எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டேவிட் ரோப்பர்கட்டுரைகள்

நாம் ஒரு பொருட்டா?

சில காலங்களாக நான் ஒரு இள வயதான மனிதனிடம் கடிதங்கள் பரிமாறிக் கொண்டு இருந்தேன். விசுவாசத்தை பற்றி ஆழமாக சிந்திப்பவன். ஒருமுறை அவன் எழுதினான்: “நாம் வரலாற்றின் காலவரிசையில் இவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோமே! நாம் ஒரு பொருட்டா?”

 

இஸ்ரவேலுடைய தீர்க்கதரிசியான மோசே இந்த கேள்வியை ஒத்துக் கொள்வார்: “எங்கள் ஆயுசுநாட்கள் சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்” (சங்கீதம் 90:10). நம்முடைய குறுகிய வாழ்க்கையானது நம்மை வருத்தத்திற்குள்ளாக்கி, நாம் ஒரு பொருட்டா என்று எண்ணச் செய்யும்.

ஆம், நாம் ஒரு பொருட்டு தான். ஏனென்றால் நாம் தேவனால் ஆழமாக, நித்தியமாக நேசிக்கப் படுகிறோம். மோசே இந்த சங்கீதத்தில் ஜெபிக்கிறார்: “எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்” (சங்கீதம் 90:14). நாம் முக்கியம் தான், ஏனென்றால் நாம் இறைவனுக்கு கருத்தாக இருக்கிறோம்.

மற்றும், மற்றவர்களுக்கு நாம் தேவனின் அன்பை காண்பிக்க கூடியவர்களாக இருக்கிறது, நாம் ஒரு பொருட்டு தான் என்று வெளிப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கை குறுகியதாக இருந்தாலும் அது அர்த்தமற்றது அல்ல; தேவனின் அன்பை நாம் மற்றவருக்கு வைத்து போகக்கூடும். இந்த உலகில் நாம் நன்றாக சம்பாதித்து, ஓய்வு பெற்று சுகமாக வாழ்வதற்காக அல்ல. தேவனுடைய அன்பின் மூலம் அவரை மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவே.

இன்னுமாக, இந்த வாழ்வு ஒரு குமிழி போல் இருந்தாலும், நாம் நித்திய வாசிகள். இயேசு மரித்ததிலிருந்து  எழுந்ததினால் நாமும் நிச்சயமாக நித்தியத்தில் வாழ்வோம். ஆகவே தான்  மோசே “காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்”  என்று வரியினால் நம்மை ஊக்குவித்தார். அந்த ‘காலையிலே’ நாம் எப்பொழுதும் வாழ்வோம். அன்பு கூறுவோம். அன்பினால் மூழ்கடிக்கப்படுவோம். இந்த காரியம் நாம் முக்கியம் தான் என்று உணர்த்தவில்லை என்றால் வேறு என்னதான் அப்படி செய்ய கூடும்?

மீண்டும் தோல்வியடைந்தது

எனது பிரசங்க நாட்களில் சில ஞாயிறுகளின் காலை நேரங்களை ஒரு தாழ்வான புழுவைப்போல அணுகினேன். அதற்கு முந்தின வாரத்தில், நான் ஒரு நல்ல கணவனாய், தகப்பனாய் மற்றும் நண்பனாய் இருக்கவில்லை. தேவன் என்னை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன் நான் ஒரு சரியான வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ஆகவே வரும் வாரத்தில் சிறப்பாக வாழ முயற்சிக்க முடியும் என சபதம் செய்து என் பிரசங்கத்தை  நடத்தினேன்.

அது ஒரு நல்ல அணுகுமுறை அல்ல. கலாத்தியர் 3ம் அதிகாரத்தில. தேவன் தொடர்ந்து இலவச பரிசாக தமது ஆவியை அளித்து நம்மில் வல்லமையாய் கிரியை செய்கிறார் - நாம் எதையோ செய்திருக்கிறோமென்றோ அல்லது அதற்கு தகுதியானவர்கள் என்றோ அல்ல.

