எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ராண்டி கில்கோர்கட்டுரைகள்

இரகிசயம் அல்லாத

என்னுடன் பணிபுரியும் நபர் ஒருவர் என்னிடம் தான் இயேசுவுக்கு சொந்தமானவனல்ல எனக் கருதுவதாகக் கூறினான். அவன் தன்னுடைய வசதியான, பெருமைப்படக்கூடிய வாழ்வைக் குறித்து விளக்கியதோடு, அது அவனுக்குத் திருப்தியைத் தரவில்லை எனவும் கூறினான். “இங்கு என்னுடைய பிரச்சனை என்னவெனில், நான் நல்லவனாக வாழவிரும்புகிறேன். அதற்காக கவனமுன் செலுத்துகின்றேன். ஆனால், அது வேலை செய்யவில்லை, நான் எவற்றைச் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறேனோ அவற்றைச் செய்ய முடியவில்லை. எவற்றை நிறுத்த வேண்டுமென எண்ணுகிறேனோ, அவற்றையே தொடர்ந்து செய்கிறேன்” என்றான்.

“உங்களுடைய இரகசியம் என்ன என்று உள்ளார்ந்த ஆவலோடு கேட்டான். என்னிடம் இரகசியமேயில்லை. தேவன் என்னிடம் எதிர்பார்க்கும் தரத்தில் வாழும்படி என்னிடம் பெலனுமில்லை. எனவேதான் நமக்கு இயேசுவின் உதவி தேவை” என்றேன்.

நான் வேதாகமத்தை வெளியிலெடுத்து “அவன்” சொல்லிய வார்த்தைகளை அப்போஸ்தலனாகிய பவுலும் ரோமர் 7:15ல் கூறியுள்ளதைக் காண்பித்தேன். பவுலின் ஏமாற்றத்தைக் காட்டும் இந்த வார்த்தைகள், தங்களை தேவன் விரும்பும் நல்லவர்களாகக் காட்ட முயற்சித்து தோல்வியுற்ற கிறிஸ்தவர்களுக்கும், பெயர் கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமாயுள்ளது. அது உனக்கும் பொருத்தமாயிருக்கும் என நினைக்கிறேன். அப்படியானால் கிறிஸ்துவே நமது இரட்சிப்புக்கும் அதன் மூலம் கிடைக்கும் மாற்றங்களுக்கும் மூலக்காரணர் (ரோம. 7:25-8:2) என்ற பவுலின் வெளிப்பாடு உன்னை மெய்சில்ர்க்கச் செய்யும். நம்மில் முடியாததென்று நாம் மலைத்துப்போய் நிற்கின்ற காரியங்களை இயேசு நமக்காக ஏற்கனவே செய்து முடித்து நம்மை விடுவித்து விட்டார்.

நமக்கும, தேவனுக்குமிடையேயுள்ள தடுப்பு, பாவமாகிய தடுப்பு, தடுப்புசவர், நம்முடைய முயற்சியெதுவுமில்லாமலேயே உடைந்து நீக்கப்பட்டுள்ளது. நம்முடைய இரட்சிப்பையும், அதன் பலமான பரிசத்த ஆவியானவவரால், தரப்படுகின்ற வளர்ச்சிக்கேற்ற மாற்றங்களையும் தேவன் நம் அனைவருக்கும் தருகின்றனார். அவர் நம்முடைய ஆன்மாவின் கதவைத் தட்டுகின்றார். அவருடைய அழைப்புக்கு இன்றே பதில் கொடு. இதில் எந்த இரகசியமும் இல்லை. அவரே நம் பதிலாவார்.

நிச்சய நம்பிக்கை

ஜப்பான் சீனாவை 1940ஐ ஒட்டிய காலக்கட்டத்தில் தாக்கியபோது, டாக்டர். வில்லியம் வாலஸ் மிஷனரி மருத்துவராக சீனாவின் வசூ பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்டௌட் நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளராகப்  பணி செய்த அவர், தனக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றச்சொன்னார். காலாட்படையினரின் தாக்குதல்களைத் தவிர்க்க, அவர் ஆறுகளில் பயணம் செய்து மருத்துவப்பணிகளைத் தொடர்ந்தார்.

