எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

கதவு சட்டகத்தில் ஆறுதல்

2016 ஆம் ஆண்டு தெற்கு லூசியானாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, எனது சமூக ஊடகத்தை அலசுகையில், ​​ஒரு நண்பரின் இடுகையைக் கண்டேன். அவளுடைய வீடு அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு, என் தோழியின் அம்மா அவளை மனமடிவுண்டாக்கும் சுத்தமாக்கும் வேலையின் மத்தியிலும் தேவனைத் தேடும்படி ஊக்குவித்தார். எனது தோழி பின்னர் வீட்டின் கதவு சட்டகங்களில் வெளிப்பட்ட வேதவசனங்களின் படங்களை வெளியிட்டார். அவ்வசனம் வீடு கட்டப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. மரப்பலகைகளில் வசனங்களை வாசிப்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது.

வேதவசனங்களை கதவு சட்டகங்களில்  எழுதும் பாரம்பரியம் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளையிலிருந்து உருவாயிருக்கலாம். தேவன், ‌தான் யார் என்பதை நினைவில் கொள்வதற்காக கதவு சட்டகங்களில் தம் கட்டளைகளை இடும்படி இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்களின் இதயங்களில் கட்டளைகளை எழுதுவதன் மூலம் (உபாகமம் 6:6), அவர்களின் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மூலம்  (வ.7), குறியீடுகள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி தேவன் கட்டளையிடுவதை நினைவுபடுத்துதல் (வ.8), மற்றும் கதவு சட்டகங்களில்  மற்றும் நுழைவு வழிகளில் வார்த்தைகளை வைப்பது (வ.9) ஆகியவற்றின் மூலம் இஸ்ரவேலர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டார்கள். அவர் சொன்னதையோ அல்லது அவருடன் செய்த உடன்படிக்கையையோ ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

தேவனுடைய வார்த்தைகளை நம் வீடுகளில் வைப்பதும், அவற்றின் அர்த்தத்தை நம் இதயங்களில் விதைப்பதும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய உண்மைத்தன்மையை நம்பியிருக்கும்படியான அடித்தளத்தை உருவாக்க உதவும். சோகமான அல்லது இதயத்தை நொறுக்கும் இழப்பின் மத்

உண்மையான தேவை என்ன

சமைக்கும்போது ​​ஒரு இளம் தாய் இறைச்சியை ஒரு பெரிய பாத்திரத்தில் வைப்பதற்கு முன் பாதியாக வெட்டினார். ஏன் இறைச்சியைப் பாதியாக வெட்டினாள் என்று கணவர் கேட்க, "ஏனென்றால் என் அம்மா அதை அப்படி தான் சமைப்பார்" என்று பதிலளித்தாள்.

எனினும் கணவனின் கேள்வி அந்தப் பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே அவள் தன் தாயிடம் அந்த பாரம்பரியம் பற்றிக் கேட்டாள். அந்த தாயார் பயன்படுத்திய சிறிய பானையில் அது பொருந்தும் வகையில் அவர் இறைச்சியை வெட்டியதை அறிந்து அவள் அதிர்ச்சியடைந்தாள். மேலும் அந்த மகளிடம் பல பெரிய பானைகள் இருந்ததால், இறைச்சியை வெட்டுவது தேவையற்றது.

பல மரபுகள் ஒரு தேவையிலிருந்து தான் தொடங்குகின்றன, ஆனால் அவை கேள்வியின்றி தொடரப்படுகின்றன. இறுதியில் அது நடைமுறையாக மாறுகிறது. மனித மரபுகளைக் கடைப்பிடிக்க விரும்புவது இயல்புதான் அதைத்தான் பரிசேயர்கள் தங்கள் காலத்தில் செய்து கொண்டிருந்தனர் (மாற்கு 7:1-2). அவர்கள் தங்கள் மத விதிகளில் ஒன்றை மீறுவது போல் தோன்றினாலும் தடுமாறினர்.

