உட்டாவில் ஆர்ச்சஸ் தேசிய பூங்கா என்று அழைக்கப்படுகிற பகுதியில் கண்காணிப்பாளராக இருந்த எட்வர்ட் ஆபி என்பவர் கோடைக் காலத்தில் அப்பகுதியில் அவர் அனுபவித்த அனுபவங்களை பாலைவனத் தனிமை என்ற புத்தகமாக எழுதியுள்ளார். ஆபியின் உயர்ந்த எழுத்து நடைக்காகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்மேற்கு பகுதியைப்பற்றி அவர் தெளிவாக எழுதியுள்ள விவரங்களுக்காகவும் அந்தப் புத்தகம் வாசிப்பதற்கு தகுதியானது.

ஆனால், அனைத்து திறமைகள் அவரிடம் இருந்தாலும் ஆபி ஒரு நாஸ்திகன். அதனால் அவர் அப்பகுதியில் வெளிப்படையாகக் காணப்பட்ட அழகை மட்டும்தான் அவரால் காணமுடிந்தது. எவ்வளவு வருத்தமான காரியம்! அவர் கண்ட வெளிப்படையான அழகை மட்டும் வாழ்நாள் முழுவதும் புகழ்ந்து விட்டு அவை எல்லாவற்றிற்கும் மேலான காரியத்தை தவற விட்டுவிட்டான்.

பொதுவாக ஆதிகால மனிதர்களின் சிருஷ்டிப்பைப்பற்றிய கோட்பாடுகள், புராணக்கதைகள், கற்பனைக்கதைகள், பாடல் இவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆனால் சிருஷ்டிப்பைப் பற்றிய இஸ்ரவேல் மக்களின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. நாம் சிறு குழந்தைகளைப்போல மகிழ்ச்சியடையவும், சந்தோஷப்படவும், அழகான சிருஷ்டிப்பை சிருஷ்டித்த தேவனைப்பற்றி அது கூறுகிறது. தேவன், இப்பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க எண்ணினார். வார்த்தையினால் அதை சிருஷ்டித்தார். பின்பு அது “அழகாக” இருக்கிறதென்று அவர் கூறினார். (எபிரேய மொழியில் நல்லது என்ற சொல் அழகு என்பதையும் குறிக்கிறது). பின்பு தேவன் பரதீஸை சிருஷ்டித்து, மனிதராகிய நம்மையும் உருவாக்கி, ஏதேன் தோட்டத்தில் வைத்து மகிழ்ச்சியுடன் “அனுபவியுங்கள்” என்று கூறினார்!

சிலர், அவர்களைச் சுற்றியுள்ள சிருஷ்டிகர் சிருஷ்டித்த சிருஷ்டிகளின் அழகை ரசித்து மகிழ்கிறார்கள். ஆனால், “அவரை தேவன் என்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்தரியாமலும் இருந்து தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்கள் இருதயம் இருளடைந்தது” (ரோம. 1:21).