ஆபத்தான நேரங்களில், அவர் உயிரோடு இருந்தால், அவர் இரட்சகருக்காக செய்ய வேண்டிய வேலைகள் உண்டு என்பதை வாலஸுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றான பிலிப்பியர் 1:21 அவருக்கு நினைவுபடுத்தியது.  அவர் இறக்க நேர்ந்தால், கிறிஸ்துவுடனான நித்திய வாழ்வின் வாக்குத்தத்தம் அவருக்கு இருந்தது. 1951ஆம் ஆண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு, அவர் இறந்தபோது, இந்த வசனம் ஒரு விசேஷ அர்த்தத்தை வெளிப்படுத்தியது.

இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் விரும்பக்கூடிய ஆழ்ந்த பக்தியை பவுலின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. சோதனைகளையும், தேவனுக்காக ஆபத்துக்களையும்கூட எதிர்கொள்ள அவை நமக்கு உதவுகின்றன. பரிசுத்த ஆவியாலும், நமக்கு அருமையானவர்களின் ஜெபங்களாலும் நாம் பெற்றுக்கொண்ட பக்தி அது (வச. 19). அது ஒரு வாக்குறுதியும்கூட. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், அவருடைய சேவைக்காக நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கும்போது, நமக்கு நினைவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால் - இங்கு நம்முடைய வேலையும், வாழ்க்கையும் முற்றுப்பெறும்போது, இயேசுவுடனான நித்திய வாழ்க்கை நமக்குக் காத்திருக்கிறது என்ற சந்தோஷம் நமக்கு உண்டு.

கிறிஸ்துவுடன் நடப்பதற்கு ஒப்புக்கொடுத்த இருதயங்களோடும், அவருடனான நித்திய வாழ்விற்கான உறுதிமொழியின் மீதுள்ள கண்களோடும், நமது கடினமான தருணங்களிலும், நமது நாட்களும், நமது செயல்களும் ஆண்டவரின் அன்பால் மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக.

வீட்டிற்கு வழியைத் தேடுதல்

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் கடினமாக இருக்கும் போது, நாம் பிரமித்து, இந்தக் கஷ்டத்திற்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறோம். என்னுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், என் மனைவி ஒரு நாள் காலை தியானத்திற்குப் பின் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டாள். 'நாம் இருட்டான வேளையில் கற்றுக் கொள்ளும் பாடத்தை வெளிச்சத்திலும் மறக்கக் கூடாது என்று கர்த்தர்விரும்புகிறார்" என்று கூறினாள்.
 
பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஆசியாவில் கொடுமையான துன்பங்களை அனுபவித்ததை விளக்கிய பின், இதேபோன்ற சிந்தனையை பவுல் 2 கொரிந்தியர் 1ல் எழுதுகிறார். எப்படிப்பட்ட இருட்டான தருணங்களையும் ஆண்டவர் சரிசெய்ய முடியும் என்பதை கொரிந்து பட்டணத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறார். நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யத்தக்கதாக, எங்களுக்கு அவர் ஆறுதல் செய்கிறார் (வச. 4) என்று கூறுகிறார். பவுலும் அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளின் போது கர்த்தரிடத்தில்கற்றுக் கொண்டவற்றை கொரிந்து பட்டணத்தார் அதேபோன்ற கஷ்டங்களை சந்திக்கும் போது, ஆறுதல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் உபயோகப்படுத்தினர். கேட்க விருப்பமுடையவர்
களாய் இருந்தால், தேவன் நமக்கும் கற்றுத் தருகிறார். நம்முடைய சோதனைகளில் நாம் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு உதவ கற்றுத் தருவதன்மூலம் நம் சோதனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பார்.
 
நீங்கள் இப்போது இருட்டில் இருக்கிறீர்களா? பவுலின் வார்த்தைகளினாலும், அனுபவத்தினாலும் ஊக்கம் அடையுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களுடைய நடைகளை வழிநடத்துகிறார் என்றும், அவருடைய உண்மைகளை  உங்களுடைய இருதயத்தில் பதிக்கிறார் என்றும் நம்புங்கள். இதனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்களுடன் உங்களால் இதைப் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் முன்பு அங்கே இருந்ததால், வீட்டிற்கு வழி உங்களுக்குத் தெரியும்.
 