இயேசு பரிசேயர்களிடம் ,"நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய்" (வ. 8) என்று கூறுகையில், மரபுகள் ஒருபோதும் வேதத்தால் உண்டாகும் அறிவை மாற்றக்கூடாது என்பதை அவர் வெளிப்படுத்தினார். தேவனைப் பின்பற்றுவதற்கான மெய்யான வாஞ்சை (வ. 6-7) வெளிப்புறச் செயல்களை விட நம் இதயத்தின் மனோபாவத்தில் கவனம் செலுத்தச்செய்யும்.

நாம் நம் மனதிற்கு விருப்பமான அல்லது மத ரீதியாகப் பின்பற்றும் எந்த பாரம்பரியங்களையும் தொடர்ந்து பகுத்தறிவதே நல்லது. 'உண்மையிலேயே தேவை' என்று தேவன் வெளிப்படுத்திய விஷயங்கள் தான் எப்போதும் மரபுகளுக்கு மேலாக வைக்கப்படவேண்டும்.

புதிய தரிசனம்

என்னுடைய புதிய கண்ணாடியை அணிந்துகொண்டு பலிபீடத்திற்கு வந்து அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்கையில் என்னுடைய சிநேகிதி ஒருவள் திருச்சபையின் வழிப்பாதைக்கு அருகாமையில் அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவளைப் பார்த்த நான் கையசைத்து சைகை செய்தேன். அவள் நான் இருக்கும் இடத்திலிருந்து தூரத்திலிருந்தாலும் அவளை எட்டித் தொடும் தூரத்தில் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது. ஆராதனை முடிந்த பின்பு, நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது தான் எனக்கு தெரிந்தது, அவள் எப்போதும் அமர்ந்திருக்கும் இருக்கையில் தான் அமர்ந்திருந்தாள் என்பது. என்னுடைய புதிய கண்ணாடியில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் அவள் வழக்கத்திற்கு மாறாக, எனக்கு அருகாமையில் அமர்ந்திருப்பதுபோல் தெளிவாய் பார்க்க முடிந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்பட்ட தேவன், பாபிலோன் சிறையிருப்பில் சிக்கியிருக்கும் இஸ்ரவேலர்களுக்கு ஒரு புதிய பார்வை வேண்டும் என்று விரும்பினார். அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்... நான் வனாந்தரத்திலே வழியை... உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19) என்று உரைத்தார். அவருடைய இந்த நம்பிக்கையின் செய்தியானது, தேவன் அவர்களை உருவாக்கினார், மீட்டெடுத்தார், என்றும் அவர்களோடே இருக்கிறார் என்ற தகவலையும் மறுவுறுதிப்படுத்தியது. “நீ என்னுடையவன்” (வச. 1) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். 

நீங்கள் இன்று எந்த பிரச்சனையின் ஊடாய் கடந்து சென்றாலும், பழமையானதை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய பாதையில் நடக்கும் புதிய பார்வையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அருளுவார். தேவனுடைய அன்பினாலே (வச. 4), அது உங்களை முழுவதுமாய் தாங்கியிருக்கும். உங்களுடைய வேதனை மற்றும் கட்டுகளின் மத்தியில் தேவன் உங்களுக்காய் செய்யும் கிரியைகளை உங்களால் பார்க்க முடிகிறதா? நம்முடைய வனாந்திரமான சூழ்நிலைகளில் தேவன் நமக்காய் செய்யும் கிரியைகளைப் பார்க்கக்கூடிய ஆவிக்குரிய கண்ணாடியை நாம் அணிந்துகொள்ள பிரயாசப்படுவோம். 

நலமானதைப் பற்றிக்கொள்ளுதல்

எங்கள் காரை அந்த திறந்தவெளியில் நிறுத்திவிட்டு, அதைக் கடந்து எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் ஒட்டுத் துத்திகள் (பர் மலர்கள்) எங்கள் ஆடையில் ஒட்டிக்கொள்ளும். குளிர்காலத்தில் இது வாடிக்கையானதுதான். இந்தச் சிறியத் தாவரங்கள் தங்களைக் கடப்பவர்களின் ஆடைகள், காலணிகள் மற்றும் எங்குவேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு, உதிரும்வரை அங்கேயே நிலைத்திருக்கும். அருகாமையிலும், உலகெங்கிலும்கூட விதையைப் பரப்பும் ஒட்டுத் துத்திகளின் இயற்கை வழிமுறை இது.

