“உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்புகிறாயா?” என என் சிநேகிதி கேட்டாள். அவளுடைய மகளின் சிறிய கரங்களிலிருந்த மிகப் பழங்கால முறையில், பழைய துணியால் தைக்கப்பட்ட ஒரு பொம்மையை, நான் பாராட்டியிருந்தேன். உடனே ஆர்வத்துடன் அதனுள்ளே என்ன இருக்கிறது என்பதைக் காண விரும்பி, ஆம் என பதிலளித்தேன். அவள் அந்த பொம்மையை, தலைகீழாகப் பிடித்து, அதன் பின்புறம் தைக்கப்பட்டிருந்த நளினமான இணைப்பானைத் திறந்தாள். அந்த துணியால் ஆன உடம்பிலிருந்து எமிலி ஒரு பொக்கிஷத்தை வெளியேயெடுத்தாள்; அது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக அவளுடைய குழந்தைப் பருவத்தில் அவள் நேசித்து வைத்திருந்த பழைய துணியால் ஆன ஒரு பொம்மை. வெளியேயுள்ள பொம்மை வெறும் கூடுதான். உள்ளேயுள்ள இந்த முக்கிய உட்பகுதி தான் அந்த பொம்மைக் கூட்டிற்கு உறுதியையும் வடிவத்தையும் கொடுத்துள்ளது.

கிறிஸ்துவின் வாழ்வு, சாவு, உயிர்ப்பு ஆகியவற்றைக் குறித்த உண்மையை ஒரு பொக்கிஷமாக விளக்குகிறார் அப்போஸ்தலனாகிய பவுல். இந்த பொக்கிஷம் தேவனுடைய ஜனங்களின் பெலவீனமான மனிதத்துவத்தில் சுமக்கப்படுகிறது. இந்த பொக்கிஷம் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நினைக்க முடியாத துன்பங்களிலும் அவருடைய பணியைத் தொடர்வதற்குப் பெலனளிக்கிறது. அப்படிச் செய்யும் போது அவருடைய ஒளியும், அவருடைய வாழ்வும் மனிதனின் பெலவினங்களாகிய உடைப்புகள் வழியே பிராகாசிக்கிறது. பவுல், நாம் சோர்ந்து போகாதிருக்க நம்மை ஊக்கப்படுத்துகின்றார்
(2 கொரி. 4:16).

அந்த ‘உள்ளான’ பொம்மையைப்  போன்று நம்பிக்கையுள்ள சுவிசேஷமாகிய பொக்கிஷம் நமது வாழ்விற்கு ஒரு நோக்கத்தையும் மன பெலத்தையும் கொடுக்கிறது. தேவனுடைய பெலன் நம்மூலம் வெளிப்படும்போது, இது தேவனுடைய “உள்ளே என்ன இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்கச் செய்யும். அப்பொழுது நாம் நம் உள்ளத்தைத் திறந்து, உள்ளேயிருக்கிறது வாழ்வு தரும் கிறிஸ்துவின் இரட்சிப்பாகிய வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்துவோம்.