ஆபிரகாமின் வாழ்க்கை  அதை நிரூபிக்கிறது. சில நேரங்களில் அவர் ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை. உதாரணமாக, இரண்டு முறை தன்னை காப்பாற்றிக்கொள்ள, பொய் சொல்லி,  சாராளின் வாழ்க்கையை ஆபத்தில்  சிக்க வைத்து விட்டார். (ஆதியாகமம் 12:10-20; 20:1-18). இருப்பினும் தன்னுடைய விசுவாசத்தை தேவன் நீதியாக எண்ணினார் (கலா. 3:6). ஆபிரகாம் தன்னுடைய தோல்விகளிலும்  தன்னை தேவனுடைய கரங்களில் ஒப்புக்கொடுத்தார். இதனால் தன்னுடைய வம்சத்தின் மூலம் இந்த உலகத்திற்கே இரட்சிப்பை கொண்டு வர தேவன் அவரை பயன்படுத்தினார்.

தவறாக நடத்துக்கொள்வதற்கு எந்த நியாயத்தீர்ப்பும் இல்லை. நாம் கீழ்படிதலோடு அவரை பின்பற்ற இயேசு நம்மிடத்தில் கேட்கிறார், அதற்கான வழிமுறைகளையும் எற்படுத்தி கொடுக்கிறார். ஒரு கடினமான, மனந்திரும்பாத இதயம், அவர் நமக்காக வைத்திருக்கும் நோக்கங்களுக்கு தடையாக இருக்கும். ஆனால். அவர் நம்மை பயன்படுத்தும் முறை நம்முடைய நீண்ட நல்ல நடத்தை முறையை சார்ந்தது அல்ல. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை பயன்படுத்த தேவனுடை சித்தம் மட்டுமே அடிப்படையானது : இரட்சிக்கப்பட்டு அவருடைய கிருபையில் வளருவதே.  அந்த கிருபைக்காக நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. அது முற்றிலும் இலவசம்.

அறுப்பு வரை உண்மையாயிருத்தல்

ஒரு பெண் அருகிலுள்ள பூங்காவில், சிறுவர் நிகழ்ச்சியொன்றை நடத்த திட்டமிட்டாள். அவள் அருகிலிருப்போரின் குழந்தைகளை அதில் பங்கு பெறுமாறு அழைத்தாள். தன்னுடைய விசுவாசத்தை அருகில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த இந்த வாய்ப்பினை எண்ணி மிகவும் ஆர்வமாய் இருந்தாள்.

அவள் தன்னுடைய 3 பேரப்பிள்ளைகளையும், இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவியரையும் இதில் உதவுமாறு ஏற்படுத்தியிருந்தாள். அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும், விளையாட்டுகளையும், பிற செயல்களையும் திட்டமிட்டாள். உணவு தயாரித்தாள், குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய வேதாகமக் கதையையும் தயாரித்தாள். அவர்கள்  அனைவரும்    வந்து சேருவதற்கு காத்திருந்தாள்.

முதல் நாள் ஒரு குழந்தை கூட வரவில்லை, இரண்டாம் நாளும், மூன்றாம் நாளும் அப்படியே சென்றது. ஆனாலும் என்னுடைய சினேகிதி, ஒவ்வொரு நாளும் அந்த வேலைகளை தன்னுடைய பேரப்பிள்ளைகளுடனும், உதவியாளருடனும் செய்து வந்தாள்.

நான்காம் நாள், அருகில் சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தை கண்டு அவர்களுடைய பிள்ளைகளை இதில் பங்கு பெறுமாறு அழைத்தாள். ஒரு சிறுமி, அங்குள்ள விளையாட்டுகளில் பங்கு பெற்றாள், அவர்களோடு சாப்பிட்டாள், இயேசுவைப் பற்றிய கதைகளைக் கேட்டாள். இன்னும் அநேக ஆண்டுகளுக்கு அவற்றை நினைவில் வைத்திருப்பாள். இதன் பின்விளைவு என்னவாயிருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்க முடியும்? கலாத்தியர் புத்தகத்தின் வாயிலாக தேவன் நம்மை ஊக்குவிகின்றார். “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால்  ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம் (6:9-10).

