Archives: டிசம்பர் 2020

வாழ்க்கையின் வெடிகள்

புத்தாண்டு தினத்தன்று உலகெங்கிலும் உள்ள நகரம் மற்றும் மாநகரங்களில் அதிக சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடிக்கும்போது, அதனுடைய சத்தம் நோக்கத்துடன் அதிகமாக இருக்கும். உற்பத்தியாளர்கள் கூறுகையில், அவற்றின் இயல்பால் ஒளிரும் பட்டாசுகள் வளிமண்டலத்தை பிளவுபடுத்துவதாக இருக்கும். 'ரிப்பீட்டர்ஸ்" அதாவது ஒரே சமயத்தில் மீண்டும் மீண்டும் வெடிப்பவை, குறிப்பாக தரையில் வெடிக்கப்படும்போது அதிக சத்தத்துடன் வெடிக்கும்.

தொல்லைகள் நம் இதயங்கள், மனங்கள் மற்றும் வீட்டின் மூலமாக ஏற்றம் பெறலாம். வாழ்க்கையின் பட்டாசுகள், குடும்பப் பிரச்சனைகள், உறவுப் பிரச்சனைகள், வேலை சவால்கள், நிதி நெருக்கடி, தேவாலயத்தில் பிரிவுகள் - இவைகள் நம்முடைய உணர்வு சூழலை பாதித்து ஒரு பெரிய வெடியைப் போல வெடிக்கும்.

இப்படிப்பட்ட ஒரு சலசலப்புக்கு மேலே நம்மை தூக்கி நிறுத்துபவர் யார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்துவே நம்முடைய சமாதானக் காரணர் என்று பவுல் எபேசியர் 2:14ல் எழுதுகிறார். அவருடைய பிரசன்னத்தில் நாம் உறுதியாக நிற்கும்போது, அவருடைய சமாதானம் எப்படிப்பட்ட இடையூரைக் காட்டிலும் மகா பெரியது. எந்த ஒரு கவலை, காயம் மற்றும் ஒற்றுமையின்மையின் சத்தத்தையும் அமைதிப்படுத்தும்.

இது யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் ஒரு ஆற்றல் மிக்க உறுதிமொழியாய் இருந்திருக்கும். அவர்கள் ஒருகாலத்தில் 'இந்த உலகத்தில் நம்பிக்கையில்லாமலும், தேவனில்லாமலும் வாழ்ந்து வந்தனர்" (வச. 12). இப்போது அவர்கள் துன்புறுத்தலின் அச்சுறுத்தல்களையும், அவர்களுக்குள்ளே பிரிவினையின் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் கிறிஸ்துவினால் அவர்கள் தேவனுக்கும், அதன் விளைவால் ஒருவருக்கொருவர் அவருடைய இரத்தத்தினாலே நெருங்கி கொண்டுவரப்பட்டனர். 'அவரே நம்முடைய சமாதானக் காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினைர்யாகிய நடுச்சுவரைத் தகர்த்தார் (வச. 14).

ஒரு புதிய ஆண்டை நாம் தொடங்கும்போது, அமைதியின்மை மற்றும் வானவெளியில் எப்போதும் உருட்டிக்கொண்டிருக்கும் பிரிவினையின் அச்சுறுத்தல்களிலிருந்து வாழ்க்கையின் இரைச்சல்மிக்க சோதனைகளிலிருந்து நாம் எப்போதும் இருக்கிற சமாதானத்திற்கு திரும்பக் கடவோம். அவர் வெள்ளப்பெருக்கை அமைதிப்படுத்தி நம்மை குணப்படுத்துகிறார்.

உண்மையான வெற்றி

என்னுடைய நேர்காணல் விருந்தினர் எனது கேள்விகளுக்கு பணிவுடன் பதிலளித்தார். சம்பாஷணைக்குள் அடியில் ஏதோ பதுங்கியிருப்பதாக எனக்கு ஒரு உணர்வு. தற்செயலாக சொல்லப்பட்ட கருத்து அதை வெளியே கொண்டு வந்தது.

