என்னுடைய தாயாரின் திடீர் மரணத்திற்கு பின்பு, நான் ஆன்லைனில் கருத்துக்களை பதிவிட விரும்பினேன். எனவே அதை செய்வது எப்படி என்று பழகும் அறிமுகக் கையேட்டை புரட்ட ஆரம்பித்தேன். எதிலிருந்து துவக்குவது, தலைப்பை எப்படி தேர்ந்தெடுப்பது, ஈர்க்கக்கூடிய பதிவுகளை எப்படி பதிவிடுவது என்று கற்று, 2016ஆம் ஆண்டு என் முதல் பதிவை வெளியிட்டேன். 

நித்திய ஜீவனை பெறுவது எப்படி என்னும் ஆரம்பகால கையேட்டை பவுல் எழுதியுள்ளார். ரோமர் 6:16-18ல் நாமெல்லோரும் பாவிகளாய் பிறந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்க முடியும் (வச.18) என்னும் நிஜத்தைப் பிரதிபலிக்கிறார். அதைத் தொடர்ந்து, பாவத்திற்கு அடிமையாயிருப்பதையும் தேவனுக்கு அடிமையாயிருப்பதையும், அவருடைய ஜீவனுக்கேதுவான வழிகளோடு விவரிக்கிறார் (வச. 19-20). மேலும் “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்” (வச.23) என்று கூறுகிறார். மரணம் என்பது தேவனிடத்திலிருந்து நித்தியமாய் பிரிந்திருப்பது. கிறிஸ்துவை மறுதலிப்பதினால் நமக்கு நேரிடக்கூடிய அவலம் இது. ஆனால் தேவன் நமக்கு கிறிஸ்துவில் புதுவாழ்வை வாக்களித்துள்ளார். அது பூமியில் துவங்கி பரலோகத்தில் முடிவில்லாமல் அனுபவிக்கக்கூடிய நித்திய வாழ்வு.

நித்திய ஜீவனைக் குறித்த பவுலின் இந்த ஆரம்பகால கையேடு நமக்கு இரண்டு தேர்வுகளை முன்வைக்கிறது. பாவத்தைத் தேர்ந்தெடுத்தால் மரணம் அல்லது இயேசுவின் பரிசை தேர்ந்தெடுத்தால் நித்திய ஜீவன். நீங்கள் இந்த ஜீவனுக்கேதுவான வரத்தை பெற்றுக்கொள்ள பிரயாசப்படுங்கள். ஒருவேளை நீங்கள் கிறிஸ்துவை ஏற்கனவே ஏற்றுக்கொண்டவர்களாயிருந்தால் இன்று அந்த பரிசை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.