எங்களுடைய பேத்தி சாரா மிகவும் சிறியவளாக இருந்தபோது, நாம் மரித்தபின் என்ன நடக்கும் என்று எனக்கு விளக்கினாள். “உங்களுடைய முகம் மட்டும்தான் மோட்சத்திற்குச் செல்லும். உங்கள் சரீரம் செல்வதில்லை. அங்கு உங்களுக்கு ஒரு புதிய சரீரம் கொடுக்கப்படும். ஆனால், அதே முகம்தான் இருக்கும்: என்றாள்.

நித்திய வாழ்வினைக் குறித்து சாராவின் புரிந்து கொள்ளல் குழந்தைத்தனமானது. ஆனாலும், அவள் உள்ளான ஓர் உண்மையை நன்கு புரிந்து கொண்டிருக்கின்றாள். ஒரு வகையில் நம்முடைய முகங்கள்தான், காணப்படாத நம் ஆன்மாவின் ஒரு பிரதிபலிப்பாகும்.

நம்முடைய தொடர்ச்சியான கோபமான பார்வை சில நாட்களில் நம் முகத்தில் படிந்துவிடும் என்று என் தாயார் சொல்வதுண்டு. அவர்கள் ஞானத்தோடுதான் கூறியிருக்கிறார்கள். கவலை தோய்ந்த புருவங்கள், கோபம் நிறைந்த வாய், அலட்சியப்பார்வை ஆகியவை பரிதாபநிலையிலிருக்கின்ற ஆன்மாவை வெளிப்படுத்துகின்றன. மாறாக, வெளிப்புற சுருக்கங்களும், தழும்புகளும், மற்ற தோற்றத்தில் மாற்றங்கள் யாவும் இருப்பினும், கனிவான கண்களும், மென்மையான தோற்றமும், மலர்ந்த வரவேற்கும் புன்னகையுமே உள்ளார்ந்த மாற்றத்தின் வெளிப்பாடுகளாகும்.

நாம் பிறக்கும் போதிருந்த முகத்தை மாற்ற முடியாது. ஆனால், நாம் எத்தகைய மனிதனாக வளர்கிறோம் என்பதை மாற்ற முடியும். நாம் தாழ்மை, பொறுமை, இரக்கம், சகிப்புத்தன்மை, நன்றியுணர்வு, மன்னிப்பு, சமாதானம் மற்றும் அன்பு (கலா. 5:22-26) ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.

தேவனுடைய கிருபையினால் அவருடைய சித்தமான நேரத்தில் நானும் நீயும் அவரைப் போல உள்ளான மாற்றத்தைப் பெற்றுக்கொள்வோம். அவருடைய தன்மையை நம்முடைய வயதான முகங்கள் பிரதிபலிக்கும் என்று ஜான்டோன் (1572-1631) என்ற ஆங்கில கவிஞர் “நம்முடைய வயதான நாட்களிலேயே நம்முடைய அழகு வெளிப்படும்” என்று கூறினார்.