நான் காரின் கதவை மூடிவிட்டு, என்னுடைய பள்ளியினுள் நுழைந்த போது, “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று என் தந்தை என்னிடம் கூறினார். அப்பொழுது நான் 6ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இதே காட்சியைத் தான் ஒவ்வொரு காலையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தோம். நாங்கள் பள்ளியை அடைந்தோம். என் தந்தை, “இன்று நல்ல நாளாயிருக்கட்டும், நான் உன்னை நேசிக்கிறேன்” என்றார். நான் “பை” என பதில் கூறிவிட்டுச் சென்றேன். என் தந்தையின் மேல் நானொன்றும் கோபத்திலில்லை, அவரைப் புறக்கணிக்கவுமில்லை. நான் என்னுடைய சிந்தனையில் மூழ்கியிருந்தேன், எனவே அவருடைய அன்பு வார்த்தைகளைக் கவனிக்கவில்லை. எப்படியிருந்தாலும் என்னுடைய தந்தையின் அன்பு விடாப்பிடியாக இருந்தது.

தேவனுடைய அன்பும் இதே போன்றுதான். உண்மையில் இதையும் விட மேலான அன்பு அது. அது என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பு. இத்தகைய அன்பினைப் பற்றி பழைய ஏற்பாட்டில், சங்கீதம் 136ல் இருபத்தாறு முறை கூறப்பட்டுள்ளது. எந்த வார்த்தையாலும் அந்த அன்பின் ஆழத்தை முழுமையாக விளக்க முடியாது. நாம் இதனை இரக்கம், அன்பு கனிந்த கருணை, கிருபை, உண்மையான அன்பு என பல வகைகளில் விளக்கலாம். இந்த அன்பு, உடன்படிக்கையோடு இணைந்த அன்பு, உண்மையும் நம்பிக்கையும் கலந்த அன்பு. தேவ ஜனங்கள் பாவம் செய்யம் போதும் தேவன் அவர்கள் மீதுள்ள அன்பில் உண்மையுள்ளவராயிருந்தார். விடாப்பிடியான அன்பு என்பது தேவனுடைய குணாதிசயத்தோடு ஒன்றியது (யாத். 34:6).

நான் குழந்தையாயிருந்த போது என்னுடைய தந்தையின் அன்பு எனக்குக் கட்டாயமாகத் தரப்படும் எனக் கருதிக் கொண்டேன். இதே போன்று இப்பொழுதும் அத்தகைய அன்பு என் பரலோகத் தந்தையிடம் உண்டு. நான் என்னுடைய தந்தையின் வார்த்தையைக் கவனிக்கத் தவறி, அவருடைய வார்த்தைக்கு பதில் கூற மறந்துவிடுகின்றேன், நன்றியோடிருக்கத் மறந்துவிடுகிறேன். ஆனாலும் என் தேவனுடைய அன்பு விடாப்பிடியாகவுள்ளது என்ற உண்மை என் வாழ்விற்கு உறுதியான அஸ்திபாரமாகவுள்ளது.