தன்னலமற்ற சேவை

ஒரு சிறிய கூட்ட மக்கள் திரண்டு நின்று அங்கு புல்தரையில் சரிந்துகிடந்த ஒரு பெரிய மரத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு முதிய பெண்மணி தன் ஊன்றுகோலில் சாய்ந்து நின்றபடி, முந்திய இரவில் வீசிய புயல் காற்று, நெடுநாட்களாக வளர்ந்திருந்த எங்களுடைய எல்ம் மரத்தைச் சாய்த்து விட்டதை விளக்கினார். மேலும் அவள் நடுங்கிய குரலோடும், உணர்ச்சி வசத்தோடும் “அது எங்களுடைய அழகிய கல்சுவரை உடைத்து விட்டது. நாங்கள் திருமணமாகி வந்தபோது என் கணவர் இந்த சுவரைக் கட்டுவித்தார். இந்தக் சுவரை அவர் மிகவும் நேசித்தார். நானும் அதனை நேசித்தேன். இப்பொழுது அவரைப் போன்று இதுவும் போய்விட்டது” என்றாள்.

அடுத்த நாள் காலை மரம் வெட்டும் குழுவினர் அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியைச் செய்வதை அவள்பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுடைய முகத்தில் ஒரு சிரிப்பு மலர்ந்தது. அந்த மரக்கிளைகளினூடே ஒரு பையன் அவளுடைய புல்தரையை சரி செய்து கொண்டிருந்தான். மேலும் இரு நபர்கள் அவள் நேசித்த அந்த கல் சுவரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தனர்.

நம்மைச் சுற்றியிருப்போரின் சோர்ந்த இருதயத்தைத் தூக்கி விடுதல் போன்றச் செயலை தேவன் அங்கீகரிக்கும் செயலாகத் தீர்க்கன் ஏசாயா விளக்குகின்றார். அந்த முதிய பெண்மணிக்கு அவள் விரும்பிய கல்சுவரை சரிசெய்து கொடுத்ததைப் போன்று, வெறுமனே ஆவிக்குரிய ஆராதனைசெய்வதைக் காட்டிலும் தன்னலமற்ற சேவைகளைப் பிறருக்குச் செய்வதை தேவன் அதிகம் விரும்புகின்றார் என இப்பகுதி நமக்குப் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை செய்யும் அவருடைய பிள்ளைகள் மீது தேவன் இருவகையான ஆசீர்வாதத்தைத் தருகின்றார். முதலாவது நம்முடைய மனப்பூர்வமான சேவையை நலிந்தோரும், தேவையுள்ளோரும் பெறுமாறு பயன்படுத்துகின்றார் (ஏசா. 58:7-10). இரண்டாவது தேவன் இத்தகைய சேவையில் முனைந்திருப்போரை கனப்படுத்துகின்றார். நம்முடைய சேவை மனப்பான்மையை மேலும் உருவாக்கி, அவருடைய .ராஜ்ஜியத்தில் வல்லமையான கருவியாக பயன்படுத்துவார் (வச. 11-12). இன்றைய நாளில் என்ன செயலைச் செய்யப்போகின்றாய்?

ஓவ்வொரு நொடிப் பொழுதும்

நான் அடாவைச் சந்தித்தபோது, அவள் தன்னுடைய மரித்துப்போன முழு குடும்பத்தையும், தன்னுடைய நண்பர்களையும் விட்டுவிட்டு ஒரு மருத்துவமனையில் தங்கியிருந்தாள். “முதுமை என்பதுதான் மிகவும் கடினமான பகுதி, நம்மைத் தனியே விட்டுவிட்டு ஒவ்வொருவராக வெளியேறுவதைப் பார்க்க வேண்டியுள்ளது” எனக் கூறினார். ஒரு நாள் நான் அடாவிடம் எது அவளுக்கு அதிக உற்சாகம் தருவதாக இருக்கின்றது?, எப்படி அவள் நேரத்தைச் செலவிடுகின்றாள் எனக் கேட்டேன். அவள் வேதாகமத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய பகுதியிலிருந்து (பிலி. 1:21) எனக்கு பதில் கொடுத்தாள். “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” என்றாள். மேலும், “ நான் இங்கிருக்கும் போதும் எனக்கு வேலைகளிருக்கிறது, நான் நன்றாயிருக்கும் போது, இங்கிருக்கின்ற மக்களோடு இயேசுவைப் பற்றி பேசுவேன், என்னால் முடியாத நாட்களில் நான் அவர்களுக்காக ஜெபிப்பேன்” என்றாள்.

பவுல் சிறைச்சாலையிலிருக்கும் போதுதான் பிலிப்பியருக்கு எழுதுகின்றார். நடைமுறையிலுள்ளவற்றை அவர் ஏற்றுக்கொள்ளும் போது தான், அது அநேக கிறிஸ்தவர்கள் தாங்கள் துன்பங்களைச் சகிக்கும் போது, அவர்களும் புரிந்துகொள்ள ஏதுவாயிருக்கிறது. நம்மைப் பரலோகம் வரவேற்பதாகத் தோன்றினாலும், இந்த உலகில் நாம் செலவிட்ட நேரம் தேவனுக்கு முக்கியமானது.