எண்ணிக்கையைக் குறித்தும் காணக்கூடிய வெற்றியின் அளவைக் குறித்தும் கவலைப் படாதே. நாம் செய்ய வேண்டுமென தேவன் எதிர்பார்க்கின்ற காரியங்களில் உண்மையாயிரு. அறுவடையை அவருடைய கரத்தில் கொடுத்து விடு. பலனை தேவனே நிர்ணயிப்பார்.

முட்டாளாக நடத்தல்

எங்களது ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா  நடைபெற்ற போது,  நான் மிகவும் அவமானத்துக்குள்ளான அந்த நிகழ்வு நடை பெற்றது. எங்கள் வேதாகமக் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நண்பர்களால் நிறைந்த அந்த விழாவில், நான், என்னுடைய செய்திக் குறிப்புகளோடு, பேச்சாளர் மேசையை அணுகிய போது, அங்கு அமர்ந்திருந்த மிகப் பெரிய கூட்டத்தைப் பார்த்தேன், என்னுடைய கண்கள், முதல் வரிசையில், அதிக கவனத்தோடு, தங்களுடைய பட்டமளிப்பு உடையில் அமர்ந்திருந்த மதிப்புமிக்க பேராசிரியர்கள் மீது சென்றது. உடனடியாக என்னுடைய உணர்வுகள் மரத்தது, என்னுடைய  நாவு வறண்டது, என்னுடைய மூளை செயலற்றது, முதல் வார்த்தைகள் தடுமாறின, நான் ஏதேதோ சொந்த வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பித்தேன், என்னுடைய உரையில் எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதயே உணராதிருந்தேன், நடுக்கத்தோடு பக்கங்களைப் புரட்டினேன், என் வாய் அர்த்தமற்ற வார்த்தைகளை உளறியது, அனைவரும் அதிர்ச்சியுற்றனர். எப்படியோ என்னுடைய பேச்சை முடித்து விட்டு, என்னுடைய நாற்காலியில் வந்து அமர்ந்தேன், தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன், நான் செத்து விட விரும்பினேன்.

எனினும் அவமானப்படுதலை தாழ்மைக்கு வழி நடத்தும் ஒரு நல்ல காரியமாகக் கருதலாம், ஏனெனில் அது தேவனுடைய இருதயத்தைத் திறக்கும் சாவி எனலாம். “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என வேதாகமம் கூறுகின்றது (யாக். 4:6). அவர் தழ்மையுள்ளவர்களின் மேல் கிருபையைப் பொழிகின்றார். “சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன்” (ஏசா.66:2) என்று தேவன் சொல்கின்றார். நாம் தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும் போது, அவர் நம்மை உயர்த்துவார் (யாக். 4:10).

அவமானப்படுதலும் வெட்கமும் நம்மை தேவனிடம் கொண்டு வருகின்றன, அவர் நம்மை சரிபடுத்துவார். நாம் கீழே விழும் போதும் அவருடைய கரத்தில் விழுவோம்.

தேவனுக்கு முன்பாக நடனம்

அநேக வருடங்களுக்கு முன்பு, என்னுடைய மனைவியும் நானும் அருகிலுள்ள ஒரு சிறிய ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். அங்கு ஆராதனை வேளையில், ஒரு பெண் நடுப்பகுதியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில், அவளோடு மற்றும் அநேகர் இணைந்து கொண்டனர். கேரலினும் நானும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம். “நான் இல்லை!” என எங்களுக்குள்ளே பார்வையாலே தெரிவித்துக் கொண்டோம். நாங்கள் ஓர் அமைதலான ஆராதனை முறையை வழக்கமாகக் கொண்டுள்ள ஆலயத்திற்குச் செல்வதால், இந்த மாற்று ஆராதனை முறை எங்களுக்குப் பொருந்திவரவில்லை.

