அது ஒரு நீண்ட வேலைநாள். நான் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு நல்ல தந்தையாக மற்ற வேலைகளைத் துவக்குவதற்கான நேரம் அது. என் மனைவி, குழந்தைகளின் வரவேற்பு, அப்பா இரவு உணவுக்கு என்ன செய்வது? அப்பா, எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தரமுடியுமா? அப்பா, நாம் கால்பந்து விளையாடலாமா? என்பதாக அமைந்தது.

நான் சற்று நேரம் உட்கார எண்ணினேன். நான் ஒரு நல்ல தந்தையாக இருக்க சிறிது விரும்பியபோதும் என்னுடைய குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிபுரிய நான் விரும்பவில்லை. எங்கள் ஆலயத்திலுள்ள ஒருவரிடமிருந்து என் மனைவி பெற்றிருந்த ஒரு நன்றி அட்டையை அப்பொழுது நான் பார்த்தேன். அதில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு துவாலை, அழுக்கான செருப்புகள் அடங்கிய ஒரு படம் இருந்தது. அதன் அடிப்பகுதியில் லூக்கா 22:27ல் உள்ள வாசகம், “ நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறனே;” இருந்தது.

தாம் தேடவும் ரட்சிக்கவும் (லூக். 19:10) வந்தவர்களுக்குப் பணிவிடைக்காரனைப் போலிருந்தார் என்ற வார்த்தைகளே என்னுடைய அப்போதையத் தேவையாயிருந்தது. இயேசுவே தன்னுடைய சீடர்களின் அழுக்கடைந்த கால்களைக் கழுவுதலாகிய இழிவான வேலையைச் செய்ய சம்மதிக்கும் போது,
(யோவான். 13:1-17) நான் என் மகனுக்கு ஒரு குவளைத் தண்ணீரை முறுமறுக்காமல் கொடுக்கலாம். அந்நேரமே என் குடும்பத்தினரின் தேவைகளுக்கு பணிசெய்தவை ஒரு கடமையாகயல்ல, இயேசுவின் பணிவிடைகாரனின் உள்ளத்தை பிரதிபலிப்பவனாகச் செய்தேன். நம்மிடம் உதவிகள் கேட்கப்படும்போது, அவைகளை, தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பணிவிடை செய்து, தன்னுடைய ஜீவனையே நமக்காகத் தந்தவரைப் போல மாறுவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளாகக் கருதுவோம்.