1840 ஆம் ஆண்டு, மின்சாரக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அநேக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. நாம் இப்பொழுது, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும், மடிக்கணினிகளிலும் நேரத்தைப் பார்க்கின்றோம். வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது, நம்முடைய “ஓய்வு நேர” நடையின் வேகம் கூட அதிகரித்து விட்டது, முக்கியமாக, பட்டணங்களில் இந்நிலையைக் காணலாம். இது நம்முடைய உடல் நிலையை பெரிதும் பாதிக்கும் என அறிவாளிகள் சொல்கின்றார்கள். “நாம் வேக வேகமாக பயணம் செய்கின்றோம், நம்மால் இயன்ற மட்டும், சீக்கிரமாக மக்களைச் சந்திக்கின்றோம். எல்லா காரியங்களும் இப்பொழுதே நடந்து விட வேண்டுமென, நம்மை நினைக்கத் தூண்டுகின்றது” என்கின்றார், ஓர் அமெரிக்க பேராசிரியர்.

வேதாகமத்திலுள்ள மிகப்பழமையான சங்கீதங்களில் ஒன்றினை எழுதிய மோசே, நேரத்தைக் குறித்து சி ந்திக்கிறார். வாழ்க்கையின் வேகத்தை தேவன் கட்டுப்படுத்துகிறார், என அவர் கூறுகின்றார். “உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள் போலவும், இராச்சாமம் போலவும் இருக்கிறது” என எழுதுகிறார் (சங்.90:4).

காலத்தைக் கையாளுதலின் இரகசியம், வேகமாகச் செல்வதிலோ அல்லது மெதுவாகச் செல்வதிலோ இல்லை. அது எப்பொழுதும் தேவனோடிருத்தலாகும். அவரோடு அதிக நேரம் செலவிடுதலாகும். அப்படியாகும் போது, நாம் தேவனோடும், நம்மை உருவாக்கியவரோடும், (139:13) நாம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையும், திட்டங்களையும் அறிந்திருக்கிறவரோடும் ஒருமித்து செயல் பட ஆரம்பிப்போம். (வ.16)

இப்பூமியில், நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆனாலும் நம்முடைய நாட்களை, நாம் ஞானத்தோடு திட்டமிடலாம். வெறுமனே கடிகாரத்தை கவனித்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளையும் தேவனுடைய கரத்தில் கொடுத்து விடலாம். மோசே சொல்வது போல, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் (90:12) அப்பொழுது நாம் இப்பொழுதும், எப்பொழுதும் சதாகாலங்களிலும் தேவனோடு இருப்போம்.