எனக்கு பதிமூன்று வயதிருக்கும்போது, என் பள்ளி மாணவர்கள் இல்லற பொருளாதாரம், கலை, பாடகர்குழு மற்றும் தச்சுவேலை எனும் தலைப்புகளில் நான்கு ஆராய்ச்சி பாடங்களை படிக்கவேண்டியதாயிருந்தது. பாடகர்குழு பாடத்தின் முதல்நாளில், பயிற்றுனர் ஒவ்வொரு மாணவனையும் பியானோ இசைக்கு பாடவைத்து அவர்களுடைய குரலை கேட்டு அவரவரின் சுருதிக்குத் தக்க அவர்களை பிரித்து ஒரு அறையில் அமர்த்தினார். என்னுடைய முறை வந்தபோது, பியானோவில் அவர்கள் திரும்ப திரும்ப வாசித்த இசைக்குறிப்புகளுக்கு நான் பாடினாலும், எந்த ஒரு பிரிவிற்கும் நேராக என்னை அவர் நடத்தவில்லை. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின், ஆலோசனை மையத்திற்கு சென்று வேறொரு பாடத்தை தெரிந்தெடுக்கச் சொன்னார். அந்த நிமிடத்திலிருந்து, நான் இனி பாடக்கூடாது, என் குரல் எந்த பாடலிலும் தொனிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேலாக இதே எண்ணத்தை கொண்டவனாக இருந்த நான் என் வாலிப வயதில் ஒருமுறை சங்கீதம் 98-ஐ வாசிக்கலானேன். அதன் ஆக்கியோன் “கர்த்தருக்குப் பாடுங்கள்” (சங். 98:1) என்கின்ற அழைப்புடன் அதனை ஆரம்பிக்கிறார். பாடவேண்டிய காரணத்திற்கும் நம் குரலின் தரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் தம் பிள்ளைகள் பாடும் பாடல்களிலே அவர் பிரியப்படுகிறார். “அவர் செய்த அதிசயங்களுக்காக” (வச. 1) நாம் அவரைப் பாடவேண்டும் என்று நம்மை அழைக்கிறார்.

கர்த்தரை நாம் நம் முழுசிந்தையோடும், பாடல்களோடும் ஆனந்தகளிப்புடன் துதிப்பதற்கு இரண்டு அற்புதமான காரணங்களை சங்கீதக்காரர் குறிப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நிறைவேற்றும் இரட்சிப்பின் கிரியை மற்றும் இடைவிடாமல் தொடரும் அவருடைய உண்மைக்காகவும் அவரைப் பாடவேண்டும். தேவனுடைய பாடகர்குழுவில், அவர் நமக்காய் செய்த அதிசயங்களைப் பாடுவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு.