ஒரு இளம் ஜப்பானியப் பெண் தேவையில்லாத பொருட்களை அகற்றி ஒழுங்குபடுத்துவதைக் குறித்து எழுதிய புத்தகம் உலகமெங்கும் 20 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் மேரி கோன்டோவின் (Marie Kondo) மையக்கருத்து என்னவெனில், தங்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கும் பொருட்களை தங்கள் அலமாரிகளிலிருந்தும், வீடுகளிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்பதே. “ஒவ்வொரு பொருளையும் எடுத்து, ‘இது எனக்கு சந்தோஷத்தை உண்டாக்குகிறதா?’ என உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள். பதில் ஆமாம் என்றால் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அதை யாருக்கேனும் கொடுத்து விடுங்கள்.

பிலிப்பு பட்டணத்து கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுடனான தங்களுடைய உறவிலே சந்தோஷத்தை நாடித் தேடும்படியாய் அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்,” (பிலி. 4:4) என்று கூறுகிறார். கவலைகளினால் நிறைந்த வாழ்க்கை வாழாமல், தேவ சமாதானம் நம்முடைய மனதையும், இருதயத்தையும் காக்க, எல்லாவற்றையும் குறித்து ஜெபம் பண்ணும்படி உற்சாகப்படுத்தினார் (வச. 6-7).

நம்முடைய அன்றாட வாழ்வின் வேலைகள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும் மகிழ்ச்சி கரமானதாக இருப்பதில்லை. அப்படியிருக்க ‘இது தேவனுடைய இருதயத்திலும் நம்முடைய இருதயத்திலும் எப்படி சந்தோஷத்தை உண்டாக்க முடியும்?’ என நாம் கேட்கலாம். எதற்காக நாம் ஒரு வேலையை செய்கிறோம் என்கிற சரியான வெளிப்பாடு, அதைக்குறித்ததான ஒரு மனமாற்றத்தை நம்மில் உண்டாக்கும்.

கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள் (பிலி. 4:8).

 பவுலுடைய இறுதி வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்கு உணவாகவும், சந்தோஷத்திற்கு வழிமுறையாகவும் உள்ளது.