எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டாரா பேட்டன்கட்டுரைகள்

தாழ்மையை தரித்தல்

“ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “அண்டர்கவர் பாஸ்” என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார்.  மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.

 

நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.

 

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (வ.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.

மெய்யான மார்க்கம்

எனது இரண்டாம் ஆண்டு கல்லூரியின் கோடை விடுமுறைக்கு பிறகு, என்னுடைய ஒரு வகுப்புத் தோழர் எதிர்பாராத விதமாக இறந்துபோனார். நான் அவரை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன், அவர் நன்றாக இருந்தார். நானும் என்னுடைய வகுப்பு தோழர்களும், வாழ்நாள் முழுவதும் நாம் சகோதர சகோதரிகளாய் இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். 

எனது வகுப்புத் தோழனின் மரணம் பற்றி எனக்கு அதிகம் ஞாபகம் இருப்பது என்னவென்றால், அப்போஸ்தலர் யாக்கோபு, “சுத்தமான பக்தி” (யாக்கோபு 1:27) என்று அழைப்பதற்கு ஏற்ற ஒரு வாழ்க்கையை என் நண்பர்கள் தெரிந்தெடுத்தார்கள். இறந்துபோன அந்த தோழனின் சகோதரிக்கு நாங்கள் சகோதரர்களாய் இருப்போம் என்று தீர்மானித்தோம். அவளுடைய சகோதரன் மரித்து பல ஆண்டுகள் ஆனபோதிலும் நாங்கள் சகோதரனுடைய ஸ்தானத்தில் அவளுடைய திருமணம் மற்றும் வளைகாப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்றோம். அவளுக்கு எப்போதெல்லாம் தேவை ஏற்படுகிறதோ அப்போது அழைப்பு விடுப்பதற்காக எங்களில் ஒருவர் அவளுக்கு ஒரு செல்போனையும் பரிசளித்தார். 

யாக்கோபின் கூற்றுப்படி, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதே சுத்தமான பக்தியாகும் (வச. 27). என்னுடைய சிநேகதனின் சகோதரி யாருமில்லாத திக்கற்றவள் இல்லையெனினும், அவளுடைய சகோதரன் இனி இல்லை. அவளுடைய புதிய சகோதரர்கள் அந்த இடத்தை நிரப்பினர். 

இயேசுவில் சுத்தமான மற்றும் மெய்யான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள், தேவையிலுள்ளவர்களை பராமரித்து (2:14-17),  “(திருவசனத்தின்படி) செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்ற ஆலோசனைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு உதவும்போது,உலகின் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளும்போது, அவர்மீது நமக்குள்ள நம்பிக்கையானது தேவையில் உள்ளவர்களை பராமரிக்க நம்மைத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே தேவன் அங்கீகரிக்கும் சுத்தமான பக்தி.

தேவன் பெயர்களை அறிந்திருக்கிறார்

நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது. 

ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை. 

நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.

அமைதிக்கான அழுத்தம்

வாழ்க்கையின் மிகப்பெரிய அழுத்தங்களில் ஒன்று வீட்டை மாற்றுவது. நான் எனது முந்தைய வீட்டில் கிட்டத்தட்ட இருபது வருடங்கள் வசித்த பிறகு, எங்கள் தற்போதைய வீட்டிற்குச் சென்றோம். நான் திருமணத்திற்கு முன் எட்டு வருடங்கள் அந்த முதல் வீட்டில் தனியாக வாழ்ந்தேன். பின்னர் என் கணவர் தனது எல்லா பொருட்களுடன் இனைந்தார். பின்னர், ஒரு குழந்தையைப் பெற்றோம், இன்னும் அதிகமான பொருட்கள் சேர்ந்தது.

நாங்கள் புதிய வீட்டிற்கு போன நாளிலும் கூட அமைதியில்லை. வீட்டை மாற்றும் பணியாளர்கள் வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னும்கூட, நான் இன்னும் புத்தகத்தை எழுதி முடித்துமே கொண்டிருந்தேன். புதிய வீட்டில் பல படிக்கட்டுகள் இருந்தன, எனவே திட்டமிட்டதை விட இரண்டு மடங்கு நேரம் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால் அன்றைய நிகழ்வுகளால் நான் மன அழுத்தத்தை உணரவில்லை. பின்னர் அது என்னைப் பாதித்தது, ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கப் பல மணிநேரம் செலவழித்தேன். வேதம் மற்றும் வசனங்களின் கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம். தேவனின் கிருபையால், நான் தக்க நேரத்தில் முடிக்க வேதத்தைப் பார்த்து, ஜெபித்து, எழுதினேன். எனவே, வேதத்திலும் ஜெபத்திலும் நான் மூழ்கியதே காரணம் என்று நான் நம்புகிறேன்.