மாற்கு கூறும், மரியாளின் கதையில் வரும் “வீண் செலவு” என்பது அவள் இயேசுவின் மேல் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று, அது மற்றவர்களுக்குப் பொருந்திவரவில்லை (மாற்.14:1-9). மரியாள் செய்த தைலாபிஷேகத்தின் மதிப்பு, ஒருவருடைய ஒரு வருட கூலிக்குச் சமம். இது ஒரு “ஞானமற்றச்” செயல் என்று சீஷர்கள் முறுமுறுப்பதற்குக் காரணமாயிருந்தது. முறுமுறுப்பவர்களின் அதிருப்தியையும் இவர் இதற்குத் தகுதியற்றவர் என்பதாக இழிவு படுத்தினதையும் மாற்கு குறிப்பிடுகின்றார். இயேசு என்ன சொல்லுவாரோ என்று எண்ணி மரியாளும் பின்வாங்கியிருக்கலாம். ஆனால் இயேசுவோ அவளுடைய  தன்னலமற்றச் செயலைப் பாராட்டினார், அவளைத் தன்னுடைய சொந்த சீஷர்களிடமிருந்து பாதுகாக்கின்றார், ஏனெனில், அவர் இச்செயலைத் தூண்டிய அவளுடைய அன்பைப் பார்க்கின்றார், மற்றவர்கள் அவளுடைய செயலை, செய்யக் கூடாததாக கருதிய போதிலும், அவர்  “ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (வ.6) என்றார்.

வெவ்வேறு வகையான ஆராதனைகள் – பாரம்பரிய முறை, பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டது, அமைதியான முறை அல்லது ஆரவாரத்தோடு ஆராதிப்பது எல்லாமே இயேசுவின் மீதுள்ள அன்பை உண்மையாக வெளிப்படுத்துவதாகும். உள்ளதின் ஆழத்திலிருந்து வரும் அன்போடு, ஆராதிக்க அவர் தகுதியானவர்.

சுலபமாகச் செய்கிறது

என்னுடைய தந்தையும் நானும் மரங்களை வெட்டவும், அவற்றைச் சரியான அளவில் துண்டுகளாக்கவும், இருவர் பயன் படுத்தை கூடிய, குறுக்கே வெட்டும் ரம்பத்தை பயன் படுத்துவோம். நான் இளைஞனாகவும், ஆற்றல் மிக்கவனாகவும் இருப்பதால் எளிதில் ரம்பத்தை வெட்டுக் குழியில் திணித்து விடுவேன். “எளிதாகச் செய்கின்றது, ரம்பம் அதன் வேலையை செய்யட்டும்” என்பார் என்னுடைய தந்தை.

பிலிப்பியருக்கு பவுல் எழுதிய வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன். “தேவனே…..செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (2:13). எளிதாகச் செய்ய முடியும். அவர் நம்மை மாற்றுகின்ற வேலையை செய்யட்டும். கிறிஸ்து கூறியுள்ளவற்றை நாம் வாசிப்பதையும், செயல் படுத்துவதையும் காட்டிலும் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று சி.எஸ். லுவிஸ் கூறியுள்ளார். “ ஓர் உண்மையான கிறிஸ்து என்ற நபர்,  உனக்குள் காரியங்களைச் செயல் படுத்தி,…… உன்னை நிரந்தரமாக ……கிறிஸ்துவைப் போல மாற்றி…… தன்னுடைய வல்லமையையும், மகிழ்ச்சியையும், அறிவையும்  நித்திய வாழ்வையும் பகிர்ந்து கொள்கின்றார்” என்று அவர் கூறுகின்றார்.

இத்தகையச் செயலைத் தான் தேவன் இன்று செயல் படித்திக் கொண்டிருக்கின்றார். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்வதை கவனித்துக் செயல் படுத்து, ஜெபி. “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்” (யூதா 1:21), நீங்கள் அவருக்கேச் சொந்தம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை மாற்றுகின்றார் என்ற உறுதியில் அமைதியாக காத்திருங்கள்.

“நீதியின் மேல் பசியும் தாகமும் நமக்குள்ளதா?”  என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழந்தை உயரத்தில் வைக்கப் பட்ட பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ளும்படி, அதன் கண்கள் ஆவலோடு மின்னுவதை உண்ர்ந்த அதன் தந்தை, அப்பரிசு பொருளை எடுத்து அக்குழந்தைக்கு கொடுப்பதைப் போல எண்ணிக்கொள்.