என்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தாவரங்களை அகற்றும்போதெல்லாம், "நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்" (ரோமர் 12:9) என்று விசுவாசிகளை அறிவுறுத்தும் இயேசுவின் செய்தியை நினைத்துக்கொள்வேன். மற்றவர்களிடம் அன்பு கூறுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பிறரிடம் காணப்படும் தீமையானவற்றைப் புறந்தள்ளி, நன்மையான காரியங்களைப் பற்றிக்கொண்டால், ஆவியானவரின் வழிநடத்துதலால் நமது அன்பில் "மாயமற்றவர்களாய்" இருக்க முடியும் (வ.9).

இந்த ஒட்டுத் துத்திகளை லேசாக அகற்ற முடியாது, அவ்வளவு வலுவாக  ஒட்டியிருக்கும். நாமும்கூட நன்மையானவற்றையே நோக்கிப் பார்க்க வேண்டும். நமது சிந்தையை தேவனின் இரக்கம், தயவு மற்றும் கற்பனைகள் ஆகியவற்றில் பதிய வைக்கும்போது, அவருடைய பெலத்தால் நாமும் மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பில் கட்டப்பட முடியும். நமது தேவைகளைக் காட்டிலும் பிறர் தேவைகளை முன்னிலைப்படுத்தி,  நாம் "ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்க" (வ.10) தேவனே நமக்கு உதவி செய்வார்.

அந்த ஒட்டுத் துத்திகள் எரிச்சலூட்டுபவைதான், எனினும் அவைகள் எனக்கு அன்பிலே பிறரைப் பற்றிக்கொண்டிருக்கவும்; தேவனின் வல்லமையால் "நன்மையானவைகளை" (வ.9, பிலிப்பியர் 4:8–9) இறுகப் பிடித்துக்கொள்ளவும் நினைவூட்டின.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார். 

கண்ணாடி சோதனை

கண்ணாடியில் தெரிவது யார்? என்னும் கேள்வியை சுய அங்கீகாரத்தைப் பரிசோதிக்கும் உளவியலாளர்கள் சிறுபிள்ளைகளிடம் கேட்கின்றனர். பதினெட்டு மாதங்களும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுபிள்ளைகளால் கண்ணாடியில் தெரியும் உருவம் தங்களுடையதுதான் என்பதை அடையாளம் காணமுடியவில்லை. ஆனால் பிள்ளைகள் வளரும்போது அது தங்களுடைய உருவம்தான் என்பதை அறிந்துகொள்கின்றனர். சுய அடையாளம் காண்பது என்பது ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்குமான முக்கிய அறிகுறி.
விசுவாசிகள் இயேசுவில் வளருவதும் முக்கியமானது. கண்ணாடியில் தங்களை அடையாளம் காணும் சோதனையை யாக்கோபும் பயன்படுத்துகிறார். “சத்திய வசனமே” யாக்கோபின் கண்ணாடி (யாக். 1:18). நாம் வேதத்தை வாசிக்கும்போது என்ன பார்க்கிறோம்? வேதம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும்போது, அதில் நாம் நம்மைப் பார்க்கமுடிகிறதா? தேவன் கொடுத்த கட்டளையின் பிரகாரம் நம்முடைய செய்கைகள் இருக்கிறதா? நம்முடைய இருதயத்தையும் செய்கைகளையும் நிதானிக்கும்போது, அது தேவனுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா அல்லது நாம் மனந்திரும்பி, மாற்றத்திற்கேதுவான வாழ்க்கை வாழ வேண்டுமா என்பதை அடையாளம் காண்பதற்கு வேதம் நமக்கு உதவுகிறது.
வேதத்தை நிர்விசாரமாய் வாசித்து, அதன்படி செய்யாமல் இருப்போமாகில், நம்மை நாமே வஞ்சிக்கிறோம் என்று யாக்கோபு சொல்லுகிறார் (வச.22). வேதாகமம் தேவனுடைய சித்தத்தின்படி ஞானமாய் வாழுவதற்கான திட்டத்தை நமக்குக் கொடுக்கிறது. அதை நாம் வாசிக்கும்போதும், தியானிக்கும்போதும், அதை உட்கொள்ளும்போதும், நம்முடைய இருதயத்தைப் பார்க்கும் சிலாக்கியத்தை அருளும்படிக்கு தேவனிடத்தில் விண்ணப்பித்து, தேவையான மாற்றங்களை நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்த முடியும்.