பவுல் எழுதினார், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலிப்பியர் 4:6) என்று. நாம் ஜெபித்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்கையில்” (வ. 4). பிரச்சினை மீதிருக்கும் நம் கவனத்தை நம் அருள் நாதரிடம் திருப்புகிறோம். மனவழுத்தத்தைச் சமாளிக்க உதவும்படி நாம் தேவனிடம் கேட்கலாம், ஆனால் நாம் அவருடன் இணைகிறோம், இது " எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம்" (வ. 7) அளிக்கும்.

கதவு சட்டகத்தில் ஆறுதல்

2016 ஆம் ஆண்டு தெற்கு லூசியானாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, எனது சமூக ஊடகத்தை அலசுகையில், ​​ஒரு நண்பரின் இடுகையைக் கண்டேன். அவளுடைய வீடு அழிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு, என் தோழியின் அம்மா அவளை மனமடிவுண்டாக்கும் சுத்தமாக்கும் வேலையின் மத்தியிலும் தேவனைத் தேடும்படி ஊக்குவித்தார். எனது தோழி பின்னர் வீட்டின் கதவு சட்டகங்களில் வெளிப்பட்ட வேதவசனங்களின் படங்களை வெளியிட்டார். அவ்வசனம் வீடு கட்டப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. மரப்பலகைகளில் வசனங்களை வாசிப்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது.

வேதவசனங்களை கதவு சட்டகங்களில்  எழுதும் பாரம்பரியம் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த கட்டளையிலிருந்து உருவாயிருக்கலாம். தேவன், ‌தான் யார் என்பதை நினைவில் கொள்வதற்காக கதவு சட்டகங்களில் தம் கட்டளைகளை இடும்படி இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்களின் இதயங்களில் கட்டளைகளை எழுதுவதன் மூலம் (உபாகமம் 6:6), அவர்களின் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மூலம்  (வ.7), குறியீடுகள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி தேவன் கட்டளையிடுவதை நினைவுபடுத்துதல் (வ.8), மற்றும் கதவு சட்டகங்களில்  மற்றும் நுழைவு வழிகளில் வார்த்தைகளை வைப்பது (வ.9) ஆகியவற்றின் மூலம் இஸ்ரவேலர்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டார்கள். அவர் சொன்னதையோ அல்லது அவருடன் செய்த உடன்படிக்கையையோ ஒருபோதும் மறக்க வேண்டாம் என்று அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

தேவனுடைய வார்த்தைகளை நம் வீடுகளில் வைப்பதும், அவற்றின் அர்த்தத்தை நம் இதயங்களில் விதைப்பதும், வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய உண்மைத்தன்மையை நம்பியிருக்கும்படியான அடித்தளத்தை உருவாக்க உதவும். சோகமான அல்லது இதயத்தை நொறுக்கும் இழப்பின் மத்

உண்மையான தேவை என்ன

சமைக்கும்போது ​​ஒரு இளம் தாய் இறைச்சியை ஒரு பெரிய பாத்திரத்தில் வைப்பதற்கு முன் பாதியாக வெட்டினார். ஏன் இறைச்சியைப் பாதியாக வெட்டினாள் என்று கணவர் கேட்க, "ஏனென்றால் என் அம்மா அதை அப்படி தான் சமைப்பார்" என்று பதிலளித்தாள்.

எனினும் கணவனின் கேள்வி அந்தப் பெண்ணின் ஆர்வத்தைத் தூண்டியது. எனவே அவள் தன் தாயிடம் அந்த பாரம்பரியம் பற்றிக் கேட்டாள். அந்த தாயார் பயன்படுத்திய சிறிய பானையில் அது பொருந்தும் வகையில் அவர் இறைச்சியை வெட்டியதை அறிந்து அவள் அதிர்ச்சியடைந்தாள். மேலும் அந்த மகளிடம் பல பெரிய பானைகள் இருந்ததால், இறைச்சியை வெட்டுவது தேவையற்றது.

பல மரபுகள் ஒரு தேவையிலிருந்து தான் தொடங்குகின்றன, ஆனால் அவை கேள்வியின்றி தொடரப்படுகின்றன. இறுதியில் அது நடைமுறையாக மாறுகிறது. மனித மரபுகளைக் கடைப்பிடிக்க விரும்புவது இயல்புதான் அதைத்தான் பரிசேயர்கள் தங்கள் காலத்தில் செய்து கொண்டிருந்தனர் (மாற்கு 7:1-2). அவர்கள் தங்கள் மத விதிகளில் ஒன்றை மீறுவது போல் தோன்றினாலும் தடுமாறினர்.

