பெட்டிபடுக்கையின்றி, அத்தியாவசிய பொருட்களின்றி, மாற்றுத்துணியின்றி, பணம் இன்றி, கிரெடிட்கார்ட் இன்றி ஒரு பயணத்தை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? சொல்லப்போனால் இது ஞானமற்றதும் கூட.

ஆனால், தன்னுடைய 12 சீஷர்களையும் நற்செய்தி அறிவித்து சுகமாக்கும்படி கட்டளையிட்டு, முதல்முறை அவர்களை ஊழியத்திற்கு அனுப்பினபொழுது இதைத்தான் இயேசு கூறினார். “வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்; பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும்” என கட்டளையிட்டார் (மாற். 6:8-9).

இருப்பினும் சில காலம் கழித்து, தான் சென்றபின் அவர்கள் செய்யவேண்டிய பணிக்காக அவர்களை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தபொழுது, தன்னுடைய சீஷர்களை நோக்கி, “இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக்
கொள்ளக்கடவன்” என இயேசு கூறினார் (லூக். 22:36).

அப்படியென்றால் இதன் அர்த்தம்தான் என்ன? அதாவது, நம்முடைய தேவைகள் அனைத்தையும் தேவனே சந்திப்பார் என்கிற நம்பிக்கை ஏற்படுத்தவே.

தன் சீஷர்களுடைய முதலாவது ஊழியப் பயணத்தை குறிப்பிட்டு, “நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா?” என்று இயேசு தன் சீஷர்களை நோக்கி கேள்வி எழுப்பிய பொழுது, “ஒன்றும் குறைவாயிருந்ததில்லை” என பதிலளித்தார்கள் (வச. 35). தேவன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்துமுடிக்க வேண்டிய அனைத்தும் அவர்களிடத்தில் இருந்தது. அதாவது அவருடைய ஊழியத்தை செய்து முடிக்க தேவையான வல்லமையையும் அதிகாரத்தையும் அவர்களுக்கு கொடுத்தார் (மாற். 6:7).

தேவன் நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் என விசுவாசிக்கிறோமா? அதுமட்டுமின்றி திட்டமிட்டு நம்முடைய கடமைகளைச் சரியாக செய்கிறோமா? அவருடைய பணியை செய்ய விசுவாசம் கொள்வோமாக.