள் அனைவரும் ஒரு இனம் புரியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். கிட்டத்தட்ட தொடர் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபின் திடீர் அமைதியில் நள்ளிரவில் ஏற்படும் நிசப்தம் போல, அது எங்கள் வாழ்வில் திடீர் வெறுமையை ஏற்படுத்தியது. ஆழமான இழப்பில் சத்தமில்லாமல் கூச்சலிடுவது போலிருந்தது. நான் அறியாத ஒன்று என்னையே இரக்கமில்லாமல் முறைத்துப் பார்த்தது கொண்டிருந்தது. நான் அதை தாக்ககூட ஆசைப்பட்டேன். ஒரு வார்த்தை என் மனதில் இரவும், பகலுமாய் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் என்னை சுற்றிலும் ‘தெரியாதவைகளை’ தவிர எதுவுமில்லை.
செய்தி வேகமாக பரவியது, அடுத்த மாலை எங்கள் வீட்டைநோக்கி வாகனங்கள் படையெடுக்க, அந்த தெருவே கார்களால் வழிந்தது. அந்த இரவு எவ்வளவு நண்பர்கள் வந்தார்களோ தெரியவில்லை. ஆனால் எங்கள் சிறிய வீட்டில் அனைவரையும் அடைத்தோம். அந்த கரிசனை மறக்கமுடியாதது. இரவெல்லாம் அழுதோம், மகிழ்ச்சி தூரமானது, ஆனாலும் துக்கத்தோடு தேவனை ஆராதித்து, நாங்கள் குணமாகும்படி வேண்டிக்கொண்டோம். எங்கள் மகன் சாமுவேலும் அவன் நண்பனும் கிட்டார் வாசித்து எங்களை ஜெபத்திலும், ஆராதனையிலும் கிருபாசனத்தண்டை நடத்தினார்கள். எங்கள் பத்தே வயதான மகன் பெஞ்சமின் கூட தன் கைகளை உயர்த்தி தேவ இரக்கத்திற்காக பாடினான்.
எல்லாரும் “ஆமென்” சொல்லி களைந்த பின்னர், பெரும் நிசப்தம் அறையை நிரப்பியது, நாங்கள் இன்னும் வெறுமையாகவே உணர்ந்தோம். நாங்கள் தொடர்ந்து ஜெபிக்க தேவன் எங்களை உணர்த்தினார். நேரம் கடந்திருந்தது, நாங்கள் மிகவும் களைப்படைந்திருந்தோம் ஆனாலும் எங்களை தாழ்த்தி ஜெபித்தோம். அப்பொழுது எனக்கு பிரியமான தோழி “சூசன் நாம் மீண்டும் ஜெபிக்க வேண்டும் என்று நினைக்கிறேன், காரணம் தேவன் ஏதோ ஒன்று சொல்ல வேண்டுமென்கிறார், அவர் உன்னிடம் ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறார், அவர் உன்னுடைய தெரியாதவைகளின் வாய