இயேசு பரிசேயர்களிடம் ,"நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய்" (வ. 8) என்று கூறுகையில், மரபுகள் ஒருபோதும் வேதத்தால் உண்டாகும் அறிவை மாற்றக்கூடாது என்பதை அவர் வெளிப்படுத்தினார். தேவனைப் பின்பற்றுவதற்கான மெய்யான வாஞ்சை (வ. 6-7) வெளிப்புறச் செயல்களை விட நம் இதயத்தின் மனோபாவத்தில் கவனம் செலுத்தச்செய்யும்.

நாம் நம் மனதிற்கு விருப்பமான அல்லது மத ரீதியாகப் பின்பற்றும் எந்த பாரம்பரியங்களையும் தொடர்ந்து பகுத்தறிவதே நல்லது. 'உண்மையிலேயே தேவை' என்று தேவன் வெளிப்படுத்திய விஷயங்கள் தான் எப்போதும் மரபுகளுக்கு மேலாக வைக்கப்படவேண்டும்.

புதிய தரிசனம்

என்னுடைய புதிய கண்ணாடியை அணிந்துகொண்டு பலிபீடத்திற்கு வந்து அமர்ந்தேன். அங்கிருந்து பார்க்கையில் என்னுடைய சிநேகிதி ஒருவள் திருச்சபையின் வழிப்பாதைக்கு அருகாமையில் அமர்ந்திருந்ததை பார்த்தேன். அவளைப் பார்த்த நான் கையசைத்து சைகை செய்தேன். அவள் நான் இருக்கும் இடத்திலிருந்து தூரத்திலிருந்தாலும் அவளை எட்டித் தொடும் தூரத்தில் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது. ஆராதனை முடிந்த பின்பு, நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது தான் எனக்கு தெரிந்தது, அவள் எப்போதும் அமர்ந்திருக்கும் இருக்கையில் தான் அமர்ந்திருந்தாள் என்பது. என்னுடைய புதிய கண்ணாடியில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் அவள் வழக்கத்திற்கு மாறாக, எனக்கு அருகாமையில் அமர்ந்திருப்பதுபோல் தெளிவாய் பார்க்க முடிந்தது. 

ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் வெளிப்பட்ட தேவன், பாபிலோன் சிறையிருப்பில் சிக்கியிருக்கும் இஸ்ரவேலர்களுக்கு ஒரு புதிய பார்வை வேண்டும் என்று விரும்பினார். அவர், “இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்... நான் வனாந்தரத்திலே வழியை... உண்டாக்குவேன்” (ஏசாயா 43:19) என்று உரைத்தார். அவருடைய இந்த நம்பிக்கையின் செய்தியானது, தேவன் அவர்களை உருவாக்கினார், மீட்டெடுத்தார், என்றும் அவர்களோடே இருக்கிறார் என்ற தகவலையும் மறுவுறுதிப்படுத்தியது. “நீ என்னுடையவன்” (வச. 1) என்று தேவன் அவர்களை உற்சாகப்படுத்துகிறார். 

நீங்கள் இன்று எந்த பிரச்சனையின் ஊடாய் கடந்து சென்றாலும், பழமையானதை பின்னுக்கு தள்ளிவிட்டு புதிய பாதையில் நடக்கும் புதிய பார்வையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அருளுவார். தேவனுடைய அன்பினாலே (வச. 4), அது உங்களை முழுவதுமாய் தாங்கியிருக்கும். உங்களுடைய வேதனை மற்றும் கட்டுகளின் மத்தியில் தேவன் உங்களுக்காய் செய்யும் கிரியைகளை உங்களால் பார்க்க முடிகிறதா? நம்முடைய வனாந்திரமான சூழ்நிலைகளில் தேவன் நமக்காய் செய்யும் கிரியைகளைப் பார்க்கக்கூடிய ஆவிக்குரிய கண்ணாடியை நாம் அணிந்துகொள்ள பிரயாசப்படுவோம். 