அது தேவனுடைய வேலை, மகிழ்ச்சி நம்முடையது. எளிதாகச் செய்யப்படும். ஒரு நாள் நாமும் அங்கிருப்போம்.

வருங்கால மரம் வெட்டி

நான் கல்லூரியில் இருந்த போது, ஓர் ஆண்டு விறகு கட்டைகளை வெட்டி, சேர்த்து வைத்து, விற்று, விநியோகித்து வந்தேன். அது ஒரு கடினமான வேலை. எனவே 2 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள துரதிஷ்டவசமான மரம் வெட்டியைக் குறித்துப் பரிதாபப் படுவேன்.

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தங்கும் இடம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் யோர்தான் நதியண்டை சென்று மரம் வெட்டி வந்து, தங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப் படுத்த திட்டமிட்டனர். இதற்கு எலிசாவும் சம்மதித்து அவர்களோடு சென்றார். வேலை நன்றாகச் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் கோடாரி தண்ணீரில் விழுந்தது (வச. 5).

எலிசா தன்னுடைய குச்சியால் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்து, அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அதனை வெளியே எடுத்திருக்கலாம் என ஒருவர் சொல்லக் கூடும். அப்படியும் செய்திருக்கலாம், ஆனால் அப்படியல்ல, அங்கு ஒரு அற்புதம் நடைபெற்றது. அந்தக் கோடாரியின் தலைப் பகுதியை தேவனுடைய கரம் அசைத்தது, அதனை நீரின் மேல் மிதக்கும்படி செய்தார், எனவே அந்த மனிதனால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது (வச. 6-7).

இந்த அற்புதம் நாம் மனதில் வைத்துக் கொள்ளக் வேண்டிய ஓர் ஆழ்ந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நம் வாழ்வின் சிறிய காரியங்களில் கூட தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் – சிறிய காரியங்களான, கோடாரி, சாவி, மூக்குக் கண்ணாடி, அலைபேசி போன்றவை தொலைந்து போனால் கூட, அது நம்மைப் பதறச் செய்யும் என்பதை தேவன் புரிந்து கொள்கின்றார். அவர் எப்பொழுதும் தொலைந்தவற்றை மீட்டுத் தருபவர் அல்ல, மாறாக அவர் நம்முடைய கவலையைப் புரிந்து கொண்டு, நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

தேவன் நம்மை இரட்சித்தார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டதோடு, தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உறுதி இல்லையென்றால், நாம் இவ்வுலகில் தனிமையை உணர்வோம், அநேகக் கவலைகளுக்குள்ளாவோம். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், நம்முடைய இழப்புகளில், அவை சிறியதாக இருப்பினும் அவற்றில் பங்கு பெறுகின்றார், நம்மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

உறுமும் சுண்டெலி

அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என்னுடைய மகன்களும் வடக்கு இடாகோவிலுள்ள, செல்வே பிட்டர்ரூட் என்ற காட்டுப்பகுதிக்குச் சென்று சில நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். அது கிரிஸ்லி கரடிகள் வாழும் இடம், எனவே நாங்கள், எங்களோடு கரடியை ஓட்டும் தெளிப்பான்களைக் கொண்டு வந்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி சுத்தமாக வைத்துக்கொண்டோம். எனவே எந்த கிரிஸ்லி கரடியையும் சந்திக்க நேரிடாது என எண்ணினோம்.

ஒரு நாள், நடு இரவில் என்னுடைய மகன் ராண்டி உருண்டு கொண்டு, தன்னுடைய படுக்கும் உறையை விட்டு வெளியேற முயற்சித்துக்கொண்டிருந்தான். நான் உடனடியாக என்னுடைய டார்ச்லைட்டை அடித்து, அவன் ஏதோ ஒரு கோபமுள்ள கரடியின் பிடியில் சிக்கிக்கொண்டானோ என எதிர்பார்த்தேன்.

