விஞ்ஞானிகள் நேரத்தைப் பற்றி அதிக கவனம் கொண்டிருப்பார்கள். 2016-ஆம் ஆண்டின் இறுதியில், மேரிலாண்ட் பட்டணத்தின் கோட்டார்ட் விண்வெளி மையத்தைச் சார்ந்த பிரமுகர்கள் அந்த வருடத்துடன் ஒரு வினாடியை கூட்டினார்கள். அந்த வருடம் ஒருவேளை உங்களுக்கு சற்றே நீண்டதாய் இருந்திருந்தால், உங்கள் கணிப்பு சரியே.

அவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏனெனில், பூமியின் சூழற்சி வேகம் காலத்தின் ஓட்டத்தில் குறைவதால், வருடங்கள் வழக்கத்தைவிட சற்றே நீண்டதாய் அமையும். மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கருவிகளை கவனிக்க விஞ்ஞானிகள் நேரத்தை மில்லி செகன்ட் அளவுக்கு துல்லியமாய் கணக்கிடவேண்டும். ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கவே இவர்கள் இப்படி துல்லியமாய் செயல்படவேண்டியுள்ளது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.

நம்மில் அநேகருக்கு, ஒரு நொடி கூடுவதும் குறைவதும் பெரிய வித்தியாசத்தை உண்டாக்குவதில்லை. ஆனாலும், வேதத்தின் அடிப்படையில், நம்முடைய நேரமும் அதனை நாம் பயன்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானது. 1 கொரிந்தியர் 7:29-ல், பவுல் “இனிவரும் காலம் குறுகினது” என்றே நமக்கு நினைப்பூட்டுகிறார். தேவனுடைய பணியைச் செய்வதற்கான நேரம் “குறைவானது”, ஆகையால் நாம் நம் நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டும். “நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் (எபே. 5:16)” என்று பவுல் வலியுறுத்துகிறார்.

விஞ்ஞானிகளைப் போல் நாமும் ஒவ்வொரு வினாடியையும் கணக்கிடவேண்டும் என்பதல்ல அதன் பொருள். வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையைப் (சங். 39:4) பார்க்கும்போது, நம்முடைய நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டியதின் முக்கியத்துவத்தை அது நமக்கு நினைப்பூட்டுகிறது.