என் நாற்பது நிமிட உடற்பயிற்சியின் கடைசி நிமிடங்களை நெருங்கும்போது, என் உடற்பயிற்சி ஆலோசகர், “சிறப்பாய் முடியுங்கள்” என்று கத்துவார். நான் அறிந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் அநேகர், பயிற்சி நிறைவுறும் முன் அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயிற்சியை துவங்குவதுப் போலவே, அதை நிறைவுச்செய்வதும் முக்கியம் என்பதை அவர்கள் அறிவார்கள். மனித உடல் தொடர்ச்சியாக இயங்குகையில், அது தளரும் அல்லது தோயும் என்றும் அறிவார்கள்.
இது, நம் கிறிஸ்தவ ஓட்டத்திற்கும் பொருந்தும். கிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, தான் அதிக உபத்திரவத்தை சந்திக்கப்போகிகிறதை அறிந்து, எருசலேமுக்கு போகையில் பவுல், எபேசுவிலிருந்த மூப்பர்களுக்கு தன் ஓட்டத்தை சிறப்பாய் முடிக்கவேண்டும் என்ற தன் எதிர்பார்பை அறிவிக்கிறார் (அப்போஸ்தலர் 20:17-24). எனினும். பவுல் தடுமாறவில்லை. தேவன் அவரை எதற்காய் அழைத்தாரோ, அதை நேர்த்தியாய் செய்வதே பவுலின் நோக்கம். “தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை” (வச. 24) பிரசங்கிப்பதே அவருடைய பணி. அதை நேர்த்தியாய் செய்து முடிக்க விரும்பினார். தன்னுடைய பாதையில் பாடுகள் வந்தாலும் (வச. 23), தன்னுடைய ஓட்டத்தில் நிலையாய் நின்று, முடிவுக் கோட்டை நோக்கி விரைந்தார்.
நாம் நம்முடைய உடற்பயிற்சியை செய்தாலும், அல்லது தேவன் நமக்குக் கொடுத்த திறமைகள், வார்த்தைகள் மற்றும் கிரியைகளை செயல்படுத்தினாலும், அதை நேர்த்தியாய் நிறைவு செய்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறோம். “சோர்ந்துபோகாமல் இருப்போமாக” (கலாத்தியர் 6:9). பின்வாங்காதீர்கள். உங்கள் ஓட்டத்தை நேர்த்தியாய் நிறைவுசெய்வதற்கு தேவையானதை தேவன் அருளுவார்.