விளக்கை எரியவிடுங்கள்

ஓட்டல் வணிகத்தின் ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது ஒரு இரவு நேரம். அந்தக் கட்டிடத்தை சுற்றி எதுவும் இல்லை. அந்தக் கட்டிடத்தின் வராந்தா கதவின் அருகில் இருந்த விளக்கிலிருந்து மட்டும் சிறிய வெளிச்சம் வந்தது. பயணிகள் படிகளில் ஏறிச்சென்று கட்டிடத்திற்குள் நுழைவதற்கு அந்த ஒளி போதுமானதாயிருந்தது. அங்கே “உங்களுக்காக நாங்கள் விளக்கை எரிய விடுகிறோம் & quot; என்னும் வாசகம் எழுதப்பட்டிருந்தது. சோர்வோடு வரும் பயணிகள் தங்கி இளைப்பாறுவதற்கு அந்த விளக்கு வரவேற்படையாளமாய் அமைந்தது.

இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் அந்த வரவேற்பு விளக்கைப் போன்றவர்கள் என்று இயேசு சொல்லுகிறார். அவர் தன்னை பின்பற்றுபவர்களைப் பார்த்து, “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது” (மத்தேயு 5:14) என்றார். விசுவாசிகளாகிய நாமும் இருள் சூழ்ந்த உலகத்திற்கு ஒளியாக திகழ்கிறோம்.

மேலும் அவர் “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி” (வச. 16) நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும்படிக்கு கூறுகிறார். நம்முடைய விளக்கை அணையாமல் எரியச் செய்தால், நாம் பலரை நம்மிடமாய் வரவேற்று, மெய்யான ஜீவ ஒளியான கிறிஸ்துவை (யோவான் 8:12) அறிந்துகொள்ளும்படி செய்யலாம். சோர்ந்துபோன, இருள் சூழ்ந்த உலகத்தில் அவருடைய விளக்கு அணையாமல் எரிகிறது.

உங்கள் விளக்கு எரிந்துகொண்டிருக்கிறதா? இயேசு உங்கள் மூலமாய் விளக்கை பிரகாசிக்கச்செய்யும்போது, மற்றவர்கள் அதைப் பார்த்து அவ்வெளிச்சத்தைத் தங்களிலும் பிரகாசிக்கச்செய்வார்கள்.

பயண ஒளி

ஜேம்ஸ், இருசக்கர வாகனத்தில் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் 2011-கிமீ சாகச பயணம் மேற்கொண்டார். அவருடைய 1496வது கி.மீட்டரில், எனது நண்பர் அவரை சந்தித்தார். அப்போது ஜேம்ஸின் முகாமிடும் பொருட்களை யாரோ திருடிச் சென்றதை அறிந்ததும், எனது நண்பர் தன்னுடைய போர்வையையும் ஸ்வெட்டரையும் கொடுக்க முன்வந்தார். ஆனால் ஜேம்ஸ் அதை மறுத்துவிட்டார். ஏனென்றால், அவர் தெற்கு நோக்கி பயணிக்கும்போது, தட்பவெப்பநிலையின் காரணமாக, அவர் தன்னுடைய பொருட்களை குறைக்கவேண்டியிருக்கும் என்று அவர் கூறினாராம். மேலும் அவர் தனது இலக்கின் முடிவை நெருங்க நெருங்க, அவர் மிகவும் சோர்வடைந்தவராய் இருப்பதினால், அவர் சுமந்து செல்லும் எடையை குறைத்தே ஆகவேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். 

