சிறுமியாக இருந்தபோது, எங்கள் ஊரின் சிறிய நூலகத்துக்குச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நாள் வளர் இளம் பருவத்தினருக்கான புத்தகங்கள் இருந்த பகுதியைப் பார்த்தபோது, அதில் இருந்த ஒவ்வொரு புத்தகத்தையும் படிக்கமுடியும் என்று நினைத்தேன். என்னுடைய ஆர்வத்தில், நூலகத்தில் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கும் வழக்கம் இருப்பதை மறந்துவிட்டேன். நான் அதிக முயற்சி செய்தாலும், மிக அதிகமான புத்தகங்கள் இருந்ததால் என்னால் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை.

அதிகமான புத்தக அலமாரிகளில், புதிய புத்தகங்கள் சேர்க்கப்படுகின்றன. யோவான் அப்போஸ்தலர் இத்தனை புத்தகங்களைப் பார்த்து ஆச்சரியப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் அவர் எழுதிய யோவான்; 1, 2 & 3 யோவான்; மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் ஆகிய புத்தகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டன.

இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியங்களை (1 யோவான் 1:1-4) அருகில் இருந்து பார்த்ததை கிறிஸ்தவர்களுக்குத் தெரிவிக்க, ஆவியானவரால் ஏவப்பட்டு, யோவான் அந்த புத்தகங்களை எழுதினார். ஆனால் இயேசுவின் ஊழியங்களின், அவர் போதனைகளின் ஒரு சிறு பகுதியே யோவானின் புத்தகங்களில் உள்ளன. இயேசு செய்த அனைத்தையும் எழுதினால் “எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று” (யோவான் 21:25) யோவான் கூறினார்.

யோவான் சொன்னது இன்றைக்கும் பொருந்தும். அநேக புத்தகங்கள் இயேசுவைப்பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இயேசுவின் அன்பையும், கிருபையையும் குறித்த ஒவ்வொரு சம்பவத்தையும் இந்த உலகத்தின் நூலகங்களில் அடக்கமுடியாது. மற்றவர்களோடு பகிர்வதற்கு நமது சொந்த அனுபவங்களும் உண்டு என்பதாலும், அவற்றை நாம் சதாகாலமும் பறைசாற்ற முடியும் என்பதாலும் நாம் சந்தோஷப்படலாம் (சங்கீதம் 89:1).