நான் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, விளையாட்டுத் துறையிலுள்ள ஒரு பயிற்சியாளர் நாங்கள் ஓட்டப்பந்தயத்திற்குச் செல்வதற்கு முன்பு ஓர் அறிவுரையைக் கூறினார். எப்பொழுதும் “முதலாக ஓட முயற்சிக்காதே. முன்னிருப்பவர்கள் எளிதில் ஆற்றலை இழந்து விடுவர்” அதற்குப் பதிலாக மிக வேகமாக ஓடும் நபருக்குப் பின்னாக மிக அருகில் ஓட வேண்டும். அவர்கள் தாங்கள் ஓடும் வேகத்தை நிதானித்துக் கொண்ட போது, நான் என்னுடைய மன, உடல் ரீதியாக முழு பெலத்தையும் சேமித்துக் கொண்டு ஓடினால் வெற்றியாக முடிக்க உதவியாயிருக்கும்.

வழி நடத்துதல் என்பது மிகவும் சோர்வடையச் செய்யும் செயல். ஆனால் பின்பற்றிச் செல்லல் என்பது எளிதாக இருக்கும். இதனைப் புரிந்து கொண்டதும் என்னுடைய ஓட்டத்தில் முன்னேற்றம் இருந்தது.  இதனை கிறிஸ்தவ சீடத்துவத்திலும் பயன்படுத்தலாம் என்பதைப் பல நாட்களுக்குப் பின் உணர்ந்தேன். இயேசுவின் மீது நம்பிக்கையாயிருப்பது என்பது மிகவும் கடினமானது என நினைக்கும்படித் தூண்டப்பட்டேன். ஒரு கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்று என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளை நான் அடைய முயற்சித்தபோது, எளிதாக இயேசுவைப் பின்பற்றிச் செல்வதால் கிடைக்கும் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டேன் (யோவா. 8:32, 36).

நம்முடைய வாழ்வை நடத்த நாமே தீர்மானிக்கும் போது தேவன் நாம் உயரக் கூடிய ஒரு திட்டத்தைத் துவக்குவதில்லை. ஆனால் நாம் தேவனைத் தேடும் போது நாம் தேடுகின்ற இளைப்பாறுதலை அவர் தருகின்றார் (மத். 11:25-28) அநேக மதப்போதகர்கள் கடுமையான வேத ஆராய்ச்சியையும், விளக்கமான  சட்ட திட்டங்களையும் வலியுறுத்துவது போலில்லாமல், இயேசுவின் போதனைகள் மிக எளிதானவை. இயேசுவை தெரிந்து கொண்டால், பிதாவை அறிந்து கொள்ளலாம் (வச. 27) நாம் அவரைத் தேடினால் பாரமான சுமைகளை அவர் தூக்கிக் கொள்கின்றார் (வச. 28-30). நமது வாழ்வும் மாற்றமடையும்.

சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள நம் இயேசுவைப் பின்பற்றினால் (வச. 29) அது நமக்கு சுமையாக இருப்பதில்லை. அதுவே நம்பிக்கையின் வழியும் சுகவாழ்வுமாகும். அவருடைய அன்பில் நாம் இளைப்பாறும் போது நாம் எத்தனை பெரிய விடுதலையை உணர்கின்றோம்.