'நீங்கள் ஆயிரக்கணக்கான மக்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்" என்றேன். “ஆயிரக்கணக்கானவர்கள் அல்ல. கோடிக்கணக்கானவர்கள்" என்று அவர் முணுமுணுத்தார்.

எனது அறியாமையைப் பரிதாபப்படுத்துவதுப் போல எனது விருந்தினர் அவருடைய நற்சான்றிதழ்களை நினைவூட்டினார் - அவர் வகித்திருந்த பதவிகள், அவர் சாதித்த விஷயங்கள், அவர் அருளிய பத்திரிக்கை. அது ஒரு தடுமாற்றமான தருணம்.

அந்த அனுபவத்திலிருந்து, தேவன் சீனாய் மலையில் மோசேக்குத் தன்னை வெளிப்படுத்தியதைக் குறித்து ஆச்சரியப்பட்டேன் (யாத். 34:5-7). இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர், மனுகுலத்தின் நியாயாதிபதி இங்கே தன்னுடைய பதவிகளை பயன்படுத்தவில்லை. 100 கோடி விண்மீன் திரள்களை உருவாக்கியவர் அவர், ஆனால் அந்த சாதனைகள் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக தேவன் தன்னை இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுள்ளவர் (வச. 6) என அறிமுகப்படுத்துகிறார். அவர் யார் என்பதை அவர் வெளிப்படுத்தும்போது, அவருடைய பட்டங்களையோ அல்லது சாததைனகளையோ அல்ல, மாறாக தன்னுடைய குணத்தை பட்டியலிடுகிறார்.

தேவனுடைய சாயலாய் படைக்கப்பட்ட மக்களாகவும், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற அழைக்கப்பட்ட நமக்கு இது ஆழமான ஒன்று (ஆதி. 1:27, எபே. 5:1-2). சாதனைகள் நல்லது தான், பட்டங்களுக்கு அவைகளுக்குள்ள இடம் உண்டு, ஆனால் நாம் எவ்வளவு இரக்கம், கிருபை, அன்புள்ளவர் களாயிருக்கிறோம் என்பது தான் முக்கியம். அந்த நேர்காணல் விருந்தினரைப் போல, நாமும் நம்முடைய சாதனைகளை அடிப்படையாக முக்கியப்படுத்தலாம், ஆனால் உண்மையான வெற்றி எது என்பதற்கு தேவன் முன்மாதிரியானவர் - நம்முடைய தொழில் அட்டைகளில் அல்லது நம்முடைய தற்குறிப்பில் எழுதப்பட்டவைகள் அல்ல மாறாக நாம் அவரைப்போல எப்படி மாறுகிறோம் என்பதே.

இடிபாடுகளின் மறுசீரமைபட்பு

1876ம் ஆண்டில், மத்திய இந்தியானாவில், நிலக்கரிக்காக துளையிடுபவர்கள் நரகத்தின் வாசலைக் கண்டுபிடித்ததாக நினைத்தனர். வரலாற்றாசிரியர் ஜான் பார்லோ மார்ட்டின், அறுநூறு அடியின் கீழே, அற்புhதமான சத்தங்கள் மத்தியில் தீப்பொறிகள் எழும்பின என்று தெரிவிக்கிறார். அவர்கள் பிசாசின் குகையின் கூரையை உடைத்திருப்பதாக நினைத்து, பயந்து, வேகமாக தோண்டிய துளையை மூடிவிட்டு தங்கள் வீட்டிற்கு விரைந்தனர்.

சுரங்கத் தொழிளாலர்கள், நிச்சயாமாகத் தவராகப் புரிந்துக்கொண்டனர் - சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுபடியும் துளையிட்டு, இயற்கை எரிவாயுவினால் பணக்காரர்களாக இருப்பார்கள். அவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டாலும், நான் அவர்களைக் குறித்து சற்று பொறாமைப்படுகிறேன். இந்தச் சுரங்கத் தொழிளாலர்கள், என் சொந்த வாழ்க்கையில் அடிக்கடி நான் காணாமலிருந்த, ஆன்மீக உலகத்தின் விழிப்புணர்வோடு இருந்தனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட மற்றும் இயற்கையும் ஒன்றிணைவது அறிதாக இருக்கிறது என்று நான் வாழ்வது சுலபமானதாக இருந்தாலும், 'மாம்சத்தோடும், இரத்தத்தோடும் அல்ல... வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு நமக்கு போராட்டம் உண்டு" எபேசியர் 6:12 என்பதை மறந்துவிட முடியாது.

