நான் தபால் அலுவலகத்தினுள் மிக அவசரமாக நுழைந்தேன். நான் அன்று செய்து முடிக்க வேண்டிய அநேகக் காரியங்களைக் கொண்ட பட்டியலை வைத்திருந்தேன். ஆனால், நான் அங்கு நுழைந்த போது வாசல் வரையும் நீண்டிருந்த வரிசையைக் கண்டு விரக்த்தியடைந்தேன். “வேகமாகக் காத்திரு” என நான் முணு முணுத்துக் கொண்டே, என் கடிகாரத்தைப் பார்த்தேன்.

என்னுடைய கரங்கள் இன்னமும் வாயில் கதவைத் தொட்டுக் கொண்டிருக்க, ஒரு முதியவர் என்னிடம் வந்து “இந்த நகலிடும் கருவி வேலை செய்யவில்லை” என்று கூறி எனது பின் பக்கத்திலிருந்த அந்த இயந்திரத்தைக் காட்டினார். “அது என்னுடைய பணத்தை எடுத்துக் கொண்டது. இப்பொழுது என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றார். உடனே நான் தேவன் எதைச் செய்ய விரும்புகிறார் என்று தெரிந்து கொண்டேன். நான் என் வரிசையைவிட்டு வெளியே வந்து, பத்து நிமிடங்களுக்குள் அந்தப் பிரச்சனையை சரி செய்ய முடிந்தது.

அந்த மனிதன் எனக்கு நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டார். நான் எனது வரிசையில் போய் நிற்க திரும்பியபோது, அது அத்தனையும் போய்விட்டிருந்தது. நான் நேரடியாக சேவை கவுன்டருக்கு சென்றுவிட்டேன்.

அன்றைய அநுபவம், இயேசுவின் வார்த்தைகளை என் நினைவுக்குக் கொண்டு வந்தது. “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக். 6:38).

என்னுடைய காத்திருத்தல் மிகவும் சிறியதாகத் தோன்றியது. ஏனெனில் என்னுடைய அவசரத்தில் தேவன் குறிக்கிட்டார். என்னுடைய கண்களை பிறருடைய தேவையின் மீது திருப்பி, அவர்களுக்கு என்னுடைய நேரத்தைக் கொடுத்த போது, அவர் எனக்கொரு பரிசு வழங்கினார். அது ஒரு பாடம். நான் என் கடிகாரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதனை நினைத்துக் கொள்வேன் என நம்புகிறேன்.