யார் அனைவரையும் கட்டித் தழுவுவார்?”

என்னுடைய நண்பன் ஸ்டீவ் தனக்குப் புற்றுநோய் என்ற செய்தியைக் கேட்டபோது, சில நாட்களுக்குத் தன்னால் ஆலயத்திற்கு வரமுடியாது என்று எண்ணியபோது இக்கேள்வியைக் கேட்டான். ஸ்டீவ் அனைவரையும் அன்போடு வரவேற்பவர், நட்புணர்வோடு வாழ்த்துபவர், உள்ளார்ந்த அன்போடு கைகுலுக்கி, சிலரை பரிசுத்த கட்டிப்பிடித்தலோடும் வரவேற்று ரோமர் 16:16ல் குறிப்பிட்டுள்ள, “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்” என்ற வார்த்தையைச் செயல்படுத்திக் காட்டுபவராக காணப்பட்டார்.

இப்பொழுது நாங்கள் ஸ்டீவ் குணமடைந்து விட வேண்டுமென ஜெபிக்கின்றோம். தான், அறுவை சிகிச்சை, மேலும் சில சிகிச்சைகளுக்குட்பட வேண்டியுள்ளதால் சிலகாலம் ஆலயத்திற்கு வரமுடியாது எனக் கூறியுள்ளார். அவருடைய மனமார்ந்த வரவேற்பையும் வாழ்த்துக்களையும் நாங்கள் இழந்து நிற்கின்றோம்.

நம்மில் அனைவரும் ஸ்டீவைப் போன்று வெளிப்படையாக ஒருவரையொருவர் வாழ்த்த முன் வருவதில்லை. ஆனால், பிறர்மீதுள்ள அவருடைய கரிசனை நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியை நினைவுபடுத்துகின்றது. பேதுரு சொல்வதைக் கனிப்போமாகில், “முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்” (1 பேது. 4:9; பிலிப். 2:16) என்கின்றார். இவையாவும் அன்பையே அடிப்படையாகக்கொண்டது. முதலாம் நூற்றாண்டின் உபசரணையில், வழிப்போக்கர்களுக்கும் தங்குவதற்கு இடமளித்து வரவேற்று வாழ்த்தினர்.

நாம் பிறரோடு அன்போடு உறவாடும்போதும், அன்போடு அரவணைக்கும் போதும் அல்லது ஒரு புன்முறுவல் செய்யும் போதும், “எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்து மூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக” (1 பேது. 4:11) என்பதை நிறைவேற்றுபவர்களாவோம்.