அங்கு, தன்பின்னங்கால்களில், நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, முன்கால்களின் பாதங்களை அசைத்தவாறு ஒரு வயல் எலி அமர்ந்திருந்தது, அதன் பற்களால் ராண்டியின் தொப்பியை இறுகப்பற்றிக் கொண்டிருந்தது, அது அத்தொப்பியை இழுத்து, இழுத்து ராண்டியின் தலையிலிருந்து கழற்றியது. இதனைப்பார்த்த நான் சிரித்து விட்டேன், உடனே அந்த எலி அதனைப் போட்டு விட்டு ஓடிவிட்டது. நாங்களும் எங்களுடைய தூங்கும் உறைக்குள் புகுந்தோம். நான் பதட்டத்தோடு, வஞ்சிக்கிற பிசாசுகளைக் குறித்து எண்ண ஆரம்பித்ததால், என்னால் மீண்டும் தூங்க முடியவில்லை.

பிசாசு, இயேசு கிறிஸ்துவை சோதித்ததைக் குறித்து சற்று சிந்தித்துப் பார்ப்போம் (மத். 4:1-11). அவர் தம்முடைய சோதனைகளை வேத வசனங்களைக் கொண்டு மேற்கொண்டார். ஒவ்வொரு முறை அவர் பதிலளித்தபோதும், தேவன் இவற்றைக்குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கிறார், அதனால் அவரால் கீழ்ப்படிய முடிந்தது. சாத்தானும் ஓடிப்போய் விடுகிறான்.

சாத்தான் நம்மை விழுங்கும்படி வகை தேடினாலும், அவனும் அந்தச் சிறிய எலியைப் போன்றே படைக்கப்பட்டவன். எனவே தான் யோவான்,  “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் (நம்மில்) இருக்கிறவர் பெரியவர் (1 யோவா. 4:4) என்கிறார்.

ஒரு பழைய மண் பானை

நான் பல ஆண்டுகளாக அநேக பழைய பானைகளைச் சேகரித்துள்ளேன். அதில், ஆபிராகாம் வாழ்ந்த காலத்தில் உள்ள ஒரு பகுதியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பானை, எனக்கு மிகவும் பிடித்தமானது. எங்கள் வீட்டிலுள்ள பானைகளில் குறைந்தது ஒன்றாகிலும் என்னுடைய வயதைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கும்! அதில் பார்க்கக் கூடியதாக ஒன்றுமிராது, அவை கறை பிடித்ததும், கீரல் விழுந்ததும், உடைந்ததுமாக இருக்கும். அவைகளை நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். நானும் மண்ணினாலேயே உருவாக்கப்பட்டேன் என்பதை நினைத்துக் கொள்ளவே அவற்றை வைத்துள்ளேன். நான் உடையக் கூடியதும், பெலவீனமான பானையாக இருந்த போதும், எனக்குள் விலையேறப் பெற்ற செல்வமாகிய இயேசுவைச் சுமக்கிறேன். “இ ந்த பொக்கிஷத்தை (இயேசுவை) மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்” 2 கொரி.4:7)

மேலும் பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை” (வ.8-9). என்கின்றார். நெருக்கப்படல், கலக்கமடைதல், துன்புறுத்தப்படல், கீழே தள்ளப்படல் ஆகிய இந்த அழுத்தங்களை அந்தப் பானை தாங்க வேண்டும். ஒடுங்குவதில்லை, மனமுறிவதில்லை, கைவிடப்படுவதில்லை, மடிந்து போவதில்லை என்பன, நமக்குள்ளேயிருக்கும் இயேசு  இவற்றிற்கெதிராக நம்மை பெலப்படுத்தும் விளைவுகளாகும்.

 “இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்” (வ.10) இது, இயேசு நமக்காக அனுதினமும் மரித்தார் என்ற பண்பைக் காட்டுகின்றது. நம்முடைய சுய முயற்சியை மனப்பூர்வமாக சாகடிக்க வேண்டும், நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றவரை முற்றிலும் போதுமானவராக நம்ப வேண்டும் என்கின்ற பண்பை நமதாக்கிக் கொள்ளவேண்டும்.

அப்படியானால், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்” (வ.!0). அதன் விளைவு என்னவெனின், ஒரு பழைய மண்பானையில், இயேசுவின் அழகு காணப்படும்.