என்னுடைய சிநேகிதி தான் இருக்கும் பட்டணத்தை விட்டு இடம் பெயர்ந்து 1000 மைல்களுக்கப்பாலுள்ள வேறொரு பட்டணத்திற்குச் செல்ல தயாரானாள். அவளும், அவளுடைய கணவரும் புதிய இடத்தில் குடியேறுவதற்கான வேலைகளை தங்களுக்குள்ளே பிரித்துக் கொண்டனர். அவர் புதிய குடியிருப்பில் பொருட்களை அடுக்குவதையும், அவள் தங்கள் உடைமைகளைக் கட்டுவதையும் எடுத்துக் கொண்டனர். புதிய குடியிருப்பை முன் பார்வையிடாமலேயே அல்லது வீடு தேடுவதில் பங்கு பெறாமலேயே எப்படி இடம் பெயர முடிகிறது என்று அவளுடைய திறமையை வியந்தேன். அவளுடைய சவாலை அவள் ஒத்துக் கொண்டதோடு அவள் சொன்னாள், தன்னுடைய கணவனை நம்புவதாகவும், தன்னுடைய விருப்பம், தேவைகள் யாவையும் இருவரும் சேர்ந்திருந்த இந்த வருடங்களில் அவர் நன்கு தெரிந்து கொண்டு, என்னை கவனித்து வருகிறார் எனவும் பதிலளித்தாள்.

மேலறையில் இயேசு தன்னுடைய சீஷர்களோடு தான் காட்டிக்கொடுக்கப்பட போவதையும், அவருடைய மரணத்தையும் குறித்துப் பேசினார். இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இருண்ட மணி நேரங்களைக் குறித்தும், அவருடைய சீடர்களையும் விட்டு விட்டு போய் விடுவார் என்பதையும் குறித்து இயேசு கூறுகின்றார். அவர்களிடம், தான் அவர்களுக்கு பரலோகத்தில் ஓர் இடத்தை ஆயத்தம் செய்யப் போவதாக உறுதியளித்து அவர்களைத் தேற்றினார். என்னுடைய சிநேகிதியின் கணவர் அவர்களுடைய புதிய வீட்டை அவர்கள் குடும்பத்திற்காக ஆயத்தம் பண்ணியது போல, இயேசுவும் அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு வீட்டை ஆயத்தம் செய்கின்றார். சீடர்கள் இயேசுவிடம் கேள்விகள் கேட்ட போது, அவர் அவர்களுக்கு தீர்க்கதரிசன நிறைவேறலையும் அவர் செய்த அற்புதங்களையும் அவர்கள் கண்டதையும் நினைப்பூட்டுகிறார். அவர்கள் இயேசுவின் சாவு, பிரிவின் நிமித்தம் வருத்தமடைந்தபோதும், அவர்களிடம் தான் அவர்களுக்குச் சொன்ன யாவும் நிறைவேறும் என வாக்களிக்கிறார்.

நம்முடைய இருண்ட நேரங்களின் மத்தியில் நாம் அவரை நம்பும்போது, அவர் நம்மை நன்மையான ஓரிடத்திற்கு நம்மை வழி நடத்துவார். நாம் அவரோடு நடக்கும் போது, அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மேலும் உணர்ந்து, அவரை நம்ப கற்றுக் கொள்வோம்.