நம் உலகில் தீமை வெற்றியடைவதைக் காணும்போது, நாம் அதை விட்டுவிடவோ அல்லது சொந்த பலத்தில் போராடவோ முயற்சிக்கக்கூடாது. ஆனால் நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை (வச. 13-18) தரித்துக்கொண்டு எதிர்த்து நிற்க வேண்டும். வேதத்தை வாசிப்பதும், ஊக்கப்படுவதற்காக மற்ற விசுவாகிளை தொடர்ந்து சந்திப்பதும், மற்றவர்களின் நன்மைகளை மனதில் கொள்வதும், நாம் பிசாசினுடைய திட்டங்களுக்கு எதிர்த்து நிற்க உதவி செய்யும் (வச. 11). பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு எதையும் எதிர்கொண்டு உறுதியாக நிற்க முடியும் (வச. 13).

இடிபாடுகளின் மறுசீரமைபட்பு

பதினேழு வயதில், டோவெய்ன், திருடுதல் மற்றும் போதைக்கு அடிமைபட்டிருந்ததால், தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தன்னுடைய குடும்ப வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர் வெகுதூரம் செல்லவில்லை, தனது தாயின் கொல்லைப்புறத்தில் நெளிந்த உலோகத்தினால் ஒரு சிறு குடிலை அமைத்து, நாளடைவில் இது போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் கேசினோ என்ற இடமாக அறியப்பட்டது. எனினும் தன் பத்தொன்பதாம் வயதில் டோவெய்ன் இயேசுவின் இரட்சிக்கும் விசுவாசத்திற்குள் வந்தார். போதைப் பொருட்களிலிருந்து விடுதலைப் பெறுவது ஒரு நீண்டதும் சோர்வானதாவும் ஆனால், தேவனுடைய உதவியாலும், இயேசுவை விசுவாசிக்கும் நண்பர்களின் ஆதரவோடும் அவர் சுத்தமாகிவிட்டடர். டோவெய்ன் கேசினோ கட்டிப் பத்து வருடங்கள் கழித்து அவரும் மற்றவர்களும் சேர்ந்து அந்த குடிசையை ஒரு ஆலய வீடாக மாற்றினர். ஒரு காலத்தில் இருண்ட மற்றும் தடை செய்யப்பட்டதாக இருந்த இடம் இப்போது ஜெபிக்கும் மற்றும் ஆராதனைச் செய்யும் இடமாகியது.

இந்த ஆலயத்தின் தலைவர்கள், எரேமியா 33ல், டோவெய்ன் மற்றும் முன்னாள் கேசினோவுக்கு செய்ததைப் போல, தேவன் மக்களையும், இடத்தையும் எவ்வாறு குணப்படுத்தி மீட்டெடுக்க முடியும் என்பதைக் காண்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி, சிறைப்பிடிக்கப்பட்ட தேவமக்களிடம் பேசி, நகரம் காப்பாற்றப்படாது என்றாலும், தேவன் தம்முடைய ஜனத்தை குணமாக்கி அவர்களைக் கட்டுவித்து, அவர்களுடைய பாவங்களற அவர்களை சுத்திகரிப்பேன் என்று பேசினார் (எரே. 33:7,8). அப்பொழுது அந்த நகரம் அவருக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும், புகழ்ச்சியாயும், மகிமையுமாய் இருக்கும் (எரே. 33:9).

இதயத்தை உடைக்கும் பாவத்தைப்பற்றி நாம் விரக்தியடைந்து மனக்கசப்புடன் இருக்கும்போது, அவர் மேனன்பெர்க்கில் கொல்லைப்புறத்தில் செய்தது போல, தேவன் சுகத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வர நாம் தொடர்ந்து ஜெபிப்போம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.