ஒரு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான கரேன், தனது மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் எவ்வாறு நன்கு புரிந்துகொள்வது என்பதைக் கற்பிப்பதற்கான ஒரு செயல்பாட்டை உருவாக்கினார்.. இந்த “மூட்டை தூக்கும் செயல்பாட்டில்” – மாணவர்கள் தாங்கள் சுமந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான சுமைகள் சிலவற்றை எழுதினர். அந்த குறிப்புகள் ஒருவொருக்கொருவர் மாற்றி கொடுக்கப்பட்டதால், சக மாணவர்களுக்கு ஒருவருக்கொருவர் பட்ட கஷ்டங்களைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுத்து பெரும்பாலும் அவர்களது சகாக்களிடமிருந்து கண்ணீரே பதிலாக வந்தது. இளம் வயதினருடைய ப்ரஸ்பர மரியாதைக்குரிய ஆழ்ந்த உணர்வால் அந்த வகுப்பறை நிரப்பப்பட்டிருந்தது, அவர்கள் இப்போது ஒருவருக்கொருவர் அதிக பச்சாதாபம் கொண்டவர்களாகினர்.

வேதாகமம் முழுவதும், ஒருவருக்கொருவர் கண்ணியத்துடன் நடந்துகொள்வதற்கும் மற்றவர்களுடனான தொடர்புகளில் பச்சாத்தாபம் காட்டுவதற்கும் தேவன் தம் மக்களுக்கு சுட்டிக்காட்டி உள்ளார் (ரோமர் 12:15). ஆரம்ப கால இஸ்ரவேலின் வரலாற்றில் லேவியராகமம் புத்தகமத்தில், தேவன் இஸ்ரவேலரின் பச்சாத்தாபத்தை நோக்கி சுட்டிக்காட்டினார்-குறிப்பாக புறஜாதியினருடனான நடவடிக்கைகளில். உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் “உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக”; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; (லேவியராகமம் 19:34). 

சில நேரங்களில் நாம் சுமக்கும் சுமைகள் நம்மை அந்நியர்களைப் போல – தனித்து விடப்பட்டவர்களாக, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டர்களாக – நம் சுற்றத்தாரிடம் கூட உணர வைக்கின்றன. இஸ்ரவேலர் தங்களோடிருந்த புறஜாதியினருடன் செய்ததைப் போன்றதொரு அனுபவம் நமக்கு எப்போதும் இருப்பதில்லை. ஆயினும்கூட, தேவன் நம் வாழ்க்கையின் பாதைகளில் அனுப்புகிறவர்களை நாம், நாம் விரும்பும் மரியாதையுடனும் புரிதலுடனும் எப்போதும் நடத்தலாம். ஒரு நவீனகால நடுத்தர பள்ளி மாணவன், இஸ்ரவேலர் அல்லது இதற்கு இடையில் யாராக இருந்தாலும், நாம் அப்படி செய்யும் போது தேவனை கனப்படுத்துகிறோம்.