சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது 42 வருட அன்பு மனைவியை இழந்த பின்பு நீண்ட நெடிய துக்கத்தை அனுபவித்தார். அவரது மனைவி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தபோதும், அதைத் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டபோதும் அவரை உண்மையாக நேசித்த பலர் ஆறுதல் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அவருடன் துணைநின்றனர். ஓர் குறிப்பிட்ட காலம் கழித்து, ஓர்நாள் நான் அவரிடம் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, அவருடைய பதில் என்னை சிந்திக்க வைத்தது. அவரது பதில், “துக்கம் அலைகளில் வருகிறது.” அலைகள் மேலே உயர்ந்து தாழ்வதுபோல், துக்கமும் மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக பாய்கிறது. சில சமயங்களில் நாம் நன்றாக இருப்பதாக உணரலாம், ஆனால் மற்ற நேரங்களில் அவை திடீரென்று நம்மீது படர்ந்து நம் உணர்ச்சிகளைக் கையாள்வதை கடினமாக்கிவிடும். துக்கம் என்பது நேசிப்பவரின் இழப்புடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. நீங்கள் விரும்பும் ஒன்றை இழக்கும்போதும் அதனை அனுபவிக்கலாம். இவை ஓர் நீண்ட நாள் கனவாக இருக்கலாம், முறிந்த திருமணமாக இருக்கலாம், நீங்கள் நிறைய முதலீடு செய்துள்ள வேலையை இழக்க நேரிடலாம் அல்லது ஓர் முட்டுக்கட்டை அடைந்த நட்பாக இருக்கலாம். துக்கம் உண்மையில் அலைகளில் வருகிறது.

இயேசு துக்கத்தைப் புரிந்துகொண்டார், அவருடைய நண்பர் லாசருவின் கல்லறையில், “இயேசு அழுதார்” (யோவான் 11:35) என்று வேதாகமம் பதிவு செய்கிறது. இது சுவாரஸ்யமானது, ஏனென்றால் லாசருவை மரித்தோரிலிருந்து எழுப்புவதன் மூலம் அவர் நிலைமையை மாற்றியமைப்பார் என்று இயேசு அறிந்திருந்தாலும், அவர் இன்னும் அழுதார். இதே இயேசுவுக்கு நம் வலியும் புரியும்! நாம் துக்கத்தின் வழியாகச் செல்லும்போது, நாம் வெட்கப்படவேண்டியதில்லை அல்லது தைரியமான முகத்தை வெளிப்படுத்தவேண்டியதில்லை – இயேசு புரிந்துகொள்வார். கிறிஸ்துவின் சரீரம் வேறொருவருடன் துக்கப்படுவதோ அல்லது துக்கத்தை அனுபவிப்பதோ என்றல்லாது இயேசுவே துக்கத்தின் வழியாகச் சென்றது போன்ற ஓர் பொருத்தமான பதிலை நாம் நினைவில்கொள்வது நல்லது. எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளில் செல்பவர்களுக்கு, அழுவதற்கு தோள்பட்டையாகவும், பிடித்துக்கொள்ள கரமாகவும் இருப்போம். இந்த எளிய அன்பின் செயல்கள் துக்கத்தில் இருப்பவர்களிடம் எந்த வார்த்தைகளையும்விட அதிகமாக பேச முடியும்.