நலமானதைப் பற்றிக்கொள்ளுதல்

எங்கள் காரை அந்த திறந்தவெளியில் நிறுத்திவிட்டு, அதைக் கடந்து எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பெரும்பாலும் அங்கிருக்கும் ஒட்டுத் துத்திகள் (பர் மலர்கள்) எங்கள் ஆடையில் ஒட்டிக்கொள்ளும். குளிர்காலத்தில் இது வாடிக்கையானதுதான். இந்தச் சிறியத் தாவரங்கள் தங்களைக் கடப்பவர்களின் ஆடைகள், காலணிகள் மற்றும் எங்குவேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு, உதிரும்வரை அங்கேயே நிலைத்திருக்கும். அருகாமையிலும், உலகெங்கிலும்கூட விதையைப் பரப்பும் ஒட்டுத் துத்திகளின் இயற்கை வழிமுறை இது.

என்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தத் தாவரங்களை அகற்றும்போதெல்லாம், "நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்" (ரோமர் 12:9) என்று விசுவாசிகளை அறிவுறுத்தும் இயேசுவின் செய்தியை நினைத்துக்கொள்வேன். மற்றவர்களிடம் அன்பு கூறுவது சற்று கடினமாகத் தோன்றலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவரின் துணையோடு பிறரிடம் காணப்படும் தீமையானவற்றைப் புறந்தள்ளி, நன்மையான காரியங்களைப் பற்றிக்கொண்டால், ஆவியானவரின் வழிநடத்துதலால் நமது அன்பில் "மாயமற்றவர்களாய்" இருக்க முடியும் (வ.9).

இந்த ஒட்டுத் துத்திகளை லேசாக அகற்ற முடியாது, அவ்வளவு வலுவாக  ஒட்டியிருக்கும். நாமும்கூட நன்மையானவற்றையே நோக்கிப் பார்க்க வேண்டும். நமது சிந்தையை தேவனின் இரக்கம், தயவு மற்றும் கற்பனைகள் ஆகியவற்றில் பதிய வைக்கும்போது, அவருடைய பெலத்தால் நாமும் மற்றவர்கள் மீதான நம்முடைய அன்பில் கட்டப்பட முடியும். நமது தேவைகளைக் காட்டிலும் பிறர் தேவைகளை முன்னிலைப்படுத்தி,  நாம் "ஒருவர்மேலொருவர் பட்சமாயிருக்க" (வ.10) தேவனே நமக்கு உதவி செய்வார்.

அந்த ஒட்டுத் துத்திகள் எரிச்சலூட்டுபவைதான், எனினும் அவைகள் எனக்கு அன்பிலே பிறரைப் பற்றிக்கொண்டிருக்கவும்; தேவனின் வல்லமையால் "நன்மையானவைகளை" (வ.9, பிலிப்பியர் 4:8–9) இறுகப் பிடித்துக்கொள்ளவும் நினைவூட்டின.

சூடான உணவு

பார்பிக்யூ கோழி இறைச்சி, பீன்ஸ், பாஸ்தா, ரொட்டி. ஒரு அக்டோபர் மாதத்தில் தன்னுடைய 54ஆம் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு பெண்மணியிடமிருந்து 54 ஆதரவற்றவர்கள் இந்த உணவை பரிசாகப் பெற்றுக்கொண்டனர். அந்தப் பெண்ணும் அவளுடைய நண்பர்களும், ஒரு உணவகத்தில் தங்கள் விருந்தை வழக்கமாய் அநுசரிக்காமல், சிகாகோவின் தெருக்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு உணவை சமைத்து பரிமாற தீர்மானித்தனர். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாக, மற்றவர்களையும் அவர்கள் பிறந்த நாளுக்கு அதுபோல காரியங்களை செய்யும்படி ஊக்குவித்தாள். 

இந்த சம்பவம், மத்தேயு 25-ல் இடம்பெற்றள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைவூட்டுகிறது: “அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (வச. 40). அவருடைய ஆடுகள் தங்கள் சுதந்திரத்தை அடையும்படிக்கு தன்னுடைய நித்திய இராஜ்யத்திற்குள் அழைக்கப்படும் என்று சொன்ன பிறகே இந்த வார்த்தைகளைச் சொன்னார் (வச. 33-34). அந்த தருணத்தில், அவர்கள் மெய்யான விசுவாசத்தில் அவருக்கு உணவளித்து, உடுத்தியவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார் (அவரை நம்பாத பெருமையுள்ள மதவாதிகளைப் போலல்லாமல்; பார்க்கவும் 26:3-5). நாங்கள் எப்போது உங்களுக்கு உணவளித்து, உடுத்துவித்தோம் என்று “நீதிமான்கள்” அவரைப் பார்த்துக் கேட்பார்கள் (25:37). “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (வச. 40) என்று பதிலளிப்பார்.