அவர் என்னை மகிமைப்படுத்துவார். யோவான் 16:14

இன்றைய பெரும்பான்மையான தேவபக்தியுள்ள இயக்கங்களில் புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகளோ இயேசு கிறிஸ்துவின் மரணம் பற்றிய சிந்தையோஎதுவும் இல்லை; அவர்களுக்குத் தேவையானது ஓர்தேவபக்தியுள்ள சூழ்நிலையில், தியானம் மற்றும் ஜெபம். இந்த வகையான அனுபவம் அசாத்தியமானதோ அல்லது அதிசயமானதோ அல்ல; இவை தேவனுடைய வாஞ்சையையோ, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்க்கப்பட்டதையோ, பரிசுத்த ஆவியின் முத்திரிக்கப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு நடப்பதையோ நோக்கவில்லை. மனிதர்கள் பிரமித்து ஆச்சரியமடையும் தருணங்களில் “இவை எல்லாம் வல்ல தேவனின் செயல்” என்று சொல்ல வைக்கும் சூழல் அதில் இல்லை. இது போன்றதான காரியம் எதுவும் புதிய ஏற்பாட்டில்சொல்லப்படவில்லை.

தனிப்பட்ட கிறிஸ்தவ நபருக்கும் இயேசு கிறிஸ்துவுக்குமான உணர்ச்சிபூர்வமான பக்தி அனுபவமே புதிய ஏற்பாட்டில் வகையறுக்கப்பட்டுள்ளது.. மற்ற எல்லா வகையான கிறிஸ்தவ அனுபவங்கள் என்றழைக்கப்படும் அனைத்தும் இயேசுவிடமிருந்து பிரிக்கப்பட்டவையே. அங்கே மறுவுருவாக்கமோ, கிறிஸ்து வாழும் ராஜ்யத்தில் மீண்டும் பிறப்பதோ இல்லை; ஆனால் அவர் நம் முன்மாதிரி என்ற எண்ணம் மட்டுமே. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து மாதிரியாக இருப்பதற்கு முன்பே அவர் இரட்சகராக இருக்கிறார். இன்று அவர் ஓர் மதத்தின் அடையாளமாகமட்டுமே அறியப்படுகிறார்என்பதே இதற்கு ஓர் உதாரணம். அவரைப் பற்றிய எண்ணம் சரிதான், ஆனாலும் அவர் இவையெல்லாவற்றிற்கும் மேலானவர்; அவரே இரட்சகர். அவர்தான் சுவிசேஷ நற்செய்தியாளர்.

“சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வரும்போது….. அவர் என்னை மகிமைப்படுத்துவார்” என்று இயேசு கூறினார். புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டவைகளுக்கு நான் என்னை ஒப்புக்கொடுக்கும்போது, தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுகிறேன்; அவர் இயேசு எனக்காய்செய்தவற்றைஉணர்த்தி, இயேசு கிறிஸ்து எனக்கு வெளியரங்கமாகச் செய்த அனைத்தையும் ஆத்தும ரீதியாக என்னில் செய்கிறார்.

– ஆஸ்வால்ட்சேம்பர்ஸ்

சிந்தனை

உண்மையான அர்ப்பணிப்பில்லாமல், நமது பிரதான கேள்விகளுக்குப் பதில் பெறுவதன் மூலம் மட்டும் நாம் ஒருபோதும் தேவனின் ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டோம்.

 

 

banner image