தி எட்ஜ் ஆஃப் தி அபிஸ்

நான் பள்ளத்தின் விளிம்பில் தனியாக அமர்ந்திருக்கிறேன், நான் இனி அந்நியன் அல்ல
அதன் மை இருளுக்கு, அதன் உடையாத அமைதி
நான் உன்னை வரும்படி வற்புறுத்தமாட்டேன், ஆனால் நீ வந்தால், வார்த்தைகளை பேசாதே, ஒரு கிசுகிசுப்புகூட பேசாதே, அமைதியாக இரு
என் நடுங்கும் கையை நீட்டி பிடித்துக்கொள்
என் நடுங்கும் தோள்களைச் சுற்றி ஒரு கையை வைக்கவும்
மற்றும் அனுபவம், சில சிறிய அளவில், மனித துன்பத்தின் ஆழம்
இது ஒரு மர்மம்
இது ஒரு சடங்கு,
அதன் ஆழ்ந்த ஆன்மீகம்
என் உடைந்த இதயத்தை நீங்கள் காணலாம்
ஆயிரம் துண்டுகளாக உடைந்தது
அந்த தருணத்தில், துக்கத்தில் ஒன்றுபட்டது, மனிதனின் அனைத்து புரிதலையும் மீறி
அருளையும் ஆறுதலையும் காண்கிறோம்
நாம் ஒன்றாக, ஒன்றாக, படுகுழியின் விளிம்பில் உட்கார்ந்து

-நோயல் பெர்மன்

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரேனும் ஒருவர் துக்கத்தில் இருந்தால், இந்தத் தொகுப்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இதனால் அவர்கள் பயன்பெறலாம்.


 

| நாள் 1: துக்கத்தின் பருவங்கள்

கடந்த ஆண்டு சில மணிநேரங்களில் எனக்கு இரண்டு சோகமான செய்திகள் கிடைத்தன. அன்பு நண்பர் ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி முதலில் வந்தது. 60 வயதான ஸ்டீவ், இயேசுவையும் அவருடைய…

மேலும் வாசிக்க

 

| நாள் 2: நம் அனைவருக்காகவும் கண்ணீர் சிந்துவது

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, குளிர்காலத்தில் ஜெனரல் ஸ்டோன்வால் ஜாக்சன் தங்கியிருந்த ஓர் வீட்டிலிருந்த சிறுமியுடன் நட்பு கொண்டார். ஐந்து வயதான ஜானி கார்பின் ஜாக்சனை மிகவும் நேசித்தார் …

மேலும் வாசிக்க

 

| நாள் 3: அறியாத இருட்டினுள்

இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், நாஜி படுகொலையில் இருந்து 669 குழந்தைகளை மீட்ட ஓர் மனிதர் – செக்கோஸ்லோவாக்கியாவி-லிருந்து தப்பிச் செல்லும் ரயிலில் இரண்டு யூதச் சிறுவர்களுக்கு உதவினார். போர் முடிந்த பின்பு, வதை முகாமில் இறப்பதற்கு முன்னர் பெற்றோர்…

மேலும் வாசிக்க

 

| நாள் 4: நித்திய அன்பு

நண்பர் ஒருவர் அவரது மனைவி மற்றும் பல குழந்தைகளை விட்டுவிட்டு எதிர்பாராதவிதமாக இறந்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு அவரது விதவையான மனைவுயுடன் (அன்புள்ள நண்பரும்) பேசினேன். அவள் மனம் …

மேலும் வாசிக்க

| நாள் 5: தரிசு இடங்களிலிருந்து வாழ்க்கை

எனக்கும் என் மனைவிக்கும் தெரிந்த ஏராளமான நண்பர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள போராடியிருக்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களுக்கான பல பயணங்கள், பல்வேறு வகையான கருவுறாமை நடைமுறைகள்…

மேலும் வாசிக்க

 

| நாள் 6: தேவையில் ஒரு நண்பர்

என்னுடைய சில அன்பான நண்பர்கள் 8 வார வாழ்க்கைக்குப் பிறகு தங்கள் சிறுவன் ரஃபேலை இழந்தனர். என் இதயம் அவர்களுக்காக உடைந்து, ஆறுதலாய் இருக்க ஆசைப்பட்டாலும், அவர்களின் வலியை எப்படிக் குறைப்பது …

மேலும் வாசிக்க

 


உங்கள் இன்பாக்ஸில் தினசரி மின்-தின தியானங்களைப் பெற விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து பதிவு செய்யவும்!
இங்கே பதிவு செய்யவும்