பவுலைப் போன்று அடாவும் தன்னுடைய ஒவ்வொரு மூச்சையும், தேவனுக்குச் சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக உணர்கின்றார். எனவே அடா தன் நாட்களை பிறரை நேசிப்பதிலும், தன்னுடைய இரட்சகரிடம் அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் செலவிடுகின்றாள்.

நம்முடைய இருண்ட நாட்களிலும், கிறிஸ்தவர்கள் நித்தியத்தில் தேவனோடு மகிழ்ச்சியில் வாழ்வோம் என்ற வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொள்ளலாம். இங்கு வாழும் போதும் நாம் அவரோடுள்ள உறவினை அநுபவிக்கின்றோம். அவர் நம்முடைய ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மணித்துளியையும் முக்கியமானதாக்கித் தருவார்.

எதிர்பாராத ஞானம்

சில ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பெண்மணி தன்னுடைய இளம் வயது மகன் ஒரு வன்முறை செயலைப் பற்றிய செய்தி தொகுப்பினைப் பார்ப்பதாகவும், தான் உடனடியாக அந்த ஒளித்தடத்தை மாற்றி விட்டதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள். மேலும், நீ இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை என அவனிடம் கூறினாள். நாங்கள் இதனைக் குறித்து விவாதித்தோம். அவனுடைய மனதை ‘‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ...” (பிலிப். 4:8) அவற்றால் நிரப்ப வேண்டும் என்று கூறினாள். இரவு உணவிற்குப் பின் அவளும் அவளுடைய கணவரும் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்களின் ஐந்து வயது பெண் டெலிவிஷனை நிறுத்திவிட்டாள். ‘‘நீங்கள் இத்தகைய காட்சிகளைப் பார்க்கத் தேவையில்லை” என்று அம்மாவைப் போன்ற குரலில் கூறினாள். மேலும், இப்பொழுது அந்த வேத வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்” என்றாள்.

மூத்தோர்களாகிய நாம் சிறுவர்களையும்விட மேலாகச் செய்திகளைக் கிரகிக்கவும் அவற்றை மனதில் இருத்தவும் முடியும். எனினும், அந்த தம்பதியினரின் பெண் பிள்ளை வேடிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் தன்னுடைய தாயின் அறிவுரைகளை செயலில் வெளிப்படுத்தினாள். நன்கு முதிர்ச்சி பெற்ற பெரியவர்கள்கூட வாழ்வின் இருண்ட பகுதிகளையே பார்த்துக் கொண்டிருந்தால் பாதிக்கப்படுவர். இத்தகைய காரியங்களைக் குறித்து சிந்தித்த பவுல், பிலிப்பியர் 4:8 ல் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். இது, இந்த உலகின் இருண்ட பகுதிகளையே பார்ப்பதால் நம்மில் படிந்து விடும் மன அழுத்தங்களை நீக்குவதற்கான வலிமை வாய்ந்த மருந்தாகும்.

நம்முடைய மனதை நிறைத்துள்ளவற்றைக் குறித்து கவனமாக முடிவுகள் எடுப்பதற்கு மிகச் சிறந்த வழி, தேவனைக் கனம் பண்ணி நம் இருதயத்தையும் அவருக்கேற்றபடி காத்துக் கொள்வதேயாகும்.

எதிர்பாராத கிருபை

எனது உயர் நிலைப்பள்ளியின் இரண்டாம் ஆண்டில் ஒரு சனிக்கிழமை அதிகாலை நேரம், அருகிலுள்ள பௌலிங் கிளப்பில் எனது வேலைக்குச் செல்ல ஆவலாக இருந்தேன். முந்தின நாள் மாலையில் அங்கு வெகு நேரம் இருந்து தளமிடப்பட்ட தரையில் சகதியைத் துடைத்து துப்புரவு செய்துகொண்டிருந்தேன். ஏனெனில், அதற்கான பணியாள் உடல் நலக்குறைவால் வரவில்லை, இதனை நான் முதலாளியிடம் சொல்ல முயற்சிக்கவில்லை. அது முதலாளிக்கு வியப்பூட்டுவதாக இருக்கட்டும்,  இதில் என்ன தவறு நடந்துவிடப் போகிறது? என எண்ணினேன்.

