கலிபோர்னியாவில், பாஜா என்ற இடத்தில் கடலுக்கடியில் ஏறத்தாள நாலாயிரம் அடிகளுக்கு கீழே மிகவும் அரிதான ஜெல்லி மீன்கள் நீரோட்டத்தோடு சேர்ந்து ஆடிக்களிக்கும். கரிய கடல்நீரின் பின்னணியில் அவற்றின் உடல் நீலம், ஊதா, இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் பிரகாசமாக மின்னும், அவற்றின் மணிக்கூண்டு போன்ற பை அமைப்பு விரியும் போது விழுதுகளும் தனிமையாக அசைந்தாடும். நான் இந்த ஹெலிட்ரேபிஸ் மாசி வகை ஜெல்லி மீன்களைப் பற்றிய காட்சிகளை நேஷனல் ஜியோக்ரபிக் படத்தொகுப்பில் பார்த்து வியப்படைந்தேன். இந்த வழுவழுப்பான மீன் இனத்திற்கு தேவன் குறிப்பிட்ட வகை அழகினைத் தந்துள்ளதை நினைத்துப் பார்த்தேன். அக்டோபர் 2017 கணக்கெடுப்பின் படி தேவன் இன்னும் 2000க்கும் மேலான ஜெல்லி மீன் வகைகளைப் படைத்துள்ளார் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேவனே நம்முடைய படைப்பாளர் என நாமறிந்தும். வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆழ்ந்த உண்மைகளை நாம் அதிக நேரமெடுத்து ஆராய்ந்து உணருகிறோமா. ஆராய்ந்து உணர நமது வேகம் மிகவும் குறைந்து காணப்படுகின்றது. நம்முடைய அற்புதமான தேவன் ஒளியையும், வெவ்வேறு வகையான ஜீவ ஜந்துக்களையும் இந்த உலகில் தன்னுடைய வார்த்தையின் வல்ல படைப்பாற்றலால் உருவாக்கினார். “தேவன் மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும்… சிருஷ்டித்தார்” (ஆதி. 1:21). ஆதியில் தேவன் படைத்த படைப்புகளின் ஒரு சிறிய பகுதியைத்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

தேவன் ஒவ்வொரு மனிதனையும் ஒரு நோக்கத்தோடு படைத்தார். நாம் இவ்வுலகில் முதல் மூச்சினை எடுக்கும் முன்பே நம் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நோக்கத்தை வைத்தார் (சங். 139:13-16). நாம் தேவனின் படைப்பாற்றலை போற்றும் போது, அவர் நமக்கு புதியவற்றைச் சிந்திக்கவும், உருவாக்கவும் வெவ்வேறு வகைககளில் உதவுகின்றதையும் எண்ணி மகிழ்வோம்.