அநேக மரங்கள் 500 ஆண்டுகளையும் அதற்கும் மேலாகவும் தாண்டி வாழ்கின்றன. ஆரம்பத்தில் அவற்றின் வளைந்த கிளைகள் உயரமாகவும் படர்ந்தும் காணப்படும். அவற்றின் இலைகளுக்கு ஊடாக குளிர்ந்த காற்று வீசும், சூரிய கதிர் அந்த இடைவெளியில் ஊடுருவி, மரத்தின் அடியில், அசைந்தாடும் நிழலைத் தோற்றுவிக்கும். தரைக்கு அடியில்தான் மிகவும் விரிவடைந்த வேர்த் தொகுதி காணப்படுகின்றது. இது, மரத்திலிருந்து செங்குத்தாக கீழ் நோக்கி வளர்ந்து, தான் சார்ந்து வாழக் கூடிய ஊட்டச்சத்தைத் தேடுகின்றது. அந்த ஆணிவேரிலிருந்து ஏராளமான கிளைவேர்கள் தோன்றி, கிடைமட்டமாக பரவுகின்றது. இவை மரத்திற்குத் தேவையான நீர் சத்தையும் ஊட்டத்தையும் வாழ் நாள் முழுவதும் கொடுக்கின்றன. இந்த வலைப் பின்னல் போன்ற வேர்த் தோகுதி, மரத்தைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து, மரத்தைத் தாங்கிப் பிடிப்பதோடு, அதன் தண்டு தொகுதியை உறுதியாக நிறுத்தும் நங்கூரம் போல செயல் படுகின்றது.

இந்த பிரமாண்டமான மரத்தைப் போல, நமக்கு வாழ்வு தரும் வளர்ச்சி மேற்புறதிற்கு உள்ளே நடைபெறுகின்றது. இயேசு விதைப்பவன் உவமையை தன்னுடைய சீஷர்களுக்கு விளக்கிய போது, நாம் ஒவ்வொருவரும் பிதாவோடு, தனிப்பட்ட முறையில் உறுதியாக நிலைத்திருக்கும் உறவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார். நாம் வேதாகமத்தின் மூலம், தேவனைக் குறித்த அறிவில் வளரும் போது, நம்முடைய விசுவாச வேர்களை பரிசுத்த ஆவியானவர் தாங்கிப் பிடிப்பார். மாறுகின்ற சூழலைக் கொண்டுள்ள வாழ்வில் சோதனைகளோ, துன்பங்களோ, கவலையோ எது வந்த போதும், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு தேவன் உதவி செய்கின்றவராய் இருக்கின்றார் (மத்.13:18-23).

நம்முடைய அன்புத் தந்தை அவருடைய வார்த்தைகளால் நம்முடைய இருதயத்தை பெலப்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய குணத்தை மாற்றுகின்றார். நம்முடைய ஆழ்ந்த வேர் கொண்ட விசுவாசம், நம்மில் கனிகளை உருவாக்கும், இதனை நம்மைச் சுற்றிலும் இருப்பவகள் காண்பர்.