ஜேம்ஸின் உணர்தல் புத்திசாலித்தனமாக இருந்தது. எபிரெயர் நிருப ஆசிரியரின் கூற்றை இது பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் நமது பயணத்தைத் தொடரும்போது, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு" (12:1), தொடர்ந்து முன்னேற, நாம் குறைவான பொருட்களை கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாயிருக்கிறது. 

கிறிஸ்தவர்களாக, இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு விடாமுயற்சி தேவை (வச. 1). நம்முடைய ஓட்டத்தை தடைசெய்யும் மன்னிக்க முடியாத சுபாவம், அற்பத்தனம், மற்ற பல பாவங்களிலிருந்து விடுபடுவதே, நம்முடைய சமூகமான பயணத்தை உறுதிசெய்யும் காரியங்கள். 

இயேசுவின் உதவியின்றி, நாம் இலகுவாகப் பயணித்து, இந்தப் பந்தயத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்ய முடியாது. நாம் “இளைப்புள்ளவர்களாய்... ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு” (வச. 2-3) “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி” ஓடக்கடவோம். 

 

தேவனின் நகர்வுகள்

நான் வார்த்தை புதிர் விளையாட்டை அதிகம் விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட விளையாட்டிற்கு பிறகு என்னுடைய அந்த திரும்புமுனையான நகர்வுக்கு என்னுடைய நண்பர்கள் “கடாரா” என்ற என்னுடைய பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தனர். அந்த விளையாட்டில் அனைவரும் விளையாடி முடித்தவுடன், மீதமிருந்த எழுத்துக்களை நான் ஒன்று சேர்த்து, ஆட்டம் முடிந்துவிட்டது என்று அர்த்தம் கொள்ளும் ஏழு எழுத்து வார்த்தையை உருவாக்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினேன். அதினிமித்தம் நான் ஐம்பது போனஸ் புள்ளிகளைப் பெற்றேன். மற்ற போட்டியாளர்களிடம் மீதமிருந்த அனைத்துப் புள்ளிகளையும் பெற்றேன். ஆட்டத்தின் கடைசி இடத்திலிருந்த நான் முதல் இடத்திற்கு நகர்ந்தேன். இப்போது நாங்கள் விளையாடும் போதெல்லாம் ஆட்டத்தில் யாராவது பின்தங்கியிருந்தால், மீண்டும் ஒரு “கடாரா” நிகழக்கூடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உதித்திருக்கிறது.

கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைவுகூருவது நம் ஆவியை புத்துணர்வு அடையச் செய்து நம் நம்பிக்கையை கட்டுகிறது. இஸ்ரவேலர்கள் பஸ்காவைக் கொண்டாடியபோது அதைத்தான் செய்தார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்தில் பார்வோனால் ஒடுக்கப்பட்டபோது தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதை பஸ்கா நினைவுபடுத்துகிறது (யாத்திராகமம் 1:6-14). அவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டபோது, தேவன் தன்னுடைய ஜனத்தை மகத்துவமான வழியில் விடுவித்தார். அவர்கள் வீடுகளின் நிலைக்கால்களில் இரத்தத்தை தெளிக்குமாறும், அதினிமித்தம் சங்கார தூதன் அவ்வழியாய் கடந்துபோகும்போது, அவர்களின் தலைச்சன் பிள்ளைகள் உயிரோடே காக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு அறிவித்திருந்தார் (12:12-13). அதின்படி அவர்கள் உயிரோடே காக்கப்பட்டனர்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நம்மை மீட்டெடுத்த சிலுவை தியாகத்தின் நினைவுகூருதலாய் கர்த்தருடைய பந்தியை ஆசரிக்கிறோம் (1 கொரிந்தியர் 11:23-26). தேவன் நமக்கு செய்த நன்மைகளை நினைவுகூருவதென்பது, நமக்கு இன்றும் நம்பிக்கையளிக்கக்கூடியதாயிருக்கிறது.