மது வேகமான எப்போதும் மாறிவரும் உலகில், வழிகாட்டுதலையும், நோக்கத்தையும் கண்டறிவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். குழப்பங்களுக்கு மத்தியில், கிறிஸ்துவிலுள்ள நம்பிக்கை நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. ஏனென்றால் விசுவாசிகளாகிய நாம், வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஆவியானவரால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகின்றோம். தேவனால் அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவர் நமக்கு வழிகாட்டியாக, ஆலோசகராக, ஆறுதலளிப்பவராக இருக்கிறார் என வேதம் நமக்குக் கற்பிக்கிறது. பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த பிரசன்னத்தின் மூலம், நாம் தேவனுடன் ஒரு ஆழமான மற்றும் நெருக்கமான உறவை அனுபவிப்பதன் மூலம், நம் அன்றாட வாழ்வில் அவர் நம்மை வழிநடத்த அனுமதிக்கிறோம். சிலர் நினைப்பது போல் தேவன் வெகு தொலைவில் இல்லை. அவர் நமக்கு அருகிலும், நமக்குள்ளும் இருக்கிறார்.

நீதிமொழிகள் 3:5-6-ல், நம்முடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கை வைக்கும்படியும், நம் சொந்தப் புரிதலை சார்ந்திராமல் வாழவும் ஊக்குவிக்கப்படுகிறோம். இந்த அர்ப்பணிப்பு மற்றும் தேவன் மீதுள்ள நம்பிக்கை மூலம் தான் நாம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நம்மை ஒப்படைக்கிறோம். “தொடர்ச்சியான பயணம்”இருந்து எடுக்கப்பட்ட இந்த 6-பக்தித் தொகுப்பு, நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஜெபத்துடன் தியானிக்க‌ மற்றும் தேட உதவும்.

நமது அனுதின மன்னா ஊழியங்கள், இந்தியா

banner image

ஜேம்ஸ் ஜாய்ஸின் “உலிஸஸ்” என்ற புத்தகம் பெரும்பாலும் நவீன கதைகளின் தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத புத்தகமாகும். ஜாய்ஸும் வித்தியாசமானவராக கருதப்பட்டார். அவர் எழுதும்போது படுத்துக்கொண்டு, பெரிய பென்சிலைப் பிடித்துக்கொண்டு, முகத்தின் அருகே நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதுவாராம்.

banner image

எங்கள் பகுதியில் அக்டோபர் மாதத்தில், வெப்பநிலை குறைய ஆரம்பித்து, பல மரங்களின் இலைகள் பளபளப்பாக மாறியது. மரங்கள் இலையுதிர்கால மகிமையால் என்னைக் கவர்ந்தது. இலைகள் ஆழமான சிவப்பு, பிரகாசமான மஞ்சள், மென்மையான ஆரஞ்சு நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களுக்கிடையே கலந்து அழகாக இருந்தது.

banner image

பிரையன் ஜாக்சன் சாகசம் செய்யவே வாழ்ந்தார். பல ஆண்டுகளாக அவர் கிரகத்தின் சில தீவிர சூழல்களுக்கு பயணங்களை வழிநடத்தினார். பல கண்டங்களில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடைபயணம் செய்த அவர், இதுவரை அறியப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் கால் வைப்பதைத் தவிர வேறு எதையும் விரும்புவில்லை.

banner image

ஏழு ஆண்டுகளாக, நான் என் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். ஓரளவு வருமானம் ஈட்டுவதற்காக நான் ஃப்ரீலான்ஸ் வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பருவத்தின் நெகிழ்ச்சியையும், வழக்கத்தையும் அனுபவித்தேன். உணவு சரியான நேரத்தில் வழங்கப்பட்டது, என் வீட்டை நன்றாக, தவறாமல் சுத்தம் செய்ய முடிந்தது. வளைகாப்பு மற்றும் பிறரை ஆசீர்வதிக்கும் வழிகளை நான் ரசித்தேன்.

banner image

உங்கள் தோல்விகளை அனைவரும் பார்க்கும்படி சுவரில் எழுதச் சொன்னால் என்ன செய்வீர்கள்? கேட்கும் நபர் உங்கள் முதலாளியாக இருந்தால் என்ன செய்வீர்கள்? டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட் க்ரெடிபிலிட்டி கார்ப்பரேஷனில் தினமும் இவ்வாறு தான் நடந்து கொண்டிருந்தது. தலைமைச் செயலாளர் ஜெஃப் ஸ்டிபல் என்பவர் தோல்விச் சுவரைக் கொண்டு வந்தார்.

banner image

ஒரு நாள், எனது பறவை தீவனம் தூரத்தில் தொங்குவதை நான் கவனித்தேன். அதை மீண்டும் நிரப்பி சிறிது நேரம் ஆனதை உணர்ந்தேன். நடந்து சென்று நிரப்பும் மூடியின் உட்புறம் ஒரு குளவி கூடு ஆக்கிரமித்துள்ளதை கவனித்து நிறுத்தினேன். குளவி கூடு மற்றும் பறவை விதைகள் ஒரே இடத்தை ஆக்கிரமிக்க முடியாததைப் போலவே…

banner image