ஆனால், அது அநேக விளைவுகளைத் தந்தது.

நான் வாசலில் கால் மிதித்தபோது சில அங்குலங்கள் உயரத்திற்கு தண்ணீர் நிற்பதையும் அதன் மேல் பௌலிங் கட்டைகள், காகித உருளைகள், மதிப்பெண் குறியீட்டு தாள் பெட்டிகள் மிதந்து வருவதையும் கண்டேன். அப்பொழுது தான் நான் என்ன செய்துவிட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். தரையைச் சுத்தப்படுத்திய போது பெரிய தண்ணிர் வால்வு ஒன்றினை இரவு முழுவதும் திறந்து விட்டிருந்திருக்கிறேன். நம்ப முடியவில்லை! எனது முதலாளி என்னைக் கட்டி அணைத்து புன்முறுவலோடு வரவேற்று “இது உன் முயற்சிக்காக” என்றார்.

சவுல் கிறிஸ்தவர்களைத் தண்டிப்பதிலும் துன்பப்படுத்துவதிலும் மும்மூரமாயிருந்தான் (அப். 9:1-2). ஆனால், தமஸ்குவுக்கு செல்லும் வழியில் இயேசுவை முகமுகமாய் சந்தித்தபோது (வச. 3-4), விரைவில் அப்போஸ்தலனாக மாற இருக்கும் பவுலின் பாவமான செய்கைகளை நேரடியாக இயேசு தெரிவித்தார். இந்த நிகழ்வில் பார்வை இழந்த சவுல்/பவுலுக்கு அனனியா என்ற ஒரு கிறிஸ்தவன் தேவைப்பட்டது. தைரியம் மற்றும் கிருபை நிறைந்த அனனியாவின் செயலினால் பார்வையை மீண்டும் பெற்றார் (வச. 17).

பவுலும் நானும் எதிர்பாராத கிருபையைப் பெற்றோம்.

அநேகர் குழம்பிய நிலையிலுள்ளதை நன்கு அறிவார்கள். அவர்களுக்கு நீண்ட விரிவுரைகளைக் காட்டிலும் இரட்சிப்பிற்கான நம்பிக்கை தேவை. கடின முகமும், குத்தும் வார்த்தைகளும் அவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தடுத்து விடும். அனனியா அல்லது என்னுடைய முதலாளி போன்ற இயேசுவைப் பின்பற்றுபவர்களின் கிருபை நிறைந்த முகம் நாம் எதிர்பாராது சந்திக்கும் நபர்களின் வாழ்வின் மாற்றத்திற்கு வழிவகுக்கும்

ஆறுதலின் கரம்

“நோயாளி எதிர்த்து முரண்டு பிடிக்கிறார்” என்று நர்ஸின் குறிப்பு கூறியது.

ஒரு சிக்கலான திறந்த இருதய அறுவைசிகிச்சைக்குப்பின் தான் கண் விழித்தபோது, ஒரு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டிருந்தது  அவளுக்குத் தெரியாது. நான் குழம்பிபோயிருந்தேன்.. என் தொண்டைவழியாக ஒரு குழாய் உள்ளே செலுத்தப்பட்டிருந்தது; என் முழு உடம்பும் பயங்கரமாக நடுங்கிக் கொண்டிருந்தது. நான் சுவாசிக்க ஆக்ஸிஜன் செல்லும் குழாயை நான் பிடுங்கிப்போடாதபடி என் கைகளை வாரினால் கட்டியிருந்தார்கள். அது பயங்கரமும் வேதனையானதுமான ஒரு அனுபவம். அந்த நேரத்தில் என் படுக்கையின் வலதுபக்கத்திலிருந்து நர்ஸின் உதவியாள், கீழே தொங்கிக்கொண்டிருந்த என் கையைப்பிடித்துத் தாங்கினாள். எதிர்பாராத அந்த தொடுதலை வெகு மென்மையானதாக உணர்ந்தேன். நான் சற்று மன நிம்மதி அடைந்தேன். அதனால் என் உடம்பு நடுங்குவது நின்றுவிட்டது.

பிற நோயாளிகளைத் தொடும்போது அவர்கள் அமைதலடைந்த அனுபவத்தால், அந்த நர்ஸின் உதவியாள் இவனையும் ஆறுதலின் கரம் அமைதிப்படுத்துமென அறிந்திருந்தாள். தேவன் தம் பிள்ளைகள் பாடுபடும்பொழுது, அவர்களை எப்படி ஆறுதல் படுத்துகிறார் என்பதற்கு இது ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும்.

நோயாளிகளைப் பராமரிப்பவர்களுக்கு ஆறுதல்படுத்துவது என்பது ஓர் வலிமைமிக்க மறக்க இயலாத ஒரு முக்கியமான வல்லமையுள்ள ஆயுதம். பவுல் 2 கொரிந்தியர் 1:3-4ல், கர்த்தருடைய ஆயுதப்பெட்டியிலுள்ள முக்கிய ஆயுதம் இந்த ஆறுதல் என்கிறார். அதுமட்டுமல்ல, தேவன் நம்மை ஆறுதல்படுத்திய விதத்தை நினைத்து, இதே சூந்நிலையிலிருக்கும் மற்றவர்களை ஆறுதல்படுத்தி தேவனுடைய ஆறுதலைப் பரப்பச் சொல்லுகிறார். நம்மை ஆறுதல்படுத்தியது, நம்மைப் போன்ற மற்றவர்களை ஆறுதல்படுத்தவே (வச. 7). இது தேவனின் மகத்தான அன்பின் ஒரு அடையாளம். எளிய செயல்களின் மூலம் நாம் இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் ஜெபிக்க முடியாத நாள்

நவம்பர் 2015ல் எனக்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை தேவையென அறிந்தேன். நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன், அசைக்கப்பட்டேன். நான் மரணத்தைக்குறித்து சிந்திக்கலானேன். நான் சரிசெய்யவேண்டிய உறவுகளுண்டா? என் குடும்பத்திற்காக நான் ஏற்பாடு பண்ண வேண்டிய பணவிஷயங்கள் உண்டா? அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், நான் வேவை செய்வதற்கு பலமாதங்களாகலாம். சிகிச்சைக்கு முன்னரே முடிக்கக்கூடிய வேலைகளுண்டா? காத்திருக்க முடியாத சில வேலைகளுண்டு. அவற்றை தான் யாரிடம் ஒப்படைப்பது? அது ஜெபிக்கவும் செயல்படவும் வேண்டிய தருணம்.

ஆனால், இரண்டையும் என்னால் செய்ய முடியவில்லை!

என் சரீரம் பலவீனமாயிற்று; என் மனது சோர்ந்து போனது. மிகவும் எளிய வேலைகள் கூட என் பலத்திற்கு மிஞ்சினவைகளாய்த் தோன்றியது. மிகவும் ஆச்சரியமானதென்னவென்றால், நான் ஜெபிக்க முயன்றவுடனே என் எண்ணங்கள் என் நோய்க்கு நேராகவும், அதனால் ஏற்பட்ட இன்னல்களுக்கு நேராகவும் திரும்பும். ஏன் இருதயம் என்னைத் துங்கச் செய்துவிடும். அது அதிக மனமடிவை ஏற்படுத்தியது. என்னால் வேலையும் செய்ய முடியவில்லை, மனைவி பிள்ளைகளோடு கூடக் கொஞ்ச நாட்கள் இருக்க தேவனிடம் கேட்கவும் முடியவில்லை!

ஜெபிக்க முடியாமலிருந்தது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. மனிதர்களுடைய எல்லா தேவைகளையும் அறிந்த தேவன் நான் ஜெபிக்க முடியாமலிருந்ததையும் அறிந்து அதை மேற்கொள்ள இரண்டு ஆயத்தங்களைச் செய்தார். நாம் ஜெபிக்க முடியாதபோது பரிசுத்த ஆவியானவர் நமக்காக ஜெபிப்பது (ரோ. 8:26) நமக்காக மற்றவர்கள் ஜெபிப்பது (யாக். 5:16, கலா. 6:2).

பரிசுத்த ஆவியானவர் பிதாவிடம் என் பெலவீனத்தைக்குறித்து சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பது பெரிய ஆறுதல். என் குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்காக ஜெபிக்கிறார்கள் என்பதைக் கேட்பது எத்தனை பெரிய ஈவு! அவர்கள் என்னிடம் என்னத்திற்காக ஜெபிக்க வேண்டுமென்று கேட்டதற்கு நான் கொடுத்த பதிலையும் தேவன் கேட்டார் என்பது எத்தனை ஆச்சரியம்.

நமக்கொரு நிச்சயமில்லாத நேரத்தில் நான் ஜெபம் பண்ணமுடியாவிட்டாலும் என் இருதயத்தின் ஏக்கங்களைத் தேவன் கேட்கிறார் என்பது எத்தகைய பரிசு!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.